கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பம்! பிரபா கணேசன்.

Praba_Ganesan_MPகொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோருகின்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு செட்டியார்தெரு தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது.  மேலும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடமோ மக்கள் பிரதிநிதிகளிடமோ சென்று முறைப்பாடு செய்ய அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தைரியமாக செயற்பட்டால் தான் இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் செட்டியார்தெரு வாத்தகரை கடத்திச் சென்று கப்பம் கோரியவர்களை குற்றப்புலனாய்வப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், இவ்வாறு கப்பம் கோருபவர்களை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முன்வரவேண்டும் எனவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் தமிழ் வர்த்தகர்களை கடத்திச் சென்று கப்பம் கோரும் சம்பவங்கள் தங்களது கடும் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    “கப்பம் கோரும் சம்பவங்கள் தங்களது கடும் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது”

    மனோ கணேசன் என்று சொல்ல வருகிறீர்களா?

    Reply