அறிவு, ஆற்றல்மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றி னை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன் முறைகளை ஒழிக்க முடியுமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள சர்வதேச மகளிர் தின செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“பெண்களுக்கு எதிரான இம்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அணி திரளுவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூருவதற்கு எடுத்துள்ள முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெளத்த விழுமியங்களை பாதுகாத்துவந்த தாய்மார்களை புத்தர் நிலையில் வைத்து மதிக்கப் பழகியுள்ள எமது பண்டைய சமூக முறையை மீண்டும் உயிர்ப்பிக்க காலம் பிறந்துள்ளது என்பதனை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு எழுந்துள்ள தற்கான காரணம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய இம்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையாகும்.
பெண்களுக்கு எதிரான இம்சைகளை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் சொற் பொழிவுகள் திட்டங்கள் என்பவற்றை மேற்கொண்ட போதிலும், இதுவரையில் பெண்களுக்கு எதிரான அசாதாரணங்களை கட்டு ப்படுத்துவதற் கோ அல்லது பூண்டோடு இல்லாதொழிப்பதற்கோ இயலாது போயுள்ளது.
சட்ட திட்டங்கள், ஒழுங்கு விதிகள் என்பவற்றினூடாக மாத்திரம் இப்பணியினை நிறைவேற்ற முடியாது. அதற்காக மனிதர்களை ஆன் மீக உணர்வுகளின் மூலம் போசித்து அறிவு, ஆற்றல் மிக்க சிறந்த சிந்தனைகளைக் கொண்ட சமூகம் ஒன்றினை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
இங்கு இலங்கைப் பெண்களும் சமூக விழுமியங்களை கடைபிடித்து தமது வாழ்க்கை முறையை சீரமைத்துக்கொள்வதற்கு பழகிக்கொள்ளுதல் வேண்டும். மொத்த சனத்தொகையில் சுமார் 52% வீதமான பெண்கள் நாட்டின் தேசிய வருமானத்திற்கு பெற்றுத்தருகின்ற பாரிய பங்களிப்பினை இங்கு நினைவுகூருவதுடன் பெண்களுக்கு இம்சைகளின்றி உயிர்வாழ்வதற்கான சூழல் ஒன்றினை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
சர்வதேச மகளிர் தின நினைவு விழாவின் நடவடிக்கைகள் சகல வழிகளிலும் வெற்றியளிக்க வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.