மூச்சுக்காற்றை பரிசோதித்தே கொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்.

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு புதிய பல  பரிசோதனைகளை உலகின் பல  ஆராய்ச்சி நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. பல முறைகள் வெற்றியளித்து நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் கொரோனாவுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட முகக்கவசம் மூலமே மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன.

அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.

சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *