நாட்டினதும் மக்களினதும் தேவைக் கேற்ப புதியதொரு நாட்டை கட்டியெழு ப்புவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்தார்.
கடந்த காலத்தையும் கடந்த காலத்தில் நடைபெற்ற தவறுகளையும் பற்றி பேசிக் காலத்தை கழிப்பதைவிட சிறந்ததொரு எதிர்காலத்திற்காக திட்டமிடுவது காலத் தின் கட்டாயத் தேவையாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் www.sandanaya.lk என்ற தேர்தல் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கும் பிரதான வைபவம் கடந்த வெள்ளிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்றது. அலரி மாளிகையிலிருந்தவாறே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்மதி ஊடாக இணையத் தளத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும இங்கு மேலும் உரையாற்றுகையில் :- வீணான செலவுகளை தவிர்த்து இந்த இணையத் தளத்தின் ஊடாக எமது சகல பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளோம். எங்களது சகலவிதமான புதிய திட்டங்களையும் எமது ஆதரவாளர்களுக்கு இதன் மூலம் தெளிவுபடுத்தவுள்ளோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக் கைகள், பொருளாதார அபிவிருத்தி திட்டம், அரசியல் மேம்பாடு என்ற பல வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கம் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்றும் தெரிவித்தார்.