இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா வகைக் கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்காவின் மொடர்னா கொரோனாத் தடுப்பூசி வினைத்திறனுடன் செயற்படுகிறது எனத் தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது என மொடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி டெல்டா திரிபுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்புடலை பிறப்பிப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட பீட்டா (Beta) திரிபுக்கு எதிராக மொடர்னா வினைத்திறன் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.