பெண்கள் கெளரவமாகவும், மரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவிப்பதற்கு அனை வரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் என்ற வகையில் புதிய உத்வேகத்துடன் எழுந்து நிற்கும் இந்த வேளையில் சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை விடுக்கக் கிடைத்தமையைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-“பெண் சமூகத்தின் கெளரவத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பெண்கள் மீதான இம்சைகளை ஒழிப்பதற்கு ஒன்றுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவது முக்கியமானதெனக் கருதுகிறேன்.
சமூக கட்டமைப்புக்கு வலுவூட்டும் குடும்பம் என்ற அங்கத்தின் முதன்மையான இடம் தாய்க்கு உரியதாகும். மஹிந்த சிந்தனையின் மூலம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று அவளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தாலும், வறுமையினாலும், மதுபானத்தாலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அரசாங் கம் இதனைப் புரிந்துகொண்டுள்ளது. “மதுவுக்கு முற்றுப் புள்ளி” வைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் நிம்மதி அடையும் பெண்கள் அநேகர்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.