March

March

ஒரு வரலாற்று ஆவணதத்தின் மீள் வெளியீடு : மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்

Wanni_War இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை பாரிய உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. இலங்கையை 400 ஆண்டுகள் தமது காலனித்துவ பிடியின் கீழ் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளினால் உருவாக்கப்பட்ட இப்பிரச்சினை சிங்கள – தமிழ் முதலாளித்துவ அரசியல் சக்திகளினால் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி இனவாத பாதையில் இழுத்து செல்லப்பட்டதால் இன்று நாடு முழுவதுமே அதல பாதாளத்தில் விழுந்துள்ளது.

தமிழ் மக்கள் தம்மீதான தேசிய ஒடுக்குமுறையை ஏகாதிபத்திய எதிர்பபு தேசிய -ஜனநாயக போராட்டமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழ் முதலாளித்தவ இனவாத சக்திகளின் தவறான வழிகாட்டல்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இன்று உலகின் மிகமோசமான இனவாத பாசிச இயக்கமான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிடியில் சிக்கி, இருந்த உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இன்று தமிழ் மக்களது போராட்டம் சிங்கள பேரினவாத தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரானதாக மட்டுமின்றி, தமிழ் இனவாத பாசிசத்துக்கு எதிரானதாகவும் பரிணமித்து நிற்கின்றது. மக்களுக்கு எதிரான, இந்த இரண்டு போக்குகளையும் சர்வதேச ஏகாதிபத்தியம் உருவாக்கி ஆதரித்து நிற்பதால், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தவிர்க்க முடியாதபடி தமிழ் மக்களின் போராட்ட அடிப்படையாக இருக்கின்றது.

மறுபக்கத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி பெற்ற தேசிய சுதந்திரத்தை இறுதிவரை முன்னெடுத்தச் சென்று, நாட்டில் உண்மையான மக்கள் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கு பதிலாக, தமது நீடித்த அதிகார இருப்புக்கு பேரினவாத அரசியலை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய சிங்கள இனவாத முதலாளித்துவ சக்திகளின் திட்டங்களுக்கு பலியானதன் மூலம், நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் இன்று தேவையற்ற இனவாத யுத்தமொன்றின் சுமைகளால் அழுத்தப்பட்டு அவல வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்தாலும் உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், ஒரு சரியான நிலைப்பாட்டை பின்பற்றி, நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த மக்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய விடுதலை போராட்டத்தில் வழிநடாத்தி, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை சிருஷ்டித்திருக்க வேண்டிய இடதுசாரி கட்சிகள் (கம்யூனிஸ்ட் – சமசமாஜ கட்சிகள்), 1960க்கு பின்னர் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திலும், அதன் உடன்பிறப்பான இனவாதத்திலும் மூழ்கி, தேசிய இனப்பிரச்சினையை முதலாளித்துவ சக்திகளிடம் முற்று முழுதாக கையளித்து, பெரும் வரலாற்று தவறை இழைத்துள்ளனர்.

1964ல் சர்வதேச அரங்கில் நிகிட்டா குருஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபுவாத பாதையில் பயணிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் அதை பின்தொடரத் தொடங்கியது. அதன் காரணமாக திரிபுவாத, பாராளுமனற் வாத கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உண்மையான கம்யூனிஸ்ட்டுகள், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினராயினும், அக்கட்சியின் தலைமையும் சரியான கொள்கைகளை பின்பற்றத் தவறிவிட்டது. அக்கட்சி தலைமை பின்பற்றிய வரட்டுத்தனமான, இடது சந்தர்ப்பவாத போக்கு காரணமாக, தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சரியான நிலைபப்பாட்டை எடுகக் முடியாமல் போய்விட்டது. சொல்லில் புரட்சியும், நடைமுறையில் தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத வேலைமுறையையும் கொண்டிருந்த அக்கட்சியின் தலைமை, தேசிய இனப்பிரச்சினையை கட்சி கையில் எடுப்பது, கட்சியை இனவாதப்பாதையில் கொண்டு போய்விடும் என்ற மார்கசிச – லெனினிச விரோத வாதத்தை முன்வைத்தின் மூலம் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக போராட்டத்துக்கான தலைமையை தமிழ் பிற்போக்கு சக்திகளிடம் கைகழுவிவிட்டது.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றிய இந்த நவநவீன திரிபுவாத பாதையை பெரும்பாலான கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கீழ்மட்ட உறுப்பினர்களும் ஏற்கவில்லை. அதனால் அவர்களால் 1972ல் மார்கசிச – லெனினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சிக்குள்ளும் இழுபறி நிலையே தோன்றியது.

கட்சி தேசிய இனப்பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி வேலை செய்வதின் அவசியத்தை நிராகரித்த ஒரு பிரிவினர் தேசிய முதலாளித்துவத்தின் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்) பின்னால் இழுபட்டு செல்லும் போக்கை பின்பற்ற ஆரம்பித்தனர். அவர்களை வெளியேற்றி கட்சியை தூய்மைப்படுத்திய பின்னர், இரு நாட்கள் விசேட தேசிய மாநாடொன்றை கூட்டி, தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான சரியான கொள்கையை கட்சி வகுத்தது. இருந்தும் நாட்டில் உருவாகி வந்த தீவிரமான இனவாத சூழல் காரணமாகவும், தமிழ் பகுதிகளில் பாசிச சக்திகள் தலைதூக்கியதின் காரணமாகவும், கட்சி சில ஆண்டுகளில் செயலற்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. (இன்று தனிநபர்களாக இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் தற்பொழுது கட்சியை மீண்டும் புனரமைப்பதற்கான முயற்சிகளில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.) இருப்பினும் அக்கட்சி, தமது தாய்வழி கட்சிகள் இரண்டும் பின்பற்றிய வலதுசாரி – இடதுசாரி சந்தர்ப்பவாத பாதைகளை சீர்செய்வதில், கணிசமான அளவுக்கு சித்தாந்த – அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

அதில் முக்கியமானது, தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால, சரியான கொள்கையை உயர்த்தி பிடித்ததாகும். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களுக்கு சுயாட்சி அமைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிகச்சரியான, ஆரம்பகால கொள்கையை மார்க்கிச – லெனினிச கட்சி மீண்டும் உறுதி செய்ததுடன், அதை பல்வேறு தமிழ் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து அடைவதற்காக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற வெகுஜன போராட்ட அமைப்பையும் தோற்றுவித்தது.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் புதிய தலைமை, பின்னர் உருவாகி வந்த ஆயுதப்போராட்ட சூழலில், தனது பெயரையும் (தமிழீழ தேசிய விடுதலை முன்னணி – NLFT), கொள்கைகளையும், போராட்ட வழிமுறைகளையும் மாற்றியது. எனினும், தமிழ் தேசியப் போராட்டத்தின் கடந்த 25 ஆண்டுகால அனுபவங்கள், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகால பெயர், கொள்கைகள், போராட்ட வழி முறைகள் என்பனவற்றின் பிசகற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவுற நிரூபித்துள்ளன. அது மாத்திரமின்றி இன்றைய சூழலில், அத்தகைய ஒரு பரந்தபட்ட வெகுஜன போராட்ட ஸ்தாபனம் ஒன்று, தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

எனவே இன்றைய சூழ்நிலையில், வரலாற்றை மீள் மதிப்பீடு செய்வதற்கு உதவியாக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கு ஒர் உதாரணமாக, 1975ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேச குழு வெளியிட்ட மிக முக்கியமான வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அறிக்கையை வெளியீட்டில் இணைத்து உள்யோம். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ உருவாகக்ப்பட்டது.

தேசிய இனபிரச்சினை உருவெடுத்து 25 அண்டுகளைக் கடந்து, தமிழ் மக்கள் பல பெறுமதிமிக்க அனுபவங்களை பெற்றுவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் சில சிங்கள இடதுசாரிகள் சிங்களப் பேரினவாத தேசிய இறைமையின் பெயராலும், தமிழ் இடதுசாரிகள் சிலர் தமிழ் இனவாத பாசிசத்தை தமிழ் தேசிய விடுதலையின் பெயராலும் நியாயப்படுத்தி நிற்கும் ஒரு சூழலில் இந்த அறிக்கை 33 ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் மிகச் சரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுடன், தீர்க்கதரிசன பார்வையையும் கொண்டுள்ளதையும் காணமுடியும்.

அத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீர்த்தி வாயந்த வட்டுக்கோட்டை மாநாட்டு தமிழழீ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (அது நடைபெற்றது 1976ல்), இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தது (அவர் ஆட்சிக்கு வந்தது 1977ல்), நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது (அது 1978ல் அறிமுகப்படுத்தப்பட்டது), 1983ன் இனவன்செயலும், அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பமாகியது, என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்த அறிக்கையை தயாரிப்பதில், மார்க்சிச – லெனினிச கட்சியின் அன்றைய முக்கிய தலைவர்களான, காலஞ்சென்ற தோழர்கள் மு.கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் முக்கிய பங்கு வகித்ததுடன், அவர்கள் உட்பட கட்சியின் வட பிரதேச குழுவின் 15 உறுப்பினர்களினதும், ஏகமனதான ஆதரவுடன் அது வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வறிக்கையினை அன்றைய தினசரி பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்ததோடு, இவ்வறிக்கை கட்சியினால் துண்டு பிரசுரமாக அச்சிடப்பட்டு நாடு முழுவதும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை மூல நகல் இவ்வெளியீட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆங்கில மொழியாக்கம், கனடிய – சோவியத் நட்புறவு கவுன்சில், கனடாவில் வெளியிடும் மாத சஞ்சிகையான NORTH STAR COMPASS, தழிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிச – லெனினிச ஆய்வு மையம்
இலங்கை
04 – 03 – 2009

._._._._._._.

தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

குடியரசு தினத்தை பகிஷ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா, என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்பனவும் தற்போது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ்மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாக பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம், இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பை சம்பாதித்ததுமல்லாமல் தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாக பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு அரசியல் சுயலாபம் தேடும் பூர்ஜூவாக் கட்சிகள், சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சர்தர்ப்ப வாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பது மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு, சைப்பிரஸில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை உணர்ந்ததினால் பொலும் இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகு முறையையும், கொள்கையையும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் மூலம் முன் வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்துவிட்டார்கள். இது இந்நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.

இன்று பண்டாரநாயக்கா கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்படுத்த தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெருவாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விஷயமல்ல.

எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இன பாதுகாப்புக்கான சரத்துக்கள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல பதிவுப் பிரஜைகளுக்கும், இலங்கை பிரஜைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இனரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்கள பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்தபட்சம் பண்டாரநாயக்காவின் கொள்கைகளையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒரு புறத்தில் நாசம் செய்கிறது. மறுபுறத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காமல் இருப்பதன் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிரக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும். போராட வேண்டும். இதைத்தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் கூட்டணித் தலைமைக்கும் அரசாங்கத்தினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் தமிழர் விரோதப் போக்குக்கும், எதிராக ஐக்கியப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ வேறெந்த ஏகாதிபத்தியத்தையோ அல்லது அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வு காண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலைபெற முடியும். தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான பரந்த அணி ஒன்றே தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும். பெரும் முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால், தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காடட் முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் திர்க்கமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.

எமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்)
வட பிரதேசக்கமிட்டி
19–5-75
நாவலன் பதிப்பகம் நல்லூர் யாழ்ப்பாணம்

ஓஸ்கார் என்பது ஓர் Fashion Show. சில சமயங்களில் திறமைகள் அங்கீகரிக்கப்படும். பல சமயங்களில் நிராகரிக்கப்படும். – Oscar. DOG and Slumdog Millionaire : ரதன்

Slumdog_Millionaire_Childrenஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப், ஒஸ்கார் விருதை பெற்றுக் கொடுத்த படமான Slumdog Millionaire – “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம் இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப்படம் ஒஸ்காரில் எட்டு விருதுகைள பெற்றுக்கொண்டது. ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் பலரது பாராட்டைப் பெற்ற படம். அத்துடன் சிறந்த மக்கள் தெரிவு விருதையும் பெற்றுக் கொண்ட படம்.

இது வரையில் ஒஸ்காருக்கு இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு படத்துக்காக மதர் இன்டியா, சலாம் பொம்பாய், லகான் ஆகிய படங்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆனால் விருது கிடைக்கவில்லை. சத்யஜித்ரேக்கு சிறப்பு விருது கிடைக்கப்பெற்றது. காந்தி படத்தின் costume designer Bhanu athaiya க்கு ஒஸ்கார் விருது கிடைத்தது.

Vanitha_Rangaraju_Ramananஇதைத் தவிர திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டு கலிபோர்னியாவில் வாழ்ந்து வந்த வனிதா ரங்கராசு-ரமணனுக்கு 2002ல் Shrek படத்துக்கு technical work in the animation movie கிடைத்தது. இந்தியாவால் கமலின் ஆறு படங்கள் ஒஸ்காருக்கு அனுப்பப்பட்டன. ஒரு படமும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகவில்லை. “நாயகன், தேவர் மகன், கே ராம், இந்தியன், குருதிப் புனல். சுவாதி முக்தியம்” ஆகிய படங்களே அவை.

ஓஸ்காரில் எட்டு விருதுகளைப் பெற்றுக் கொண்ட “குப்பத்து நாய் லட்சாதிபதி”. இதில் இசைக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கும், பாடல்களுக்காக இரு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்றிற்கு ஒஸகார் கிடைத்தது. மற்றையதை (ஓ..சாயா…சாயா…) பாடியவர் மாயா- M.I.A எனப்படும் மாதங்கி அருட்பிரகாசம். இவர் லண்டனில் பிறந்து, இலங்கை, இந்தியாவில் சிறிது காலம் வாழ்ந்து இப்பொழுது லண்டனில் வாழ்கின்றார். இவரது தந்தை “அருளர்” என அழைக்கப்படும் ஈரோஸ் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவர். M.I.A – Missing in Action or Missing in Acton. 

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானோர் இந்தியாவில் தான் வாழ்கின்றனர். மும்பையில் மாத்திரம் சுமார் 2.6 மில்லியன் சிறுவர்கள் சேரியில் வாழ்கின்றனர். இதில் 400,000 சிறுவர்கள் பாலியல் தொழில் புரிகின்றனர். அங்கு வாழும் ஒருவனைப் பற்றிய படமே இது.

விகாஸ் சுவாரப்பின் கேள்வியும், பதிலும் என்ற நாவலை மையமாகக் கொண்டு சிமன் பியுபோய் திரைக்கதை அமைத்துள்ளார். எ.ஆர். ரகுமானின் இசையமைத்துள்ளார். இயக்கம் டான் பொயில் Danny Boyle (இங்கிலாந்து). 

மும்பை தெரு வீதிகளில் வாழும் 18 வயது ஜமால் மாலிக் Who Wants To Be A Millionaire? என்ற லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறுகின்றார். இன்னும் ஒரேயொரு கேள்வி, பதில் கூறினால் 20 மில்லியன் ரூபா பரிசு. அன்றைய நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொள்கின்றார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர்). நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தை விட்டு வெளியே காலடிவைத்த ஜமால் பொலிஸால் கைது செய்யப்படுகின்றான். மோசடி செய்து பதில்கள் கூறியதாக இன்ஸ்பெக்டர் காரணம் கூறுகின்றார். அடி, உதை எப்படி பதில்களை பெற்றுக் கொண்டாய்? கேள்விகளுக்கான பதில்களை எப்படி ஜமால் தெரிந்து கொண்டார் என்பதுடன் விரிகின்றது. வாழ்வின் அவலங்களை, வறுமையின் நிறங்களையும், அவனது காதலின் தூய அன்பையும் கூறுகின்றான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவன் அளித்த பதில்கள் எங்கிருந்து பெற்றுள்ளான். பார்வையாளர்களுக்கு வெளிச்சமாகின்றது. மறு நாள் இறுதிக் கேள்விக்கான பதிலை நோக்கி இன்ஸ்பெக்டரும் அன்றைய இரவும் நகருகின்றது.

கேள்விகளுக்கான பதிலை எப்படி பெற்றுக் கொண்டான்?

இந்து, முஸ்லீம் கலவரத்தில் தாய் இறந்து விட, ஊரைவிட்டு தனது அண்ணன் சலீமுடன் ஓடி வருகின்றான் ஜமால். வந்து சேர்ந்த இடம் மிகவும் மோசமான பம்பாயின் தாதா உலகத்தில். சேரி வாழ்வு. இவர்களுடன் அநாதரவற்று நின்ற லத்திக்காவையும் சேர்த்துக் கொள்கின்றான் ஜமால். சிறுவர்களுக்கு வாழ்வு தருவதாக கூறி அழைத்துச் சென்ற கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். நன்றாக பாட்டு பாடுபவர்களது கண்களை குருடாக்கி, பணம் பிச்சை எடுக்க அனுப்புகின்றது இந்தக் கும்பல். ஜமாலும் நன்றாக பாடுவான். இந்தக் கும்பலின் நம்பிக்கையை சம்பாதிக்கும் சலீமிடமே, ஜமாலின் கண்களை கொதி எண்ணெயை ஊத்தி குருடாக்கும்படி கூறுகின்றனர். அமிலத்தை எடுத்து அருகில் நின்ற கும்பல் உறுப்பினக்கு ஊத்திவிட்டு தப்பி ஓடுகின்றனர்.

காலங்கள் கரைகின்றன. ஜமால் உணவு விடுதியில் வேலை பார்க்கின்றான். சலீம் தாதா குழுவில் உறுப்பினராகி விடுகின்றான். ஜமால் லத்திகாவை தேடித்திரிகின்றான். ஒருவாறு லத்திகாவை கண்டுபிடித்து சலீமின் உதவியுடன் மீட்டுக் கொள்கின்றான். சலீம் துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்திவிட்டு லத்திகாவை தனதாக்கிக் கொள்கின்றான். பின்னர் லத்திகா, சலீமின் தாதா குழு தலைவரின் சொத்தாக்கப்படுகின்றாள். ஜமால் தொடர்ந்து லத்திகாவை தேடுகின்றான். அவள் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று தன்னுடன் வரும்படி கூறுகின்றான். இதற்கிடையில் இப் போட்டியில் கலந்து கொள்கின்றான். போலிஸ், அடி உதையின் பின்னர், மறு நாள் காலை ஜமால் பற்றிய விபரங்கள், பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அலங்கரிக்கின்றன. சலீம் லத்திகாவிடம், தனது முதலாளியின் கார் திறப்பையும் தனது கைத் தொலைபேசியையும் கொடுத்து தப்பி ஓடி விடுமாறு கூறுகின்றான். தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறுகின்றான்.

இறுதிக் கேள்வி இவர்கள் பள்ளியில் படித்த Three Musketeers கதையை மையமாகக் கொண்டது. இதற்கான விடைக்கு உதவி பெற தனது அண்ணன் சலீமின் கைத்தொலைபேசிக்கு அழைக்க்கின்றான். நீண்ட நேரத்தின் பின்னர் லத்திகா குரல் கொடுக்கின்றாள். அப்பாவியாக விடை தெரியாது எனக் கூறுகின்றாள். சலீம் தனது முதலாளியை சுட்டுக் கொல்கின்றான். சலீமும் இறக்கின்றான். இறுதிக் கேள்விக்கான விடையை அதிர்ஸ்டமாக “ஏ” எனக் கூறுகின்றான். அதுவே சரியான விடை. 20 மில்லியன் ரூபாய்கள் பரிசாக பெற்றுக் கொள்கின்றான். ஜமாலும், லத்திகாவும் இணைகின்றனர்.

படத்தில் வரும் சிறுவர்களுக்கு இந் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இந் நிகழ்ச்சியையோ, இப் படத்தையோ பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. பாத்திரங்கள், பார்வையாளர்கள் என அந்நியப்பட்ட சூழ் நிலையில்தான் இது உள்ளது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் தமது மனச்சாட்சி மீதான விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. இது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜமால் இறுதிக் கேள்வி பதில் கூறி 20 மில்லியன் ரூபாயை பெறுவாரா? என்ற கேள்வியுடனேயே படம் தொடங்குகின்றது. மத்திய மேல் தட்டு வர்க்க பார்வையாளர்கள் சேரி சிறுவனுக்கு 20 மில்லியனா? என்ற கேள்வியுடனே படத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள். படம் பார்வையாளர்களை சேரி வாழ் மக்களது வாழ்வியலில் இருந்து, தொலைக் காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் அந்நியப்படுத்துகின்றது. ஜமாலை ஓர் கதாநாயக, காவியனாகவே காட்டுகின்றார்கள். இப் படத்தைப் பார்க்கும் பொழுது, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதிக் காட்சி மேலும் இதற்கு சான்று.

உலகமயமாக்கலின் கட்டாயம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை எதுவுமற்றவர்களாக காட்டுவதுடன், இங்கு சமூகரீதியான ஒடுக்கு முறைகள் உள்ளன என்பதனை வெளிப்படுத்தி இந்திய பார்வையாளர்களையும், அவர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் தகர்ப்பது மிக முக்கியம். மேற்குலகு பற்றிய போலி மதீப்பீட்டினை இவர்கள் மத்தியில் வளர்ப்பது, மேற்கின் வியத்தகு வியாபார தாபனங்களின் லாபத்தை அதிகரிக்கும். இன்றும் காலனித்துவ ஆட்சி மீதும், வெள்ளையர் மீதும் மரியாதையுடன் உள்ளனர் இந்த மூன்றாம் உலக நாட்டு மக்கள்.

காதல் பற்றிய மத்தியதர வர்க்க கோட்பாடுகளில் இருந்து மாறி, கற்பு போன்ற கற்பிதங்களை மீறி ஜமாலின் தூயகாதல் வெளிப்படுகின்றது. இது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மத்தியேலே தான் சாத்தியம்.

தாதாக்கள் அவர்களது மனோ நிலைகள், கதாநாயகத் தன்மைகள் சலீமிடம் சென்றடைகின்றன. அதன் வெளிப்பாடு தம்பியின் காதலியையே துப்பாக்கி முனையில் தனதாக்கிக் கொள்கின்றான். இது “துப்பாக்கியிலான” அதிகாரத்து வெளிப்பாடு. இது எமக்கு புதிதல்ல.

சலீம் பாத்திரத்தின் படிப்படியான வளர்ச்சி இயல்பாகவுள்ளது. ஜமாலின் வளர்ச்சி இயல்பற்றுள்ளது. தாஜ்மகால் உல்லாசப் பயணிகளிடம் ஆங்கிலம் பேசுவது போன்றவை நம்பமுடியாமல் உள்ளது. அதுவும் ஒரு சிறுவனை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் உல்லாசப் பயணி, “ இது ஓர் 5 நட்சத்திர கோட்டல், இராணி விபத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்” போன்றவற்றை நம்பும் உல்லாசப்பயணி. இதில் யார் முட்டாள், பார்வையாளர்களா? பாத்திரங்களா?

படத்தில் வரும் ஜமாலும், சலீமும் முஸ்லீம்கள். ஏன் இவர்களை இந்துக்களாக காட்டவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. மூலக் கதையில் இப் பாத்திரத்தின் பெயர் “ராம் மொகமட் தோமஸ்” என உள்ளது. நாவலாசிரியர் இப் பாத்திரம் ஓர் இந்தியன் எனக் காட்டுவதற்காகவே அவ்வாறான பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார்.  படத்திற்கான வியாபாரமும், மேற்குலகு முஸ்லீம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு மனோரீதியான வடிகாலாக இது அமையும்.

அறிவிப்பாளர் இறுதிவரை ஜமாலை போட்டியில் இருந்து விலத்தி விட தீவிரம் காட்டுகின்றார். மலசல கூடத்தில் கண்ணாடியில் “B”  என எழுதி விட்டுச் செல்கின்றார். ஜமால் அதற்கெதிரான விடையை D  எனக் கூறுகின்றான். அறிவிப்பாளர் ஜமாலை அடிக்கடி “சாய் வாலா” எனக் கூறி கேலி செய்கின்றார். ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் பிண்ணனியில் சிரிப்பொலி கேட்கின்றது. இவ்வாறான சிரிப்பொலிகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் செயற்கையாக ஒலிபரப்படுவது வழமை. இப் படத்தில் இந் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக காட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் சிரிப்பொலியாக காட்டப்படுகின்றது. பார்வையாளர்கள் பெரும்பாலோனோர் மத்திய மேல்தட்டு வர்க்கத்தினரே. படத்தின் பார்வையாளர்களும், நுகர்வோர்களும் அவர்களே. படத்தின் கருவின்படி சேரி வாழ்வியலால் அனைத்து பதில்களை கூறும் ஜமாலால் ஏன் இறுதிக் கேள்விக்கு மாத்திரம் அதிர்ஸடத்தை நம்ப வேண்டி வந்தது? அதுவும் தான் படித்த புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கே விடை தெரியாமல் அதிர்ஸ்டத்தை அழைக்கின்றான். அனைத்து கேள்விகளுக்கும், அனுபவத்தில், பொதுப் புத்தயில் பதில் கூறும் ஜமால், இறுதிக் கேள்விக்கு, அவனது கல்வியறிவே உதவவில்லை. இயக்குனர் ஜமாலையும், அவன் சார்ந்த சேரி மக்களையும், நன்றாகவே கேலி செய்துள்ளார். இது கூட வர்த்தகரீதியான வெற்றிக்கான வழியமைப்பும், மேல்தட்டு வர்க்க மனோபாவத்தின் எதிரொலியாகவுமே வெளிப்படுகின்றது.
 
சேரிவாழ் மக்கள் பற்றிய பதிவின் காவியாக ஏன் இப் போட்டி நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது? ஓர் சேரிவாழ் நாயகனால் இப் போட்டியில் இலகுவாக பங்குபற்ற முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இப் படக்கதையின் மூல ஆசிரியரான விகாஸ் சுவாரப்பின் பேட்டி ஒன்றின் போது “இங்கிலாந்தில் ஒரு இராணுவ அதிகாரி ஒருவர் இப் போட்டியில் தவறான வழியில் விடைகளை பெற்றதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கினார்” அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு சேரிவாழ் சிறுவன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றாலும் இது போன்ற சட்ட நடவடிக்கைக்குட்படலாம். அதுவே கதையாயிற்று என்றார். சேரி வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அணுகும் கதாசிரியரின் சமூக அக்கறையை நிச்சயம் பாரட்டத்தான் வேண்டும். ஆசிரியர் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர் வழக்கறிஞர்கள். தாத்தா இந்திய முன்னால் சட்டமா அதிபர்.

ஓர் ஒடுக்கப்பட்ட, பல துன்பங்களை சந்திக்கும், அனைத்து அரசுகளாலும் கைவிடப்பட்ட சமூகத்தின் பதிவு, அதன் அகச் சூழலை வெளிப்படுத்தியுள்ளதா? கவர்ச்சியான கரு. இக்கருவின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்ப்படவில்லை.  படத்தில் பல தவறுகள் உள்ளதாக பல இணையத்தளங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. கவி சுரதாஸ் எழுதியதாக விடை கூறப்பட்ட பாடல், உண்மையில் நர்சி பகட்டால் எழுதப்பட்டது. டொன் பட இசைக்கு, யுவா பட காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மும்பை பாடத்திட்டத்தில் மூன்று நுளம்புகள் கதை பாடத்திட்டத்தில் இல்லை.

போட்டி நிகழ்ச்சி படத்தில் நேரடி ஒளிபரப்பாகவே காட்டப்படுகின்றது. வழமையில் இது முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதியே ஒளிபரப்படும். இது திரைக்கதையாசிரிருக்கோ, இயக்குனருக்கோ உள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது. சினிமாத்தனம் என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும். பல இடங்களில் காட்சி சட்டகங்களில் தொடர்ச்சி தவறானதா காணப்படுகின்றது. ஜமாலின் காயமடைந்த கண் முதலில் இடதாகவும், பின்னர் வலதாகவும் வெளிப்படுகின்றது.

Slumdog_Millionare_Protestஇந்திய வறுமையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. மீரா நாயரின் சலாம் பம்பாய், சத்தயஜித்ரேயின் படங்கள் போன்ற பல படங்கள். இவையாவும் வெளிநாட்டுச் சந்தையை நோக்கியும், திரைப்பட விழாக்களையும் நோக்கியே நகர்கின்றன. மாதுர் மன்டகாரின் ரபிக் சிக்னல் என்ற இந்திப் படம் ஒரு சந்தியைச் சுற்றியுள்ள சேரி மக்களை பதிவு செய்துள்ளது. இப்படம் பதிவு செய்த பல தீவிர கருத்துக்களை சிலம் டோக் பதிவு செய்யவில்லை.  ரபிக் சிக்னல் இந்திய சந்தையிலேயே விற்கப்பட்டது. அண்மையில் இந்தியாவின் தெய்வீக கதாநாயகன் அமிதாப்பச்சன் “சிலம் டோக்” இந்திய வறுமையை கேலி செய்வதாக குற்றஞ்சாடடியுள்ளார். (Amitabh Bachchan: Slumdog Millionaire Shows India as Third World’s Dirty Underbelly) சேரி வாழ்மக்கள் பற்றிய பல படங்கள் உலகலாவிய ரீதியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வீதிச் சிறுவர்களைப் பற்றிய பல பதிவுகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக City of God மற்றும்  The Kite Runner போன்ற படங்கள் பரவலாக அறியப்பட்ட படங்கள். 1958ல் லண்டனில் வெளியான A Cry from the Streets என்ற படம் லண்டன்வாழ் சேரி சிறுவர்களை பதிவு செய்துள்ளது. இவை கூட பெரும் வரவேற்பு பெறவில்லை. இவற்றில் வெளிப்பட்ட யதார்த்தமும், இம் மக்கள் மீதான அக்கறையும் இப் படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் மேற்கூறிய படங்களுக்கு கிடைத்த கவன ஈர்ப்பைவிட அதிகளவில் இப்படம் பெற்றுள்ளது. இது அமிதாப்பின் கூற்றில் உள்ள உண்மையை உணர்த்துகின்றது. அதற்காக அமிதாப்பிற்கு இவர்கள் மேல் அக்கறையோ, அனுதாபமோ எனக் கூறமுடியாது. இதுவும் ஓர் சுய வியாபாரமே. இவரது படங்களில் எதிலும் சேரி வாழ் மக்கள் நலன்கள் கருதி கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

உலகெங்கும் சேரிகளில் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் விதி விலக்கல்ல. அமெரிக்காவில் பெரும் நகரங்களிலேயே இதனை காணலாம். டிற்றொய்ட், அற்லான்ரா, மியாமி, சென் லூயிஸ், கூஸ்ரன், சிக்காகோ, நியு ஒலியன்ஸ், மில்வாக்கி போன்ற நகரங்களில் சேரிகளை காணலாம். இவற்றில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் (49 வீதம்) கறுப்பின மக்களே. வெள்ளை இனத்தவர்கள் வெறும் .5 வீதத்திற்கும் குறைவானவர்கள். இது உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களிலும் காணப்படுகின்றது. நவீன நகரமயமாக்கல் என்பதன் பெயரில் குடியிருப்போரை எழுப்பி வீடற்றவர்கள் ஆக்கும் முயற்சியும் வளர்ச்சியடைந்த நகரங்களிலேதான் நடைபெறுகின்றன. நியுயோர்க் நகரில் புறுக்களின் பாலத்தை சுற்றியுள்ள நகர மக்கள், ரொரண்ரோவின் றிஞன்ற் பூங்கா மக்கள் இவ்வாறு நவீன மயமாக்கலில் பாதிக்கப்பட்டோர். இவர்கள் மீதான வன்முறையையும், ஒடுக்குமுறையையும் மறைக்கும் முயற்சியே, இப் படம் மீதான அதீத விளம்பரத்திற்கான காரணம். இப் படம் சிறந்த மக்கள் தெரிவு விருதை ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் பெற்றுக் கொண்டது. ரொரண்ரோ விழா கேந்திர முக்கியத்துவமுடையது. உலகின் இரண்டாவது பெரிய திரைப்பட விழா, அத்துடன் வட அமெரிக்க சந்தையையும் தீர்மானிக்கின்றது. பல வெகுசனத் தொடர்பாளர்கள் சங்கமிக்கும் விழா. இப்பொழுது தங்க உலகம்(Golden Globe), ஒஸ்கார் எனத் தொடர்கின்றது.

ஒன்றை மட்டும் கூறலாம் யதார்த்தை மீறி வெளிப்பட்டுள்ள இப் படத்தை பார்க்க செல்ல முன்னர் மூளையை கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். பொதுப் புத்தி என்பது பார்வையாளனுக்கு இல்லை என்பதையே இப் படம் வெளிப்படுத்துகின்றது. இன்றைய மேற்கத்திய வெகுசனத் தொடர்பு சாதனங்கள் இப்படம் செய்ததைத்தான் செய்கின்றன.

இறுதியாக ஓர் கேள்வி? இப்படத்தின் தலைப்பு  சேரி “நாய்”  என இடப்பட்டுள்ளது. வறுமையில் வாழ்பவர்களை “நாய்” என்று கூறும் ஆங்கிலேய தயாரிப்பாளருக்கு எந்த இந்தியரும் ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. பிரித்தானிய காலனித்துவ மனோபாவமே “நாய்”.

அனைத்து ஊடகங்களும் மௌனமாக உள்ளன. “தேசம்” ஊடாக இந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் இதன் தயாரிப்பாளருக்கும் தெரியப்படுத்துவோம். இப் படத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் இது பற்றி மௌனமாக இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

Slumdog_Millionaire_Oscarஓஸ்கார் அரசியல்:

அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அமெரிக்காவிற்கு எதிராக கருத்துக்கள் முன் வைப்பவர்களை ஒஸ்கார் தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளது. இவ் வருடம் மாயாவிற்கும் இதுவே நடைபெற்றது. 1969ல் வியட்நாம்போருக்கு எதிராக குரல் எழுப்பிய ஜேன் பொன்டா விற்கு ஒஸ்கார் நிராகரிக்கப்பட்டது. சார்லி சப்பிளின் இவருக்கு ஒஸ்கார் விசேட விருதே 1972ல் கிடைக்கப்பெற்றது. இவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அரசியல் படங்களும், சர்சைக்குரிய விடயங்களையும் கொண்ட படங்கள் நிராகரிக்கப்பட்டன.

இவ் வருடம் பிரான்ஸில் இருற்து அனுப்பப்பட் “Class” இது ஒரு வகுப்பில், பல்வேறு இனங்களை கொண்டவர்களுக்கு பாடம் நடாத்தும் ஓர் ஆசிரியயையும், வகுப்பறையையும் மையமாகக் கொண்டது. இது போன்ற பல படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

ரகுமான் தமிழிழ் பேசினார் என சந்தோசப்படும் நாங்கள் “இவர் என்ன பேசினார்” என ஒரு தடவை யோசிக்க வேண்டும். மார்லன் பிராண்டோ, மைக்கல் மூர் போன்றோர் ஒஸ்கார் மேடையில் துணிச்சலாக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முன்னவர் அமெரிக்க பூர்விக குடிகளான இந்தியரின் இறைமையை வலியுறுத்தி பேசினார். முன்னவர் அமெரிக்காவிற்கு எதிராகவே பேசினார். அதுவும் அப்போதைய அமெரிக்க அதிபர் புஸ்ஸை கேலி செய்து “”we are against this war Mr. Bush. Shame on you! Shame on you!” என பேசினார்.

ஓஸ்கார் என்பது ஓர் Fashion Show. இதில் சில சமயங்களில் திறமைகள் அங்கீகரிக்கப்படும். பல சமயங்களில் நிராகரிக்கப்படும்.

‘இலங்கை – பாக். மிகுந்த நட்பு நாடு; நிதானம் அவசியம்’

sri-lanka-parliment.jpgஇலங்கையும் பாகிஸ்தானும் நெருங்கிய உறவினைக் கொண்ட நாடுகள் என்பதால், கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் தொடர்பில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் நேற்றுச் சபையில் பிரஸ்தாபித்தனர். அதற்குப் பதிலளித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தமது பதிலில் மேலும் தெரிவித்ததாவது :-

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதையடுத்து உடனடியாகக் கிடைத்த தகவல்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சபையில் தெளிவுபடுத்தினார். அதற்குப் பிறகு சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை பிந்திக் கிடைத்த தகவல்களாகும்.

இத்தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் உன்னிப்பாக ஆராயப்படுகின்றன. எவ்வாறெனினும் இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளைக் கொண்ட நாடு என்பதால், இப்பிரச்சினை நிதானமாக அணுகப்பட வேண்டியதெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு அந்நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக நேற்று முன்தினம் சபையில் ஆளும்கட்சி அமைச்சர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், சம்பவத்தைப் பார்க்கும் போது சாதாரண அமைச்சர்களுக்கு வழங்கும் பாதுகாப்புக் கூட அவர்களுக்கு வழங்கப் படவில்லையே என எதிர்க் கட்சியினர் சபையில் பிரஸ்தாபித்தனர். இதற்குப் பதிலளித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் போரை நிறுத்த இங்கிலாந்துக்கு மனு:பழ.நெடுமாறன், வைகோ, திருமா

br-embassy-india.jpg சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதர் மைக்கார்னை, பழ.நெடு மாறன் தலைமையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சந்தித்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த இங்கிலாந்து தலையிட கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடன் இருந்தனர். இந்த மனுவை அளித்த பின்னர் நிருபர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது :

இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து முன் வரவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.  அவசியம் உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளதாக கூறியதைத்தொடர்ந்து பேசிய வைகோ, 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையெழுத்து போடுகிறார்கள். அமெரிக்க அதிபர், ஐ.நா.பொது செயலாளர், ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு கையெழுத்துக்களை அனுப்புவோம். கட்சி எல்லைகளை கடந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. எனவே அரசியல் கூட்டணிக்கும், இலங்கை தமிழர்களை காக்க போராடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து போராடுவோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உரிய நேரத்தில் கூடி முடிவு செய்வோம் என்றார்.

முல்லைத்தீவிலிருந்து 7வது தொகுதி காயமடைந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என 157 பேர் நேற்று அழைத்துவரப்பட்டனர்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக 7வது தொகுதியாக நோயாளர்கள் கர்ப்பிணிகள் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 157 பேர் நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 50 ஆண்கள் 81 பெண்கள் 26 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் 42 ஆண்களும் 45 பெண்களும் வைத்திய சிகிச்சைகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களுடன் உதவிக்கு வந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் திகதி முதல் இதுவரை 7 தொகுதிகளில் கடல் வழியாக நோயாளர்கள் காயமடைந்தவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 2553 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்தார்

rohitha-sir-john.jpg வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேபாள விஜயத்தில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சரை இலங்கை கிரிக்கட் அணியினர் மீது நேற்று பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து உடனடியாக அங்கு செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிணங்க இன்று பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல்களின் பின்னர் இஸ்லாமாபாத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளார் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அவசர காலச் சட்டம் 62 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

srilanka-parliament.jpgநாட்டில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 62 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

புலிகளின் 2100 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகள் படையினரால் மீட்பு

bobobo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 2100 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகளை இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குண்டுகளையும் விமானம் மூலம் கொண்டு வந்து புறக்கோட்டைப் பிரதேசத்தில் போட்டிருந்தால் அந்தப் பிரதேசம் முற்றாக அழிந்திருக்குமெனவும் அந்தளவுக்கு இந்தக் குண்டுகள் சக்திமிக்கவையாகக் காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது.

ஜானக பெரேரா மீதான தாக்குதலுக்காக புலிகள் 63 இலட்சம் ரூபாவை வழங்கினர்

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீதான தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விடுதலைப்புலிகள் 63 இலட்சம் ரூபா வழங்கியுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் அநுராதபுரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசிய பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரினதும் மனைவியினதும் மதவாச்சி மக்கள் வங்கிக்கணக்கில் 35 இலட்சம் ரூபா விடுதலைப்புலிகளால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும், 28 இலட்சம் ரூபா பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர்களிருவரதும் வங்கிக்கணக்குகளிலும் 35 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், தமக்கு 28 இலட்சம் ரூபாவை பல்வேறு தடவைகளில் புலிகள் வழங்கியதாக சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரி தனது தேசிய அடையாள அட்டையின் பிரதியை வழங்கி கையடக்கத் தொலைபேசி சிம் ஒன்றையும் கண்டியிலுள்ள கடையொன்றில் பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்த இரகசியப் பொலிஸார், தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முல்லைத்தீவிலிருந்து திங்கட்கிழமை இரவு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள்

army-help.jpg01. மிதுலா (இறப்பு)
02. நல்லதம்பி, புதுக்குடியிருப்பு (வயது 80)
03. எஸ்.செல்வமணி, உருத்திரபுரம், (வயது 31)
04. வி. ரவிச்சந்திரன், யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 42),
05. வி.சிவதாசன், ஒட்டுசுட்டான், (வயது 40)
06. ஜோதிலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 39)
07. மாசிலாமணி சிவராசா, கிளிநொச்சி, மருதுநகர், (வயது 43)
08. ஆலியம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 62)
09. கே.அம்பலநாதன், முல்லைத்தீவு, புனாக்காடு, (வயது 45)
10. வி.மதிவேணி, அம்பாள்புரம், வவுனிக்குளம், (வயது 37)
11. முத்தையா சிவகுரு, தொண்டமனாறு, (வயது 85)
12. வி.கோபிகா, அம்பாள்புரம், வவுனிக்குளம், (வயது 06)
13. வி. சேனுகா, அம்பாள்புரம், வவுனிக்குளம், (வயது 12),
14. அவசர சிகிச்சைப் பிரிவில் (பெயர் இல்லை)
15. பௌசிகா, வல்லிபுரம், (வயது 12)
16. எஸ். கினிதேவி, (வயது 41)
17. பூபாலசிங்கம் தனபாலசிங்கம், பலாலி வீதி, யாழ்ப்பாணம், (வயது 41)
18. விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது 63)
19. இராசம்மா, முல்லைத்தீவு, முள்ளியவளை, (வயது 67)
20. வி. வரதராசா, வற்றாப்பளை, (வயது 49)
21. பொன்னம்பலம் பாக்கியநாதன் கலாசாலைவீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், (வயது 58),
22. நந்து, ஆண்டான்குளம்,
23. ஏ.பழனியம்மா, மன்னார், (வயது 62),
24. நந்தகுமார், முல்லைத்தீவு, முள்ளியவளை, (வயது 45),
25. எஸ். சிவபாதம், முல்லைத்தீவு, வற்றாப்பளை, (வயது 58),
26. எஸ். தவமணி, கிளிநொச்சி, உதயநகர், (வயது 45)
27. செல்வம், கிளிநொச்சி, உதயநகர், (வயது 1.5)
28. டபிள்யூ. இந்திராணி, கிளிநொச்சி, திருமுறிகண்டி, (வயது 57)
29. சர்மிலா, கிளிநொச்சி, திருமுறிகண்டி, (வயது 04)
30. சிவபாக்கியம், மூர்வீதி, மன்னார், (வயது 84)
31. இறப்பு, பெயர் தரப்படவில்லை.
32. ஆர். சண்முகநாதன், முல்லைத்தீவு, உடையார் கட்டு (வயது 62)
33. இராஜலட்சுமி, நெடுங்கேணி, (வயது 53)
34. எஸ். நாகம்மா, வட்டக்கச்சி, (வயது 69),
35. ஜே. பரணிதரன், நெடுங்கேணி, (வயது 07)
36. எஸ். செல்வரத்தினம், (வயது 77)
37. எஸ். செந்தில்நாதன், மாத்தளன், (வயது 28)
38. மேரிலூத், இளவாலை, (வயது 64)
39. மேரிபெனடிக்ற் மத்யூ, யாழ்ப்பாணம், (வயது 46)
40. கே. டினேஷ், யாழ்ப்பாணம், கோண்டாவில், (வயது 15)
41. எஸ். கனகம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 48)
42. வி. வேலாயுதம், முல்லைத்தீவு, முள்ளியவளை, (வயது 75)
43. எஸ். தனிகரன், புதுக்குடியிருப்பு, (வயது 28)
44. அகல்விழி, குமுழமுனை, (வயது 1.5),
45. பி. முல்லைச்செல்வி, குமுழமுனை, (வயது 03)
46. எஸ். ரத்னகுமார், யாழ்ப்பாணம், நல்லூர், (வயது 39)
47. எஸ். ருக்மணி, வவுனிக்குளம், (வயது 74)
48. பி. தங்கம்மா, மல்லாவி, (வயது 55)
49. பாக்கியம், (வயது 80)
50. வி. கந்தன், புத்தூர், (வயது 17)
51. கே. நஹினி, முல்லைத்தீவு, (வயது 65)
52. ஆர். வள்ளிநாயகி, பூநகரி, (வயது 68)
53. ஜீவன் நிலுக்ஷன், பூநகரி, (வயது 06)
54. ஏ. சிந்துஜா, கிளிநொச்சி, கணேசபுரம், (வயது 28)
55. ஜீவன்சிகு, மல்லாவி, (வயது 02)
56. எஸ். பொன்னம்மா,
57. என். இராமசாமி, பூநகரி, (வயது 74)
58. கே. சிவகுரு, பேராளை, பளை, (வயது 70)
59. ஏ.சகமலர், அடம்பன், (வயது 38),
 60. ஏ. அக்குத்தம்மா, அடம்பன், (வயது 69),
61. ஜயனுதன், அடம்பன், (வயது 1.5)
62. ரி. சசிதா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 31)
63. எஸ். பிரதீப், முல்லைத்தீவு, செல்வபுரம்,
64. எஸ். செல்வராசா, கொடிகாமம், (வயது 47)
65. எஸ். மாணிக்கம், யாழ்ப்பாணம், அளவெட்டி, (வயது 71)
66. எஸ். சாருஸன், முல்லைத்தீவு, செல்வபுரம், (வயது 07)