October

October

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

ம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார்.

இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

obamas.jpgஅடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு, அமெரிக்கா அதிக ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மும்பை, அமிர்தசரஸ், டில்லி உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒபாமா பங்கேற்கவுள்ளார். மும்பையில் கடந்த 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், “அதிபரின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்:- கனடாவில் கலந்துரையாடல்

Senthiveel_Si_Kaதீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்: ஒரு போராளியின் பார்வையில் என்ற தலைப்பில் தோழர் சி கா செந்திவேல் அவர்களின் உரையும் கலந்துரையாடலும் கனடா ஸ்காபொறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேடகம் – தமிழர் வகைதுறைவள நிலையம் இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிலும் இரண்டறக்கலந்தவர் தோழர் சி. கா. செந்திவேல். 1963ல் தனது இருபதாவது வயதிலேயே கொம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், 1965ம் ஆண்டு முதல் தன்னை கட்சியின் முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் 1989ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தேடகம் குழுவினர் அனைவரையும் அழைத்துள்ளனர்.

சி.கா.செந்தில்வேல் எழுதிய நூல்கள் :
1. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்
2. புதிய ஐனநாயகமும் போராட்ட மார்க்கமும்
3. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்.
4. கைலாசபதியும் சமூகப் பங்களிப்பும்.
5. மனிதரும் சமூக வாழ்வும்.

Senthiveel_Si_Kaகுறிப்பு: 45 வருட இடதுசாரி அரசியல் வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் கொண்ட ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவம் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானதாகிறது. அந்த வகையில் தோழர் சி. கா. செந்தில்வேல் அவர்களின் இந்நேர்காணல் ஜனவரி 6, 2008ல் தேசம்நெற் இணையத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. அதன் pdf இணைப்பு: Senthiveel Interview_Book

நிகழ்வு விபரம்:
Saturday, October 23rd 2010 @4:30P.M
Mid Scarborough Community Centre
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)

Contact:
thedakam@gmail.com
0014168407335

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு யூரேன் (U-turn)

TNAநல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நல்லிணிக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீ ஆனந்தசங்கரி ஆகியோரின் வழியைக் கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளது. வழமையாக காலம் கடந்து ஞானோதயம் பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தடவை குறித்த காலத்திற்குள் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சிபார்சுகள் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இல்லாத போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணமாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னதாக லண்டனில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த வீ ஆனந்தசங்கரி நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தோன்றிச் சாட்சியளிக்க ததேகூ தயங்கலாம் எனவும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். சில சமயம் நேரில்சாட்சியம் அளிக்காமல் எழுத்தில் தங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்பி விட்டு இருந்துவிடுவார்கள் எனவும் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சாட்சியங்களில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று சனிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள், தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இன்னல்கள், தமிழ் மக்களின் வரலாறு, அவர்களின் அபிலாசைகள் ஆகிய விடயங்கள் கூட்டமைப்பின் சாட்சியங்களில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ததேகூ நேரடியாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போதும் ஏன் அவர்களை விடுவிக்கும்படி ததேகூ கோரவில்லை போன்ற கேள்விகள் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்கப்படும். மேலும் புலிகளுக்கும் ததேகூ க்கும் இருந்த உறவு பற்றியும் பல சிக்கலான கேள்விகள் கேட்கப்படலாம்.

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பம்! பிரபா கணேசன்.

Praba_Ganesan_MPகொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோருகின்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு செட்டியார்தெரு தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது.  மேலும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடமோ மக்கள் பிரதிநிதிகளிடமோ சென்று முறைப்பாடு செய்ய அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தைரியமாக செயற்பட்டால் தான் இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் செட்டியார்தெரு வாத்தகரை கடத்திச் சென்று கப்பம் கோரியவர்களை குற்றப்புலனாய்வப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், இவ்வாறு கப்பம் கோருபவர்களை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முன்வரவேண்டும் எனவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் தமிழ் வர்த்தகர்களை கடத்திச் சென்று கப்பம் கோரும் சம்பவங்கள் தங்களது கடும் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னியில் கைவிடப்பட்ட தங்களது உடமைகளை மீட்டு வருவதில் சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Wanni_IDP_Homeவன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது தமது உடமைகளை கைவிட்ட மக்கள் அவற்றை மீட்கும் விடயத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியின் மேற்குப் பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் போது தங்களது உடமைகளையும் முடிந்தவரை எடுத்துச் சென்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடமைகள் விசுவமடுவிலிருந்து உடையார்கட்டு, சுதந்திரபுரம், இரணைப்பாலை என பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போர் நடைபெற்ற மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பகுதிகளில் பொதுமக்களின் வாகனங்கள் உட்பட குறைந்தளவு பொருட்களே கொண்டு செல்லப்பட்டன . வன்னியில் மீள்குடியேற்றம் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களால் கைவிடப்பட்ட பொருட்களை மீட்டுவர முயன்று வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் படையினரின் பாதுகாப்பு அனுமதி தேவை. இதனை அரசாங்க அதிபர்களுக்கூடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

Wanni_IDP_Homeகிளிநொச்சி மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும் பொதுமக்கள் தங்களது உடமைகள் வைக்கபட்டுள்ள பகுதிகளில் சென்று பார்வையிட்ட போது வீட்டுக்கூரைகள் உட்பட பல பொருட்கள் காணாமல் போன நிலையில் வெறும் கையுடன் திரும்பி வந்தனர். ஒருசில பொருட்கள் மட்டும் அவர்களால் மீட்டு வரப்பட்டன. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் உடமைகளை மீட்டுவர அப்பகுதிகளுக்குச் செல்கின்ற போது அவர்களின் உடமைகளை எடுத்து வருவதற்கு அங்குள்ள படையினர் தடைவிதிப்பததாக மக்கள் கூறுகின்றனர்.

முல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் விவசாயிகளின் நீர்இறைக்கும் இயந்திரங்கள், மண்வெட்டி போன்ற தங்களால் கைவிடப்பட்ட விவசாய உபகரணங்களை எடுத்துச்செல்ல அங்கிருக்கும் படையினர் அனுமதி மறுப்பதாகவும், இரும்புப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் விவசாய உபகரணங்களை எடுத்து வரவே மிகச் சிரமப்பட்டு MoD எனப்படும் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெறப்பட்டு, குறித்த இடங்களுக்கு தமது பொருட்களைக் கொண்டு வர வாகனங்களையும் வாடகைக்கு அமர்த்தி செல்கின்ற போதும்  அங்குள்ள படையினர் தங்களின் பொருட்களை எடுத்துச் செல்ல இடம்கொடுப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் கொள்ளை ஐவர் கொண்ட ஆயுதக் கோஷ்டி கைது

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த கிரானைச் சேர்ந்த ஐவர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கையடக்கத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக கிரான் கும்புறுமூலை கிண்ணையடி பகுதிகளில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளையிட்டு வந்த இந்தக்கோஷ்டி தாங்கள் கொள்ளையடித்த கையடக்கத்தொலைபேசிகளை விற்பனை செய்யும் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் கடந்த 10 ஆம் திகதி இவர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் மூவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 18 தொடக்கம் 25 வயதுடையவர்கள். திருமணமானவர்கள். கிரான் பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் உறவினர்கள். மேற்படி பகுதிகளில் இவர்கள் கொள்ளைகளை மேற்கொண்டு வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து ரி.56 ரகதுப்பாக்கி ஒன்றும் 25 ரவைகளும் கையடக்கத்தொலைபேசிகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் காலமானார்

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான எஸ்.விஜயகுமாரன் (வயது 55) நேற்று சனிக்கிழமை முற்பகல் மாரடைப்பினால் காலமானார். இவரது பூதவுடல் அட்டன் நகரிலுள்ள மல்லியப்பூ வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் திங்கட்கிழமை கொட்டகலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயச்சந்திரன் தெரிவித்தார். நெஞ்சுவலி காரணமாக அவர் நேற்று காலை உறவினர்களால் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முற்பல் 10 மணியளவில் காலமானார்.

லிந்துலை நாகசேனைதோட்டத்தில் பிறந்த இவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கல்விகற்ற பின் பட்டதாரியானார். இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரியாக பணியாற்றினார்.1993 ஆம் ஆண்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்காக தோள்கொடுத்தவர். கடந்த நான்கு வருடமாக செயலாளர் நாயகமாக பணியாற்றிய இவர் இதற்கு முன் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் உயர் பீட உறுப்பினராகவும் இருந்தார். இவரது திடீர் மறைவு கட்சிக்கும் மலையக மக்களுக்கும் பெரும் இழப்பாகுமென மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஒருநாள் போட்டியில் இருந்தும் முரளிதரன் ஓய்வு

muralidharan.jpgஇலங்கை அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு பிரவேசித்த முரளிதரன் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் தாண்டித்தான் கிரிக்கெட் உலகில் தனது இடத்தை நிலை நாட்டியிருந்தார். முரளிதரனைப் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் இலங்கை அணிக்கு மட்டுமல்ல உலக அணிக்கும் கிடைக்கமாட்டார்.

முரளிதரன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் அதாவது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்துள்ளார்.

இவரது ஓய்வு அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் காலத்தின் கட்டாயம் அவர் ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவரது உடற்தகைமை, குடும்ப நோக்கம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் எனப் பல காரணங்கள் உண்டு. எது எப்படியோ முரளிதரன் ஓய்வு பெற்றாலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அவரை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.

முஸ்லிம் கைதிகள் விவகாரம்: மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச் சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.