அரச மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த வயதெல்லை 61ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தினமான ஏப்ரல் 20, 2021 முதல் இவ்வறிப்பு ஓய்வூதிய பிரமாணத்தில் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர்களில் அனைத்துத் தரங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.