March

March

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட 406 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு;

1.அடையாளம் காணப்படவில்லை,

2. ரி.மகேந்திரன், விஸ்வமடு (வயது 52),

3.கே.சசிகலா, முள்ளியவளை (வயது 20),

4. ஏ.ரோஸ்மலர், முல்லைத்தீவு (வயது 48),

5. ஏ.அபிஸன், முல்லைத்தீவு (6 மாதம்),

6. ஏ.நிக்ஸன் முல்லைத்தீவு (வயது7),

7.எஸ்.கோமதி, முல்லைத்தீவு (வயது 31),

8.பி.சுப்பிரமணியம், வவுனியா (வயது 64),

9. ஏ.பரஞ்சோதி, கிளிநொச்சி, உட்டுக்குளம் (வயது 30),

10. எஸ்.யசோதா, கிளிநொச்சி,அக்கராயன் குளம் (வயது 27),

11. எஸ்.யோகேஸ்வரி, கிளிநொச்சி (வயது 52),

12. எம்.வேலாயுதம், அல்பிட்டியா (வயது 67),

13. டபிள்யூ.செல்வரத்னம், மாங்குளம் (வயது50),

14. ஐ.மனோன்மணி, யாழ்ப்பாணம், வேலணை (வயது 85),

15. ஏ.வசந்தகுமாரி, கிளிநொச்சி (வயது 57),

16.எஸ்.நிஷா, முல்லைத்தீவு, மாத்தளன் (வயது 10),

17. ஏ.செல்வரூபன், முல்லைத்தீவு, மாத்தளன் (வயது 33),

18. எஸ்.லலிதாதேவி, யாழ்ப்பாணம், வேலணை (வயது 57),

19. ஏ.தெய்வானை, கல்முனை, துறைநீலாவணை (வயது 65),

20. ஜே.அனுஷாதேவி, மாத்தளன் (வயது 29),

21.ஜே.மதுஷன், மாத்தளன் (வயது 7),

22. ஏ.தயாபரி, மன்னார் (வயது 39),

23. வி.சரஸ்வதி, பொக்கணை (வயது 83),

24. திரேஸம்மா, வட்டக்கண்டல், (வயது 57),

25. அந்தனியம்மா, அடம்பன் (வயது 83),

26. வினாசித்தம்பி, பளை, (வயது 68),

27. ஏ.கவாரியல், மன்னார் (வயது 61),

28. வீ.செல்லத்துரை, வவு/புதுமன்காடு, (வயது 71),

29.டி.இராஜேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 31),

30. பி.சலானி, கிளிநொச்சி, (வயது 9),

31. பி.நிருஜா, கிளிநொச்சி, (வயது 2),

32. பி.ஜாலினி, கிளிநொச்சி, (வயது 8),

33. கே.சாவித்திரி, மாத்தளன் (வயது 30),

34.கே.சுபிஜான், மாத்தளன் (வயது8),

35. கே.வனிதா, மாத்தளன், (வயது 5),

36. கே.தனுஷன், மாத்தளன், (வயது 2),

37. எஸ்.முருகமூர்த்தி, சாவகச்சேரி, (வயது 61),

38. எஸ்.ராசன், மாத்தளன், (வயது 28),

39. வி.ராசேந்திரன், புதுக்குடியிருப்பு (வயது 78),

40. எஸ்.நிர்மலாதேவி, நாகர்கோவில் (வயது 30),

1.டி.லொறன்ஸ், மாத்தளன் (வயது 36),

42. ஏ.வசந்தி, யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 31),

43. விஜயரோகினி, முல்லைத்தீவு, சுந்தரபுரம் (வயது 26),

44. ஏ.விதுஷா, யாழ்ப்பாணம், மானிப்பாய், (வயது 4),

45. ஏ.லக்ஷிகா, யாழ்ப்பாணம், மானிப்பாய் (வயது 9),

46. ஏ.விதுஷன், யாழ்ப்பாணம், மானிப்பாய் (9 மாதம்),

47. ரத்தம், யாழ்ப்பாணம், தெல்லிப்பழை (வயது 57),

48. ரி.செல்வராசா, யாழ்ப்பாணம் (வயது 72),

49.ஜே.நவேந்திரன், பரந்தன் (வயது 15),

50. வி.இராஜேஸ்வரி, பரந்தன் (வயது 19),

51. எம்.ஜயந்தன், பரந்தன் (வயது 23),

52. பி.திருஷணா, விஸ்வமடு (வயது 45),

53. எஸ். சிவயோகம், மாத்தளன் (வயது 73),

54. ஆர்.ஜசீமா, மாத்தளன் (வயது8),

55. ஆர்.விதுஷா, மாத்தளன் (வயது2),

56. குணசேகரம், யாழ்ப்பாணம் (வயது28),

57.ரி.தேவிசரோஜா, புதுக்குடியிருப்பு (வயது 63),

58. கே.திருசெல்வராஜா, புதுக்குடியிருப்பு (வயது65),

59. வி.செல்வராஜா, கிளிநொச்சி (வயது 58),

60. எஸ்.கமலம், வட்டக்கச்சி (வயது 70),

61. ஆர்.நிரோஜன், சுந்தரபுரம் (வயது 14),

62.எம்.மதுர்ஷினி, மாங்குளம் (வயது 9),

63. எம்.ஜபசாந்தன், மாங்குளம், (8 மாதம்),

64. எம்.ரவீந்திரா, மாங்குளம், (வயது 19),

65. எம்.ஜபதர்ஷன், மாங்குளம் (வயது 2),

66. ஆர்.பத்மலதா, பொக்கணை (வயது 31),

67. ஆர்.முத்தாச்சி, பொக்கணை (வயது 71),

68. ஆர்.கந்தவனம், கண்டாவளை (வயது 69),

69. ஐ.தெய்வானைப்பிள்ளை, கண்டாவளை (வயது 68),

70. எம்.அழகன், ராமநாதபுரம் (வயது 69),

71. ஆர்.விஜயரத்னம், நாகர்கோவில் (வயது 60),

72. எஸ்.நிரேதிகா, பருத்தித்துறை, நாகர்கோவில் (வயது 2),

73. கே.கிருஷ்ணபிள்ளை, பளை (வயது 62),

74. கே.விவேகானந்தன், பளை (வயது 40),

75. கே.முனியம்மா, சுந்தரபுரம் (வயது 76),

76. ஆர்.லட்சுமி, புதுக்குடியிருப்பு (வயது 67),

77. தங்கரத்தினம் மயில்வாகனம், வவுனியா (வயது 85),

78. ஏ.சந்தனம், ஆண்டாங்குளம் (வயது 69),

79.ரி.சிவமாலை, ஆண்டாங்குளம் (வயது 70),

80.எல்.அமுதா, பூநகரி (வயது 33),

81. எல்.மேரி லவனிதா, பூநகரி (வயது 13),

82. எல்.டனிஸ்வரன், பூநகரி (வயது 9),

83. எல்.ஜோதிகா, பூநகரி (வயது 6).

84. எஸ். விகஸ்டன், (வயது 10),

85. அருந்தவமலர், முள்ளியவளை, (வயது 46),

86. வி. சின்னாச்சி, முள்ளியவளை, (வயது70),

87. கே. பாமினி, பேராறு, கற்சிரமடு, (வயது 28),

88. கே.பானுஷன், பேராறு, கற்சிரமடு, (வயது 04),

89. வை. சிவனு, முல்லைத்தீவு, (வயது 74),

90. ஏ. அனுஷா, பரந்தன், (வயது 25),

91. ஆர். கார்த்திகேசு, விஸ்வமடு, (வயது 67),

92. ஜே. ஜாலினி, பரந்தன், (வயது 06),

93. ஆர். பூங்கோதை, வவுனியா, (வயது 31),

94. ஆர். கீர்த்திகா, வவுனியா, (வயது 01),

95. கீர்த்தனா, வவுனியா, (வயது 05),

96. கே. டிஷாலினி, பரந்தன், (வயது 2.5),

97. ஆர். செல்வநாயகம், ஒட்டுசுட்டான், (வயது 50),

98. கே. கிசோபன், பரந்தன், (வயது 08),

99. கலாமதி, சாவகச்சேரி, (வயது 32), 100. இ. அபிராமி, சாவகச்சேரி, (வயது 04),

101. எஸ். அமிர்தம், மாத்தளன், (வயது 84),

102. எம். இராமநாதன், மாத்தளன், (வயது 71),

103. பி. தெய்வராணி, கிளிநொச்சி, (வயது 78),

104. எஸ். கந்தசாமி, கிளிநொச்சி, கணேசபுரம், (வயது 67),

105. ரி. மீனாட்சி, பொக்கணை, (வயது 66),

106. ஏ. கிருஷ்ணமூர்த்தி, மல்லாவி, (வயது 55),

107. எம். தங்கன், யாழ்ப்பாணம், (வயது 59),

108. எம். சின்னமணி, யாழ்ப்பாணம், (வயது 70),

109. என். அன்னமலர், மல்லாவி, (வயது 65),

110. ஆர். தவராணி, யாழ்ப்பாணம், (வயது 61),

111. எஸ். ராதாகிருஷ்ணன், யாழ்ப்பாணம், (வயது 61),

112. எஸ்.பிரதீபன், உடையார்கட்டு, (வயது 25)

113. எஸ். கந்தையா, பரந்தன், (வயது 70),

114. ஆர். மல்லிகா, ஸ்கந்தபுரம், (வயது 34),

115. வி. சண்முகலிங்கம், பூநகரி, (வயது 69),

116. கே. கிருஷ்ணமூர்த்தி, முள்ளியங்காடு, (வயது 53),

117. எஸ். அங்கம்மா, மாத்தளன், (வயது 76),

118. எஸ். ராசமணி, பூநகரி, (வயது 65),

119. எஸ். ஏ. விமலநாதன், இரணைப்பாளை, (வயது 39),

120. எஸ்.செல்வபாக்கியம், பரந்தன், (வயது 75),

121. எஸ்.ரத்தினம், வவுனிக்குளம், (வயது 57),

122. எஸ். தொம்மாசி, ஆலங்குளம், (வயது 67),

123. வி. கிருஷ்ணபிள்ளை, வற்றாப்பளை, (வயது 70),

124. கே. தங்கம்மா, வற்றாப்பளை, (வயது 69),

125. அடையாளம் தெரியவில்லை.

126. வி. நாகராஜா, யாழ்நகர், (வயது 64),

127. எஸ். சுப்பிரமணியம், வட்டக்கச்சி, (வயது 70),

128. எஸ். ராஜலட்சுமி, பரந்தன், (வயது 63),

129. ரி. றோஷ், கொய்யாத்தோட்டம், (வயது 62),

130. ஆர். ரவீந்திரன், பொக்கணை, (வயது 42),

131. கலையரசி, வட்டக்கச்சி, (வயது 4 மாதம்),

132. நாகேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 23),

133. திருபா, வட்டக்கச்சி, (வயது 02),

134. எம். சிந்துஜன், மாத்தளன், (வயது 23),

135. என். தவக்கொழுந்து, புதுக்குடியிருப்பு, (வயது 62),

136. எஸ். கனகையா, வவுனியா, (வயது 72),

137. ஆர். பிரதீப், பொக்கணை, (வயது 13),

138. எம். மேகடரி, கொய்யாத்தோட்டம், (வயது 64),

139. ஐ. செல்லம்மா, தெல்லிப்பழை, (வயது 63),

140. என். நவமணி, மாத்தளன், (வயது 70),

141. ஆர். சிறிரங்கன், விஸ்வமடு, (வயது 90),

142. ஜே.ஜே.ரோஜர்ஸ், கிளிநொச்சி, கருணைநிலையம், (வயது 79),

143. பி.பி. சிசிலியா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 65),

144. ரி. லஷ்மி, யாழ்ப்பாணம், பளை, (வயது 67),

145. ரி. திலுக்ஷன், புதுக்குடியிருப்பு, (வயது 09),

146. எம்.பத்மாவதி, புதுக்குடியிருப்பு, (வயது 72),

147. ஜே.பிலிப்பையா, கிளிநொச்சி, திருவையாறு, (வயது 69),

148. இருதயம், அடம்பன், (வயது 80),

149. எஸ். நிருஷா, மாத்தளன், (வயது 08),

150. கே. தமயந்தி, பருத்தித்துறை, (வயது 29),

151. ஆர். ஆர்த்திகா, பருத்தித்துறை, (4 நாள் குழந்தை),

152. ஆர். ஆர்த்தி, (4 நாள் குழந்தை),

153. கே.கே. ஈஸ்வரதேவி, பருத்தித்துறை, (வயது 67),

154. எஸ். வினோதராஜா, முள்ளியவளை, (வயது 23),

155. கே. தங்கராணி, மல்லாவி, (வயது 52),

156. எஸ்.எம். சிவக்குமார், இராமநாதபுரம், (வயது 45),

157. எஸ். விதுர்ஷா, இராமநாதபுரம், (வயது 06),

158. தெய்வானைப்பிள்ளை, அரியாலை, (வயது 62),

159. கே. ராசமணி, உருத்திரபுரம், (வயது 75),

160. ஜே. அருள்மதி, மாத்தளன், (வயது 32),

161. எஸ். ஜெயநந்தன், மாத்தளன், (வயது 32),

162. ஜே. கனிஸ்டா, மாத்தளன், (வயது 10),

163. ஜே. கனிஸ்டன், மாத்தளன், (வயது 12),

164. ஜே. கஜன், மாத்தளன், (வயது 02),

165. எஸ். ஜெயலட்சுமி, மாத்தளன், (வயது 45),

166. எஸ். விக்ஸன், மாத்தளன், (வயது 05),

167. இ. சிவராஜா, முள்ளியவளை, (வயது 67),

168. ரி. அன்னலெட்சுமி, யாழ்ப்பாணம், அளவெட்டி, (வயது 66),

169. ஏ.மேரிமட்டன்டா, மன்னார், மடுக்கோவில், (வயது 60),

170. எஸ். விஜயந்தி, கிளிநொச்சி, (வயது 30),

171. எஸ். பிரவின், கிளிநொச்சி (வயது 02).

172. கே.நாகராஜா, வட்டக்கச்சி, (வயது 93),

173. ஜனனி, மாத்தளன், (வயது 5),

174. எஸ். கமலாவதி, இரணைப்பாளை, (வயது 52),

175. என். அருளம்மா, வவுனியா, நெடுங்கேணி, (வயது 63),

176. செல்வராணி, கிளிநொச்சி, (வயது 29),

177. வி. தாமோதரம்பிள்ளை, முள்ளியவளை, (வயது 71),

178. ஆர். ராகதீஸ்வரி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 32),

179. ஆர். கஸ்மினி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 2.5),

180. ஆர். பிரவீன்குமார், யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 5),

181. ரி. சிவபாக்கியம், முள்ளியவளை, (வயது 68),

182. எஸ். வேலாயுதன், மாத்தளன், (வயது 69),

183. யு. யேசுதா, மாத்தளன், (வயது 32),

184. யு.நிலானி, மாத்தளன், (வயது 4),

185. ராமர்கிருஷ்ணபிள்ளை, இராமநாதபுரம், (வயது 60),

186. எஸ்.மயில்வாகனம், புதுக்குடியிருப்பு, (வயது 70),

187. எஸ். விருஷித்தம்மா, மடுக்கோவில், மன்னார், (வயது 84),

188. கே. பரமேஸ்வரி, குமுழமுனை, (வயது 66),

189. எஸ். தம்பு, அக்கராயன்குளம், (வயது 67),

190. எம். நேசம், தெல்லிப்பழை, (வயது 69),

191. எஸ். வீரசிங்கம், பூநகரி, (வயது 72),

192. வி. கந்தையா, புதுக்குடியிருப்பு, (வயது 70),

193. டபிள்யூ. மனோன்மணி, பூநகரி, (வயது 59),

194. ஏ.நாகராஜா, பரந்தன், (வயது 68),

195. கே.செல்லையா, புதுக்குடியிருப்பு, (வயது 70),

196. கே. சோமசுந்தரம், மாங்குளம், (வயது 71),

197. கே.சேதுப்பிள்ளை, புதுக்குடியிருப்பு, (வயது 72),

198. கனகபூரணேஸ்வரி, முள்ளியவளை, (வயது 71),

199. எஸ். கணபதிப்பிள்ளை, முள்ளியவளை, (வயது 76),

200. வி. சிவசுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு, (வயது 72),

201. ஏ.சீனியன், யாழ்ப்பாணம், பளை, (வயது 78),

202. எஸ். சீனியாபவளம், யாழ்ப்பாணம், பளை, (வயது 73),

203. கே. கலைவாணி, மாத்தளன், (வயது 30),

204. கே.தெய்வானை, மாத்தளன், (வயது 69),

205. வி. கண்னையா, இரணைப்பாளை, (வயது 70),

206. பிரணவன், முள்ளியவளை, (வயது 11),

207. ஆர். நவநீதராணி, முள்ளியவளை, (வயது 42),

208. ஐ.பிரதீஷன் முள்ளியவளை, (வயது 8),

209. சரோஜினி, தம்பளகாமம், (வயது 53),

210. கே. வீரசிங்கம், துணுக்காய், (வயது 70),

211. கே. மகேஸ்வரி, துணுக்காய், (வயது 71),

212. வி. சண்முகராசா, பரந்தன், (வயது 69),

213. எம். தம்பிராஜா, தயாகம, (வயது 80),

214. எஸ். சுதாகரன், மாத்தளன், (வயது 7),

215. எஸ். கௌரி, (வயது 48),

216. அக்ஸயா, (வயது 6),

217. தேவதாஸ்நவரட்ணம், மாத்தளன், (வயது 59),

218. ஏ. சந்திரகுமார், மல்லாவி, (வயது 51),

219. எஸ். சிவராஜா, ஒட்டுசுட்டான், (வயது 53),

220. என். ரத்னசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 76),

221. கே. ஈஸ்வரி, மந்துவில், (வயது 65),

222. கே. கந்தையா, முள்ளியவளை, (வயது 77),

223. கே. மலர், யாழ்நகர், (வயது 68),

224. எப். ஜெயபாலன், வல்வெட்டித்துறை, (வயது 52),

225. ஜே. பிரேமா, வல்வெட்டித்துறை, (வயது 48),

226. எஸ். சுதர்ஸன், ஒட்டுசுட்டான், (வயது 28),

227. எஸ். ஜெயந்தினி, ஒட்டுசுட்டான், (வயது 24),

228. திருப்பாகரை, முல்லத்தீவு, (வயது 20),

229. வி. பரமேஸ்வரி, முத்தையன்கட்டு, (வயது 40),

230. ஏ. சிவபாக்கியம், புதுக்குடியிருப்பு, (வயது 71),

231. ஏ. மீனாட்சி, கிளிநொச்சி, (வயது 70),

232. கே. சிவாஜனம், பூநகரி, (வயது 52),

233. எம். சிவமழகு, மாத்தளன், (வயது 75),

234. என். பாலசிங்கம், பொக்கனை, (வயது 67),

235. ஜே. செல்லக்கண்மணி, யாழ்ப்பாணம், (வயது53),

236. எஸ். கந்தையா, மாத்தளன், (வயது 70),

237. ஜே. கனகம்மா, மாத்தளன், (வயது 69),

238. ஆர். கிருபாகரன், மாத்தளன், (வயது 06),

239. ஆர். லக்சிகா, மாத்தளன், (வயது 08),

240. எம். நாச்சியார், கிளிநொச்சி, (வயது 75),

241. என். சுப்பிரமணியம், பரந்தன், (வயது 65),

242. எஸ். தவசிங்கம், நெடுங்கேணி, (வயது 67),

243. ரி. கங்காதேவி, நெடுங்கேணி, (வயது 57),

244. பி. வெள்ளைச்சாமி, வவுனியா, நெடுங்கேணி, (வயது 64),

245. எஸ். தர்ஷினி, வற்றாப்பளை, (வயது 31),

246. வீரசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 70),

247. என். யோகமலர், வற்றாப்பளை, (வயது 45),

248. எஸ். சியாம் வற்றாப்பளை, (வயது 02),

249. எஸ். ரவீந்திரன், முள்ளியவளை, (வயது 60),

250. வி.சோதிலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 64),

251. வி. அன்னலட்சுமி, புதுக்குடியிருப்பு, (வயது 74),

252. எஸ். சின்னம்மா, முருங்கன், மடுக்கரை, (வயது 74),

253. பி. சரோஜா, மடுக்கரை, மன்னார், (வயது 52),

254. என். முனுசாமி, கிளிநொச்சி, (வயது 83),

255. பி.போறோஜனி, கிளிநொச்சி, (வயது 17),

256. பி. ஜமுனாராணி, கிளிநொச்சி, (வயது58),

257. ஆர். செல்லம்மா, ஸ்கந்தபுரம், (வயது 63),

258. எஸ். வள்ளியம்மா, புதுக்குடியிருப்பு, (வயது 69),

259. ஏ. கோணேஸ்வரி, ஸ்கந்தபுரம், (வயது 65),

260. ஐ. அருணாசலம், மாத்தளன், (வயது 72),

261. என். திருநாவுக்கரசு, கிளிநொச்சி, (வயது 70),

262. எஸ். சோமசுந்தரம், புதுக்குடியிருப்பு, (வயது 71),

263. எஸ். வி.ராஜேந்திரன், கொக்குவில், (வயது 73),

264. ஆர். ராஜலட்சுமி, கொக்குவில், (வயது 72),

265. எஸ். வெற்றிவேல், முள்ளியவளை, (வயது 55),

லாகூர் தாக்குதலில் தனது தொடர்பை நிராகரிக்கிறது லஷ்கர்- இ -தொய்பா

cricket_pakisthan.jpgலாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா இயக்கம் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளை அந்த அமைப்பின் பேச்சாளர் அப்துல்லா ஹாஸ்நவி மறுத்துள்ளார்.

ஸ்ரீநகரில் இனங்காணப்படாத இடமொன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர், இந்த ஊடக செய்திகள் பிழையானவை, ஆதாரமற்றவை என்று கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திகள் தெரிவித்தன. மும்பைத் தாக்குதலிலும் தனக்கு தொடர்பில்லையென லஷ்கர் இ தொய்பா முன்னர் மறுத்திருந்தது.

“இலங்கைக் குழுவினர் மீதான தாக்குதலானது பாகிஸ்தானின் இறைமை மீது இடம்பெற்ற தாக்குதலாகும். அந்த மாதிரியானதொன்றை காஷ்மீர் போராளிகள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்’ என்று ஹாஸ்நவி கூறியுள்ளார். காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா போராடி வருகிறது. லாகூர் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகளை இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் புகழை மாசுபடுத்தவும் அந்த நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை ஏற்படுத்தவும் இந்திய பாதுகாப்பு, நிறுவனங்கள் மேற்கொண்ட வேலையே லாகூர் தாக்குதல் என்று அப்துல்லா ஹாஸ்நவி தெரிவித்துள்ளார். லாகூர் தாக்குதல் தொடர்பாக எந்த அமைப்புகளும் இதுவரை உரிமை கோரவில்லை.

ஆண்களைவிட அதிக வேலையிழப்பு பெண்களுக்கே!

thinking.jpgமார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக – மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், ‘எல்லாம் போச்சு…’ என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது.

அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐநாவின் பலவேறு துணை அமைப்புகள், குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) செய்து வருகிறது. இதை அந்த நிறுவனமே இன்றைய தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐஎல்ஓவின் அறிக்கைபடி, உலகமெங்கும் இந்த மார்ச் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் பல லட்சம் வேலையிழப்புகள் ஏற்படுமாம். ஏற்கெனவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இது உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இப்போது அதை மேலும் மோசமாக்கும வகையில், பணியிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது ஐஎல்ஓ. இந்த மாதம் மட்டும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பணியிழப்புக்கு உள்ளாகும் பெண்கள் எண்ணி்க்கு 22 மில்லியன்களாக இருக்குமாம். அதாவது ஆண்ளைவிட 1 முதல் 2 சதவிகிதம் வரை கூடுதல் பணியிழப்புக்கு பெண்கள் உள்ளாவதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்காதிய நாடுகளில் இனி ஆண்களை விட பெண்கள்தான் அதிக வேயிழப்புகளுக்கு உள்ளாவர்கள் என்றும், அதற்குக் காரணம் பெரும்பாலும் மேம்போக்கான பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததே என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண்கள் சமுதாயத்துக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்தால்:டி.ஜி.பி. எச்சரிக்கை

tamil-nadu-police.jpgதமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்திற்கு கலைஞர் கருணாநிதி வரவேற்பு

karunanithi.jpgஇலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படவேண்டுமெனக் கோரியும் தமிழர்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கது

என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடந்த அனைத்து கட்சி கூட்டம், மனித சங்கிலி ஆகியவற்றை புறக்கணித்த ஜெயலலிதா இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்தவர் இப்போது அதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்று தெரிவித்துள்ளார். 

மொ‌‌ரீ‌சிய‌‌ஸி‌ல் த‌மிழ‌ர் பேர‌ணி: மனுவை வா‌ங்க இ‌‌ந்‌திய‌த் தூதரக‌ம் மறு‌ப்பு

Wanni_Warஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமைக‌ள் பாதுகா‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌‌லியுறு‌த்‌தி மொ‌‌ரீ‌சிய‌ஸ் நா‌ட்டி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ள் எழு‌ச்‌சி‌ப் பேர‌ணி நட‌த்‌தின‌ர். அவ‌ர்க‌ள் அ‌ளி‌த்த மனுவை வா‌ங்க இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் மறு‌த்து‌வி‌ட்டதா‌ல், மனுவை எ‌ரி‌த்து‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்டது.

த‌மி‌ழின அ‌ழி‌ப்பை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌சி‌றில‌ங்க அரசை வ‌லியுறு‌த்‌தி மொ‌ரீசிய‌ஸ் தலைநகர் போர்ட் லூயி‌ஸில்  (வெள்ளிக்கிழமை) பிற்பகல் துவ‌ங்‌கிய பேர‌ணி‌யி‌‌ல் 5,000க்கும் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் திரண்டனர். தமிழீழ மக்கள் ச‌ந்‌தி‌க்கும் அவலங்களை வெளிக்கா‌ட்டு‌ம் வகையிலான பதாகைகளையும் தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி புற‌ப்ப‌ட்டது.

பேரணியின் நிறைவில், போர்ட் லூயி‌ஸில் உள்ள பூங்காவில் நட‌ந்த பொதுக்கூட்டத்தில் மொ‌ரீசியஸ் நா‌ட்டு மூத்த அரசியல் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறு‌ப்‌பின‌ர் ம.கா.ஈழவேந்தனும் உரையாற்றினர்.

மொ‌ரீ‌சியஸ் நா‌ட்டி‌ன் துணைப் பிரதமரும், மூத்த அமைச்சர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய தூதரகத்தில் மனு அ‌ளி‌க்க தமிழ‌ர்க‌ள் முய‌ன்றனர். ஆனா‌ல், இந்திய தூதரக அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்தனர். இதனால் ஆ‌த்‌‌திரமடை‌ந்த த‌மிழ‌ர்க‌ள், இந்திய தூதரக வளாகத்தின் சுவ‌ர் மீது ஏறி, தூதரக அதிகாரிகளின் முன்பு கொடு‌க்கவிருந்த மனுவை தீயிட்டுக் கொளுத்தினர்.

ஆற்றல் மிகு சமூகத்தை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க முடியும் – பிரதமர் மகளிர் தின செய்தி

International_Women_Dayஅறிவு, ஆற்றல்மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றி னை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன் முறைகளை ஒழிக்க முடியுமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

“பெண்களுக்கு எதிரான இம்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அணி திரளுவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருவதற்கு எடுத்துள்ள முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெளத்த விழுமியங்களை பாதுகாத்துவந்த தாய்மார்களை புத்தர் நிலையில் வைத்து மதிக்கப் பழகியுள்ள எமது பண்டைய சமூக முறையை மீண்டும் உயிர்ப்பிக்க காலம் பிறந்துள்ளது என்பதனை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எழுந்துள்ள தற்கான காரணம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய இம்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையாகும்.

பெண்களுக்கு எதிரான இம்சைகளை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் சொற் பொழிவுகள் திட்டங்கள் என்பவற்றை மேற்கொண்ட போதிலும், இதுவரையில் பெண்களுக்கு எதிரான அசாதாரணங்களை கட்டு ப்படுத்துவதற் கோ அல்லது பூண்டோடு இல்லாதொழிப்பதற்கோ இயலாது போயுள்ளது.

சட்ட திட்டங்கள், ஒழுங்கு விதிகள் என்பவற்றினூடாக மாத்திரம் இப்பணியினை நிறைவேற்ற முடியாது. அதற்காக மனிதர்களை ஆன் மீக உணர்வுகளின் மூலம் போசித்து அறிவு, ஆற்றல் மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றினை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

இங்கு இலங்கைப் பெண்களும் சமூக விழுமியங்களை கடைபிடித்து தமது வாழ்க்கை முறையை சீரமைத்துக்கொள்வதற்கு பழகிக்கொள்ளுதல் வேண்டும். மொத்த சனத்தொகையில் சுமார் 52% வீதமான பெண்கள் நாட்டின் தேசிய வருமானத்திற்கு பெற்றுத்தருகின்ற பாரிய பங்களிப்பினை இங்கு நினைவுகூருவதுடன் பெண்களுக்கு இம்சைகளின்றி உயிர்வாழ்வதற்கான சூழல் ஒன்றினை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

சர்வதேச மகளிர் தின நினைவு விழாவின் நடவடிக்கைகள் சகல வழிகளிலும் வெற்றியளிக்க வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

பெண்கள் கெளரவத்துடன் வாழும் சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மகளிர் தின செய்தி

International_Women_Dayபெண்கள் கெளரவமாகவும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவிப்பதற்கு அனை வரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்கள் என்ற வகையில் புதிய உத்வேகத்துடன் எழுந்து நிற்கும் இந்த வேளையில் சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை விடுக்கக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“பெண் சமூகத்தின் கெளரவத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பெண்கள் மீதான இம்சைகளை ஒழிப்பதற்கு ஒன்றுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானதெனக் கருதுகிறேன்.

சமூக கட்டமைப்புக்கு வலுவூட்டும் குடும்பம் என்ற அங்கத்தின் முதன்மையான இடம் தாய்க்கு உரியதாகும். மஹிந்த சிந்தனையின் மூலம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அவளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தாலும், வறுமையினாலும், மதுபானத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அரசாங் கம் இதனைப் புரிந்துகொண்டுள்ளது. “மதுவுக்கு முற்றுப் புள்ளி” வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நிம்மதி அடையும் பெண்கள் அநேகர்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான இராணுவ கட்டமைப்பு புலிகளை வெற்றிகொள்ள உதவியது – ஜனாதிபதி

mahi-trnco.jpgமரபுவழி இராணுவத்துக்கு கெரில்லாயுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் பொய்யாக்கியுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைப் படையினரை மரபுவழி இராணுவமாகவன்றி மனிதாபிமானப் படையினராகக் கட்டியெழுப்பிய தன் மூலமே வடபகுதி நடவடிக்கையில் வெற்றிவாகை சூட முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விமானப் படையினருக்கு வர்ணவிருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை சீனன் குடாவில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். விமானப் படையின் நான்கு பிரிவுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் 30 உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

தாய்நாட்டின் ஐக்கியத்தையும், கெளரவத்தையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வருகிறார்களென்று பாராட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் உலகப் படையினருக்கு ஒரு முன்மாதிரியாக இலங்கை விமானப்படையினர் திகழ்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எதிரியின் இலக்கை மாத்திரம் துல்லியமாக இலக்கு வைக்கும் நமது விமானப் படையினர் ஒரு போதும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுக் கட்டடங்களை இலக்கு வைத்தது கிடையாது. அந்தளவுக்கு எமது படையினர் ஒழுக்கமுடையவர்களாக உள்ளனர். உலகின் முதலாந்தர பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தை எமது படையினர் இன்று மண்டியிட வைத்துள்ளார்கள். இதில் முக்கிய பங்களிப்பை விமானப்படையினர் ஆற்றியிருக்கிறார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைத்தளபதிகள் அவர்களின் பாரியார்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்:- வடக்கில் எமது இராணுவ முகாம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது விமானப் படையினர் பாரிய சேவையை வழங்கியிருக்கிறார்கள். படையினர் போக்குவரத்து, கடல் கண்காணிப்பு போன்ற விடயங்களில் அளப்பரிய சேவைகளைப் புரிந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து நிலப்பரப்புகளை மீட்பதில் தரைப்படையினருக்குப் பக்கபலமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தரை, கடல் ஒரு பிரச்சினையே அல்ல. புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், தற்கொலைப் படகுகள் போன்றவற்றை அழிப்பதில் பாரிய பணியாற்றியிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வன் போன்ற தலைவர்கள் மெளனமாக்கப்பட்டபோது எமது விமானப்படையினரின் திறமைக்கே பாராட்டு கிடைத்தது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை 45 சதுர கிலோமீட்டருக்குள் முடக்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

sl-army.jpgஇலங்கை யின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டக் களமுனைகளில் வெவ்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வெள்ளியன்று இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப்புலிகள் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே தொடர்ந்து முன்னேறிவரும் இராணுவத்தினர், தற்போது விடுதலைப்புலிகளை 45 சதுர கிலோமீட்டர் பிரதேசத்தினுள் முடக்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு, பழமாத்தளன், தாமரைக்குளம், ஆகிய இடங்களில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் 32 சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும், ஆயுதத் தளபாடங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.