23

23

புதியதொரு நாட்டை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியினதும் அரசினதும் நோக்கம் – அமைச்சர் டளஸ்

நாட்டினதும் மக்களினதும் தேவைக் கேற்ப புதியதொரு நாட்டை கட்டியெழு ப்புவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

கடந்த காலத்தையும் கடந்த காலத்தில் நடைபெற்ற தவறுகளையும் பற்றி பேசிக் காலத்தை கழிப்பதைவிட சிறந்ததொரு எதிர்காலத்திற்காக திட்டமிடுவது காலத் தின் கட்டாயத் தேவையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் www.sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. அலரி மாளிகையிலிருந்தவாறே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்மதி ஊடாக இணையத் தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு மேலும் உரையாற்றுகையில் :- வீணான செலவுகளை தவிர்த்து இந்த இணையத் தளத்தின் ஊடாக எமது சகல பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளோம். எங்களது சகலவிதமான புதிய திட்டங்களையும் எமது ஆதரவாளர்களுக்கு இதன் மூலம் தெளிவுபடுத்தவுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகள், பொருளாதார அபிவிருத்தி திட்டம், அரசியல் மேம்பாடு என்ற பல வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தெரிவித்தார்.

மடகாஸ்கர் அதிபராக அண்ட்ரி ரஜோலீன் பதவியேற்பு

andry.jpgமட காஸ்கர் தலைநகரின் முன்னாள் மேயரான அண்ட்ரி ரஜோலீன், நாட்டின் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.  நாட்டின் முக்கிய விளையாட்டு மைதானத்தில் நடந்த பதவியேற்பு வைபவத்தில், தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஜோலீன் பதவியேற்றார்.

வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொள்வதை புறக்கணித்திருக்கிறார்கள். அதிபர் மார்க் ரவலொமனானிடம் இருந்து நான்கு நாட்களுக்கு முன் ரஜொலீன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்ததை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. இது ஒரு சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு என்று அவை கூறுகின்றன.

மடகாஸ்கரின் உறுப்புரிமையை ஆப்பிரிக்க ஒன்றியம் இடைநிறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய உதவிப் பொருட்கள் மடகாஸ்கருக்குச் செல்வதை அமெரிக்காவும் நோர்வேயும் நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் தேர்தல்; இன்று முதல் 30 வரை வேட்பு மனு

india_.jpgஇந்தியா வின் 17 மாநிலங்களிலுள்ள 124 பாராளுமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடைபெறவிருக்கும் முதல் கட்ட தேர்தலுக்கு இன்று திங்கட் கிழமை முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவிருக்கின்றது.

வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் தினமாக மார்ச் 31ம் திகதியும் வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் தினமாக ஏப்ரல் 2ம் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 16ம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். இதன் நிமித்தம் வேட்பு மனுக்களை தயாரிப்பதிலும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளிடையே இழுபறி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமைகளுக்கு அடுத்துவரும் சில தினங்களுக்குள் தீர்வு காணப்படலாமென அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து கட்டமாகத் தேர்தல் நடாத்தப்படவிருக்கிறது.

முதற்கட்டத் தேர்தல் ஆந்திரமாநிலத்தில் 22 தொகுதிகளிலும், கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16 தொகுதிகளிலும் மராட்டிய மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், சதீஷ்கார் மாநிலத்தில் 11 தொகுதிகளிலும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் 10 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 06 தொகுதிகளிலும், அஸாம் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், அருணாசலம் பிரதேச மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், மேகாஸா மாநிலத்தில் 2 தொகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், லட்சத்தீவு மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மிசோரம் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், நாகலாந்து மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், மணிப்பூர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் நடைபெற விருக்கிறது.

இதேவேளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்க ளிலுள்ள 40 தொகுதிகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி நடைபெறவிருக்கிறது.  இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் ஏப்ரல் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட விருக்கிறது.

தெற்கில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் பொதுமக்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன

l-yaappa-abayawardana-01.jpgபுலிகள் தமது வசமிருக்கும் சிறிய பிரதேசத்தையும் எதிர்வரும் நாட்களில் இழக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்கள் தெற்கில் தாக்குதலை நடத்தலாமென ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார். இந் நிலையில் உயிர் இழப்பையும் சொத்துகள் சேதமடைவதையும் தவிர்க்கும் பொருட்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் குறித்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

தகவல் திணைக்களத்தில் சனிக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போது புலிகளிடமுள்ள சிறியளவு பகுதியையும் எதிர்வரும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விரக்தியடைந்த புலிகள் தெற்கில் அழிவையேற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தலாம். எனவே பஸ்கள் மற்றும் பொது இடங்களில் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் காணப்படின் உடனடியாக பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் அறிவிப்பதுடன் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.