கிளி நொச்சி மாவட்டத்திலுள்ள பளைப்பிரதேசம் அதிகளவு மிதிவெடிகள், கண்ணிவெடிகள் காணப்படும் பிரதேசமாகவுள்ளது. இவ்வெடிப்பொருட்கள் முற்றாக இன்னும் அகற்றப்படாத காரணத்தினால் பளைப் பிரதேசத்தின் பல கிராமங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியாத நிலையும் எற்பட்டுள்ளது.
பளைப்பிரதேசத்திலுள்ள அரசர்கேணி, கச்சாய்வெளி, அல்லிப்பளை, கிளாலி, முகமாலை, வேம்பொடுகெணி, இத்தாவில், முதலான பகுதிகளிலேயே அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதிகள் பல கடந்தகால போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கும் சிறிலங்காப் படையினரின் கட்டப்பாட்டுப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக காணப்பட்டமையும் இதற்குக் காரணமாகும். தற்போதும் இப்குதிகளில் படையினர் வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.