இலங் கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.
(1வது இணைப்பு)
பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறத்தக் கோரி 6 ஆயிரம் தமிழர்கள மறியல்ப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று 6ம் நாள் ஏப்ரல் 2009 பகல் 12 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை நீடித்த இந்தப் போராட்ம் இரவு லண்டன் பொலீசார் தமிழ்மக்களை பாராளுமன்ற முன்றலிருந்து வெளியேறும்படி கேட்டும் சில வன்மைத்தனமான முயற்ச்சிகளையும் செய்துள்ளனர், தமிழ் மக்கள் எல்லாவித முயற்ச்சிகளையும் சாமாளித்து இன்று பகல் வரையில் தொடர்ந்து இந்த மறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதே வேளை லண்டனில் உள்ள மற்றைய மக்ளையும் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளனர்; நேற்று இரவு ஜரோப்பாவின் இதர பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் இப் போராட்டத்திற்கு பங்கு பற்ற பஸ்கள் மூலம் வருகை தந்துள்ளனர்.
இந்த பாராளுமன்ற முன்றலில் குழந்தைகள், முதியவர்கள், பாடாசாலை மாணவர்கள் என கிட்டத்தட்ட 6ஆயிரம் பேர்கள்வரையில் பங்கு பற்றியுள்ளனர். இப்போராட்ட ஏற்ப்பாட்டாளர்கள் இந்த போராட்டம் பிரித்தானியா, இலங்கைத் தமிழர்களின் இன அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
(2வது இணைப்பு)
பிரித்தானிய பாராளுமன்ற முன்றல் ஆர்ப்பாட்டத்தில் மோதல்.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடிகள் மற்றும் சில பொருட்கள் வீசப்பட்டமையால் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் சற்று நேரம் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
(3வது இணைப்பு)
பிரித்தானியாவில் இருவர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்
இலங்கையில் இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
1) இலங்கையில் உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்
2) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்துத் தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்துப் பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்,
3) வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்,
4) இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,
5) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் –
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி இரு இளைஞர்களும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் இளைஞர்கள் இருவர் தொடங்கியுள்ள இந்த சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் தமிழர்களின் எழுச்சி ஒரு கொந்தளிப்பு மிக்க நிலையை எட்டியிருப்பதாக இணையதள செய்தி ஒன்று கூறுகின்றது.
(4வது இணைப்பு)
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானிய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் இடம்பெறும் போரினை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான தமிழர்களின் இப்போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 400 பேர்வரை தொடர்ந்தும் போராட்டத்தினை மேற்கொள்வதாக பிபிசி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.
போராட்டத்தின் போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்வாழ் தமிழர்கள் மேற்கொள்ளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரைக் கைது செய்யாது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்களுடன் செவ்வாய்க்கிழமை தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக மெற்றோபொலிடன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இம்முயற்சி பலனளிக்காது இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்களின் இப்போராட்டம் தொடர்கிறது.
அதேவேளை விடுதலை புலிகள் அமைப்பு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகையால் ஆர்ப்பாட்டத்தின் போது அதன் கொடிகள், இலச்சினைகளைப் பயன்படுத்த வேண்டாமென பொலிஸார் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
(5வது இணைப்பு)
இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த இங்கிலாந்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 6ஆம் தேதி மதியம் துவங்கிய ஆர்ப்பாட்டம், தற்போது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும், பகலும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை தீவிரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
(6வது இணைப்பு)
இலங் கையில் உடனடியானதும்இ நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிஇ பிரித்தானியா நேரப்படி இன்று 11th April 2009 பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழ்ர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.
தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்
வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்
தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்
A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்