23

23

பெரும்பான்மை சிங்களவர்களாலும் தொல்லியல்திணைக்களத்தாலும் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலம் திருக்கோணேச்சரம் !

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார்.

இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காசிக்கும், திருப்பதிக்கும் செல்கின்ற அரசியல்வாதிகள் அதே சிவபெருமான் வீற்றிருக்கும் திருகோணேஸ்வர காணியை அபகரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். இந்த தெய்வ நிந்தனையே நாடு வீழ்ச்சி நிலைக்கு செல்கின்றமைக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க,

நாடு இன்னும் பிரிந்து செயற்படுகிறது. ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர் என்றும் ஒவ்வொருவரும் வரலாறுகளை தெரிவிக்கின்றனர் என்றும் எனினும் வரலாறுகளை பற்றி சிந்திக்காமல், நடைமுறையை பற்றி சிந்திக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அகழ்வாராட்சி விஞ்ஞானமாகும் என்றும் எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விரைவில் திருகோணமலைக்குச் சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதே நேரம் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் திருகோணமலை ஆக்கிரமிப்பு தொடர்பில் குறிப்பிட்டார். “கிழக்கில்  திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அபகரிக்க இப்போது ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.. திருக்கோணேஸ்வரம் இலங்கையிலே இருக்கின்ற பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று. இது மிகப்பழமை வாய்ந்தது. இந்த நாட்டுக்கு விஜயன் வருவதற்கு முன்னதாகவே

பஞ்ச ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்றுஆசிரியர் சேர் போல் பீரிஸ் சான்றுரைத்துள்ளார்.

தற்போது அரசிலுள்ள இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் அங்கு வந்து மாவட்டக்காரர்களை அழைத்து சென்று ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுகின்றார்.  திருக்கோணேஸ்வ்ர் ஆலயத்தை அண்டியுள்ள இடங்களில் 58 கடைகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களே நடத்தி  வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இனவாதத்திணைக்களமே இலங்கை தொல்லியல்திணைக்களம் செயற்படுகின்றது.”- எம்.ஏ.சுமந்திரன்

“தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாக,தமிழ் மக்களுக்கு  எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.”என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில்  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்,

குருந்தூர் மலையில்  எங்களுடைய கட்சி உறுப்பினர்கள்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.தொல்லியல் திணைக்களம் சட்டவிரோதமாக அங்கு கட்டிடங்களைக் கட்டுவதை  எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  தொல்லியல் திணைக்களம் இப்படியாக எங்களுடைய மக்களின் நிலங்களை மிக மோசமான முறையிலே அபகரிக்கின்ற திட்டங்கள் சம்பந்தமாக பல தடவை பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேசியிருக்கின்றோம்.

600க்கு மேற்பட்ட ஏக்கர் வயல் காணிகளை அபகரிக்கின்ற இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதிபலனாக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதியோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சந்திப்பில் இது குறித்து பேசினோம். பணிப்பாளர் நாயகத்துக்கு தான் உடனடியாக அறிவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் இந்த தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாக,தமிழ் மக்களுக்கு  எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதே போன்று கிழக்கில்  திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அபகரிக்க இப்போது ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.. திருக்கோணேஸ்வரம் இலங்கையிலே இருக்கின்ற பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று. இது மிகப்பழமை வாய்ந்தது. இந்த நாட்டுக்கு விஜயன் வருவதற்கு முன்னதாகவே

பஞ்ச ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்றுஆசிரியர் சேர் போல் பீரிஸ் சான்றுரைத்துள்ளார்.

தற்போது அரசிலுள்ள இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் அங்கு வந்து மாவட்டக்காரர்களை அழைத்து சென்று ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுகின்றார்.  திருக்கோணேஸ்வ்ர் ஆலயத்தை அண்டியுள்ள இடங்களில் 58 கடைகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களே நடத்தி  வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதேவேளை அரசு ஜெனீவா விவகாரத்தில் 2012-2015 இல் ஒரு நிலைப்பாட்டையும் தற்போது ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது அரசின் இந்த இரட்டை நிலைப்பாடுகள் தவறானவை  என்றார்.

பகிடிவதையில் ஈடுபட்ட பேராதனை பல்கலைகழக பட்டதாரி மாணவர்கள் இடைநிறுத்தம் !

பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தில் இளங்கலை பட்டதாரிகளை தாக்கிய மூன்று பட்டதாரி மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சட்ட பீடத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் எப்போதுமே எந்த வடிவத்திலும் பல்கலைக்கழகத்தில், பகிடிவதை (ரேகிங் ) செய்வதை எதிர்த்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் சட்ட பீடத்தின் இளங்கலை மாணவர்கள் மீதான பகிடிவதை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சட்ட பீட இளங்கலை மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கலைப் பீடத்தின் மூன்று இளங்கலை மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், பகிடிவதையை கட்டுப்படுத்த, பொறிமுறை ஒன்று நடைமுறைப்படுதப்படுள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – ஆரம்பக்கல்விக்கூடங்களை நாடாத மாணவர்கள் !

ஆரம்பபாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை இழந்துவிட்டனர் அவர்களின் வருமானம் குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத்  பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நகரங்களை விட கிராமங்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆரம்பபாடசாலைகளில் இணைந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது 20மாணவர்கள் கல்விகற்ற வகுப்புகளில் தற்போது 15 மாணவர்களே கல்விபயில்கின்றனர் இதற்கு மேலாக கட்டணம் செலுத்த முடியாததால் சில மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டனர் என அவர்தெரிவித்துள்ளார்.

ஆரம்பபாடசாலை ஆசிரியர்கள் குறிப்பிட்ட கட்டணங்களை கேட்காத போதிலும் ஆசிரியர்களை எதிர்கொள்வதற்கான தயக்கம் காரணமாக பெற்றோர் ஆரம்பபாடசாலை மாணவர்களை பாடசாலைகளிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளஇலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இந்த நிலை தொடர்ந்தால் இலங்கையின் கல்வி துறை பாதிப்புகளை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 10 பேர் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு சென்ற காவல்துறையினர் போதையில் இருந்த 10 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஐ.நாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் !

இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி The Island  பத்திரிகை இது தொட்பாக நேற்று (21) செய்தி வௌியிட்டுள்ளது.

மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள்  உள்ளிட்ட  அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1987 ஜூலை முதல் 1990  மார்ச் வரையான காலப்பகுதியில்  இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால்,   இந்தியாவின் பொறுப்புக்கூறல் எவ்வாறு அமையும் என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே  மீனாக்ஷி கங்குலி இந்த கருத்துகளை வௌியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, UN Advocacy, FORUM-ASIA, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) சார்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்சவுக்கான மலசலகூடத்துக்காக மட்டுமே 600 கோடி ரூபா – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

“ தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”.என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய(22.09.2022)  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பாளராக இருந்த போது 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது. இதற்கு பினனர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவிற்கு சிறிலங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர். மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும். கசிப்பு விற்பனை செய்தாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும். அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது. எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”, எனக் குறிப்பிட்டார்.

மருத்துவ உபகரண பற்றாக்குறையால் புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து – சபையில் சஜித்பிரேமதாச !

சுகாதாரத் துறைக்குத் தேவையானளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை போதியளவு வழங்கும் விடயத்தில் இன்று அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், அதிலும்,புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகளினால் அதிகளவான புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று(22) பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்விய எழுப்பிய வன்னமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறப்பான சுகாதார சேவையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் சுகாதார துறைக்கு போதுமான மருத்துவ உபகரணங்களை அரசாங்கத்தினால் விநியோகிக்க முடியாதுள்ளது.

அத்துடன் புற்றுநோயாளர்களுக்கு தேவையான கதிர்வீச்சு உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் அந்த நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அரச சுகாதார துறையில் ஆளணி முகாமைத்துவமும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதன்படி சில விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

புற்றுநோய்க்காக பயன்படுத்தும் எலக்டா கம்பக்ட், எலக்டா செலர்ஜிக் பிளட்போர்ம், எலக்டா செலர்ஜி கதிர்வீச்சு உபகரணங்களை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக 2013 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதா? அந்த ஒப்பந்தத்தை சபையில் முன்வைக்க முடியுமா? அந்த உடன்படிக்கை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விநியோக தரப்பினருடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் குறைந்த விலையில் அந்த உபகரணங்களை வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான உபகரணங்களை கொண்டு வந்து மோசடிகளை செய்து, தவறுகளை சரி செய்வதற்காக புதிதாக அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடாக மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெற்றுள்ளனர். அந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலை சீர் செய்ய எடுத்த நடவடிக்கை இப்போது செயற்படுத்தப்படுகின்றதா?

தரமான உபகரணங்கள் இல்லாமையினாலும் போதுமான கதிர்வீச்சு உபகரணங்கள் இல்லாமையினாலும் வருடாந்தம் காப்பற்றாக்கூடிய ஐயாயிரத்திற்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் அறிந்துள்ளதா? அப்படியாயின் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்யவும், அதற்கான கட்டிடத்திற்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமா? என்றார்.