ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை லிபியா புறப்பட்டுச் செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் முதற்தடவையாக லிபியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.
லிபியா அரசாங்கத்தால் கடந்த வருடம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்த இது வழிவகுக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருடனும் அரசாங்கத்துடனும் பல பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளார்