இலங்கையில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 1500 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தக் கணிசமான அதிகரிப்புக்கான காரணத்தை ஆராய்வதற்காக சுகாதார நிபுணர்களைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் இலங்கையில் மே மாதத்தில் 806 கொரோனா உயிரிழப்புக்களும், ஏப்ரல் மாதத்தில் 110 கொரோனா உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.