27

27

கரையோர ரயில் சேவை அஹங்கமை வரை

train_.jpgஅவசர திருத்த வேலை காரணமாக தெற்கு ரயில் சேவை மூன்று தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 29 ஆம் திகதி அதிகாலை 3 மணி வரை கரையோர ரயில் சேவைகள் அஹங்கம ரயில் நிலையம் வரை மட்டுமே இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அஹங்கமவுக்கும் வெலிகமைக்கும் இடையிலான ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் இடம்பெறுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது 

தோட்டப்புற தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை

பெருந் தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்னும் இவை தமக்கு வழங்கப்படாமை குறித்து தபால் சேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது, தமது சொந்த சைக்கிள்களையே கடமையின்போது பயன்படுத்திவரும் இவர்களுக்குச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தோட்டப்பகுதிகளில் கடிதங்களைச் சேகரிக்க ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் தபால் பெட்டிகளைப் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் இன்னும் அவை பொருத்தப்படவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் நான்கு பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதினாறு பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஏழு பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே, தபால் திணைக்களம் இவர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பனவற்றை வழங்க முன்வருவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இரண்டாம் கட்டத்திலான தபால் சேவகர்களையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தபால் சேவகர்களைச் சேர்த்துக்கொள்ளும் முகமாக வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் உரியமுறையில் தோட்ட இளைஞர்களிடையே போய்ச் சேரவில்லையெனவும் இதனால், தகுதியும் திறமையும் இருந்தும் பலர் நியமனம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்தவாரம்

chals_.jpgவவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மற்றும் பூவரசங்குளம் பிரதேசங்கள் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

மீள்குடியமர்த்துவதற்காக சுமார் 800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நேற்று பிற்பகல் கூட்டமொன்றும் நடைபெற்றது. வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது வவுனியா மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரச அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை நிவாரணக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

வவுனியா மாவட்ட கல்வி வலயத்தின் 17 பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் நலன்புரி நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த நிலையங்களில் இருந்த மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள ப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரண்டு பாடசாலைகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டம், எலிக் காய்ச்சல் டெங்கு அதிகரிப்பு * டெங்கு – மூவர் பலி; 515 பாதிப்பு * எலிக் காய்ச்சல் – இருவர் பலி; 263 பாதிப்பு

aedes_aegypti.jpgமாத்தளை மாவட்டத்தில் டெங்கு, மற்றும் எலிக் காய் ச்சல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன. இது வரை டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட மூவரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட இருவரும் உயிரிழந்துள்ளதாக மாத் தளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இம்மாவட்டத் தில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 515 பேரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட 263 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் உக்குவளை பிரதே சத்திலேயே மிகக் கூடுதலான எண்ணிக் கையானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இது வரைக்கும் 161 பேர் இந் நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். அதே சம யம் எலிக் காய்ச்சல் இம் மாவட்டத்தில் இறத்தோட்டை, பள்ளேபொள, யடவத்த, தம்புள்ள, ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமாக பரவி வருகின்றது.

தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் மேற்படி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.