2021

2021

மூச்சுக்காற்றை பரிசோதித்தே கொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு புதிய பல  பரிசோதனைகளை உலகின் பல  ஆராய்ச்சி நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. பல முறைகள் வெற்றியளித்து நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனாவுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட முகக்கவசம் மூலமே மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.

அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.

சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜூனில் எகிறிய கொரோனா சாவு; ஆராய நிபுணர் குழு

இலங்கையில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 1500 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தக் கணிசமான அதிகரிப்புக்கான காரணத்தை ஆராய்வதற்காக சுகாதார நிபுணர்களைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் இலங்கையில் மே மாதத்தில் 806 கொரோனா உயிரிழப்புக்களும், ஏப்ரல் மாதத்தில் 110 கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடி மக்களுக்கு தடுப்பூசி

இலங்கையின் பழங்குடியின மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி முதலாவது தடுப்பூசியை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவே பெற்றுக்கொண்டார். கண்டியிலுள்ள வழிபாட்டுத் தலமொன்றில் வைத்து இவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவுள்ள பெரகர நிகழ்வில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமையால் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Read More …

மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லை அதிகரிப்பு

அரச மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த வயதெல்லை 61ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தினமான ஏப்ரல் 20, 2021 முதல் இவ்வறிப்பு ஓய்வூதிய பிரமாணத்தில் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர்களில் அனைத்துத் தரங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டாவை எதிர்க்கும் மொடர்னா தடுப்பூசி

இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா வகைக் கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்காவின் மொடர்னா கொரோனாத் தடுப்பூசி வினைத்திறனுடன் செயற்படுகிறது எனத் தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது என மொடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி டெல்டா திரிபுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்புடலை பிறப்பிப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட பீட்டா (Beta) திரிபுக்கு எதிராக மொடர்னா வினைத்திறன் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடி அதிகரிப்பு !

சீனாவின் வூகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.71 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை !

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.

இதையடுத்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா கோர்ட்டை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை – 70க்கும் மேற்பட்டவர்கள் பலி !

கனடாவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் அதிக வெப்பத்தினால் கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரையில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் வயதானவர்கள்.

நேற்றையதினம் கனடாவின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலையான 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை, பிரிட்டிஸ் கொலம்பியாவின் லிட்டன் நகரில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் மீள அதிகரித்துள்ள கொரோனாத்தொற்று !

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு  இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 47.55 லட்சத்தைக் கடந்துள்ளது.
மொத்தமாக கொரோனா வைரசால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,103 ஆக உள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து 43.19 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதே நேரம்  உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.21 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.67 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.44 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம் – தென்னாபிக்காவில் புதிய சட்ட முன்மொழிவு !

தென்னாபிரிக்காவில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம் என்ற  முன்மொழிவு ஒன்றினை அந்நாட்டு அரசாங்க் வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் புரிவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் சட்டத்திற்கு எதிராக தென்னாபிரிக்காவின் பழமைவாதக் குழுக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.

திருமணச் சட்டங்களில் மே மாதம் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.

தென்னாபிரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டபூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் சாதகமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த விஷயம் தொடர்பான பொது விவாதத்திற்கான அழைப்புதான் இந்த அறிக்கை.

ஏற்கனவே அங்கு ஆண்கள் பல திருமணங்கள் புரிவது சட்டபூர்வமானது தான். என்றாலும் தற்போது பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவு பல எதிர்மறை விமர்சனங்களை கிளப்பியுள்ளன.

தென்னாபிரிக்காவில் உள்ள தற்போதைய திருமணச் சட்டம் பாலின பாகுபாடுடன் உள்ளது. எனவே அதில் சமத்துவத்தை கொண்டு வர சட்டத்தை சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் முன்மொழிந்தனர்.

இருப்பினும் பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவை கன்செர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழமைவாத குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தென்னாபிரிக்காவில் இதை பெரிதும் எதிர்ப்பவர்களில் அந்நாட்டின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரமான முசா செலேகு நான்கு திருமணம் செய்தவர் என்பது ஆச்சரியம்.

செலேகு தொலைக்காட்சியில் பிரபலமானது அவருக்கு நான்கு மனைவிகள் இருக்கும் காரணத்தால் தான். அவரின் குடும்பம் குறித்த அந்த நிகழ்ச்சியால் தான் நட்சத்திரமானார் செலேகு.

தனது வலையொளி காணொளியில் தான் சமத்துவத்தை எதிர்ப்பவன் இல்லை என்று தெரிவிக்கும் அவர் பெண்கள் பலதாரம் புரிந்தால் அவர்களின் குழந்தைகளின் நிலை குறித்து பெரிதும் கவலைப்படுவதாக தெரிவித்தார்.

எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் பெண் நல ஆர்வலர்கள், சமூக பணியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த முடிவை பெண் ஆர்வலர்கள் பலர் ஒரு மைல் கல்லாகதான் பார்க்கின்றனர்.

மே மாதம் திருமணச் சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.

இதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு முடிவு என்கின்றனர். பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு எனவே பல கணவர்களை கொண்டிருப்பது ஒரு தேர்வாக இருக்க வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதை எதிர்ப்பவர்கள் பலரும் கலாசாரத்தின் பக்கம் கைகாட்டினர்.

திருமண சட்டத்தில், குழந்தைகள் திருமணங்களை தடுக்கும் வகையில் திருமணத்திற்கான குறிப்பிட்ட வயது, பல்வேறு பாலினத்தவர்கள், மதங்களை சார்ந்தவர்கள், கலாசார நம்பிக்கை கொண்டவர்களின் திருமணங்களை சட்ட ரீதியாக்குவது போன்ற மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

ஏனென்றால் தென்னாபிரிக்காவில் இந்து, யூத, முஸ்லிம், ரஸ்டாஃபாரியன் திருமணங்கள் சட்டப்பூர்வமானதாக கருதப்படுவதில்லை. அதேபோன்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாகவும் அது இல்லை எனவேதான் இந்த மாற்றங்களை அதிபர் சிரில் ராம்ஃபோசாவின் அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. ஜூன் மாத இறுதி வரை தென்னாபிரிக்க மக்கள் இதுகுறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

ஆர்வலர்கள், பாரம்பரிய குழுக்கள், மத தலைவர்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் இருபால் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்கப்பட்டுதான் இந்த பச்சை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் தற்போது உள்ள திருமணச் சட்டம் என்பது 1961ஆம் ஆண்டு கறுப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு மேலோங்கி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி கிறித்தவ முறை திருமணங்கள் மட்டுமே சட்டப்படியாக செல்லும்.

1994ஆம் ஆண்டுக்கு பிறகு திருமணச் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அது அனைவருக்குமானதாக இல்லை என்றும் போதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் இந்த சட்ட முன்மொழிவின் போது உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.