April

April

இலங்கை தூதரக உறவை சோனியா காந்தி துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் கண்டன போராட்டம் நடத்தப்படும் : பாரதிராஜா

bharathi-raja.jpgஇலங்கை தூதரக உறவை துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் சோனியா காந்தி அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.

ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும். திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானம்: “ரிவிர” பத்திரிகை தகவல்

army-wanni.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை அருகே விடுதலைப்புலி கைது: விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்

images-army.jpg இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் ஊடுருவலாம் என்றும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசாரும், கடலோர காவல்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ந் தேதி அன்று திருவான்மியூரில் சயந்தன் என்ற விடுதலைப்புலியும், அவரது கூட்டாளிகளான குகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சயந்தன் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார். இங்கிருந்து விடுதலைப்புலிகளுக்காக இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த தகவல் தெரிந்து கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சயந்தனை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக பொருட்களை கடத்துவதற்கு மூர்த்தி என்ற முத்தண்ணா (வயது 39) என்ற நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. முத்தண்ணா கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவி ஒன்றும், 2 செயற்கைகோள் செல்போன்களும், 4 சாதாரண செல்போன்களும், இந்தியா-இலங்கை இடையிலான கடல்வழி வரைபடமும் கைப்பற்றப்பட்டது. ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முத்தண்ணாவிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தனது 26-வது வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்ததாகவும், தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக மருந்து போன்ற பொருட்களை கடத்தி செல்வதற்காக தமிழகம் வந்ததாகவும் முத்தண்ணா தெரிவித்தார். அவர், இலங்கையில் உள்ள விசுவமடு என்ற இடத்தை சேர்ந்தவர். தீவிர விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் முத்தண்ணா சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இலங்கை விவகாரம் குறித்து 29இல் ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வு

hller.jpgஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்øகப் பிரச்சினை குறித்து ஆராயப்படவுள்ளது. ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் விவகாரங்களுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயற் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சந்திக்கும்போது இலங்கை, மியன்மார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவரும் பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான தலைவருமான குளோட் ஹெல்லர் தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவதை அனுமதிக்கும் எண்ணம் எதுவும் மெக்ஸிகோவிடம் இல்லை என மெக்ஸிகோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொமஸ் ரொபெல்டோ தன்னிடம் கூறியதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அது சரியான தகவல் அல்ல என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவர் ஹெல்லர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விடயத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு தொடர்பான கரிசனை உள்ளது என நாம் மிகத் தெளிவாக உள்ளோம். எந்தவொரு நாடும் தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அல்லது பாதுகாக்காவிட்டால் அதை செய்தவற்கு சர்வதேச சமூகம் தலையிட முடியும் என்ற “பாதுகாப்பதற்கான கடப்பாடு’ (R2P) எனும் கோட்பாடு ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஹெல்லர் கூறியுள்ளார்.

பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனது நல்ல நண்பர்- கருணாநிதி : பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

karunanidhi-prabhakaran.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

jayalalitha.jpgஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.

இரானிய அமெரிக்க செய்தியாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

rokchana.jpgஉளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்த வழக்கு தனியறையில் நடத்தப்பட்டது. வழக்கின் ஆதாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த தண்டனையை மிகவும் கடுமையான தண்டனை என்று பிபிசி கூறியிருக்கின்றது. சபரி முன்னர் பிபிசிக்காக செய்திகளை வழங்கியிருந்தார்.இந்த வழக்கின் முடிவுகள் குறித்து இரானிய நீதியமைச்சில் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.

கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட சபரி அவர்கள், முதலில் சட்டவிரோதமாக பணியாற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு அமெரிக்காவுடனான உறவுகளில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று இரானில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.

மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சியில் சிறிய முன்னேற்றம்

vijaynambiar.jpgஐ.நா.  செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் விஜே நம்பியார் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது.

“அரச அதிகாரிகளுடன் அவர் (நம்பியார்) மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக மோதல் பகுதியில் தற்போது சிக்கியுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம்’ என்று பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

“ஆனால் அந்த முயற்சிகள் மேலும் தொடரவேண்டிய தேவை இருப்பதாகவும் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

இரு வேறுபட்ட மட்டங்களில் ஐ.நா. வின் முயற்சி சம்பந்தப்பட்டது. கனரக ஆயுதங்களையும் மற்றும் ஆட்லறிகளையும் பிரயோகிக்க வேண்டாம் என்று இலங்கை அரசை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திக் கேட்டுவருகிறோம். அப்பாவிப் பொதுமக்கள் வெளியேறுவதற்கான முயற்சிகளில் ஓரங்கமாக இதனை நாம் மேற்கொண்டுள்ளோம்’ என்று ஹக் கூறியுள்ளார்.

“முயற்சியின் மற்றொரு பகுதியாக, பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் இடமளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்புடனும் இது தொடர்பாக பகிரங்கமான அறிக்கைகள் மூலம் நாம் முயற்சிகளை மேற்கொண்டுளோம் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் நம்பியார் தொடர்பு கொண்டுள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, “இந்தத் தருணத்தில் என்னால் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை’ என்று ஹக் கூறியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.

மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பாக ஐ.நா.ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோரின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் மோதல் வலயப் பகுதிக்குள் இருப்போரின் நிலைமையைப் போன்றே கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் ஹக் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

election.jpgகடந்த மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அவ்வமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்;

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த போதும் எம்மால் 47 சம்பவங்களையே உறுதிசெய்ய முடிந்துள்ளது. இதில் 37 சம்பவங்கள் பெரியளவானதாகும்.

அதாவது கம்பஹாவில் ஜே.வி.பி. உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆதரவாளர் பலியாகி மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன் மேலும் 16 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் பதிவுசெய்துள்ளோம்.

நாம் சிறிய சம்பவங்களாக 10 முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். இது சட்டவிரோத முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன அடங்குகின்றன.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மொத்தமாக நாம் 47 முறைப்பாடுகளைப்பெற்ற நிலையில் மேல்மாகாண சபையில் தேர்தல் நடைபெற 6 தினங்கள் இருக்கையில் 47 முறைப்பாடுகளைப்பெற்றுள்ளோம். எனவே கடந்த மாகாண சபை தேர்தலுடன் இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் சமனாக உள்ளபோதும் தேர்தல் நெருங்கும் போது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கொணாமுல்லையில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவரது சடலம்

அக்மீமன நுகேகந்த கொணாமுல்லைப் பகுதியில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களில் ஒரு சிறுமியினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி 10 வயதுடைய சிறுமியினது சடலம் காணாமல் போன இரு சிறுவர்களின் வீடுகளுக்கிடையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இரு சிறுவர்களும் கடந்த 15 ஆம் திகதி சைக்கிளுடன் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்திய வேளையிலேயே சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை மற்றும் விசாரணைகளில் பொலிஸார் மோப்ப நாய்களையும் மகளிர் பொலிஸ் பிரிவுகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். இதன் போது சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரணை நடத்த ஆரம்பித்த பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை நடத்திய சோதனையிலேயே முதலாவது சிறுமியினது சைக்கிளைக் கண்டெடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் குப்பைகளை தோண்டிய போது காணாமல் போயிருந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது கொலையாக இருக்கலாமென சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பிரதாபசிங்க சந்தேகம் வெளியிட்டார். இதேவேளை, பொலிஸார் விசாரணைகளையும் சோதனைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட லண்டன் ரைம்ஸ் பத்திரிகையாளர்

london-times.jpgகொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. “இந்த வழியால் வாருங்கள்’ என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கணினியில் என்னைப்பற்றிய விபரத்தை அவரின் சகா ரைப் செய்தார்.

அவரின் திரையில் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என்று வந்தது. எனது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தடுப்பு அறைக்கு காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டேன்.

இரவு முழுதும் பூட்டி வைத்துவிட்டு மறுநாள் திருப்பி அனுப்பப்பட்டேன்.

நான் வியப்படைந்தேன் என்று என்னால் கூற முடியாது. சீனா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் தெற்காசியாவில் 12 வருட செய்தி நிருபராக பணியில் ஈடுபட்ட நான் முதலாவதாக திருப்பி அனுப்பப்பட்ட போதும் நான் ஆச்சரியமடைந்தேன் என்றும் கூறமுடியாது என்று லண்டன் ரைம்ஸ் பத்திரிகையின் தெற்காசியாவுக்கான நிருபர் ஜெரமி பேஜ் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக “தமிழ்புலி மோதல் தொடர்பாக செய்தி சேகரிப்பதிலிருந்தும் எவ்வாறு நான் தடுக்கப்பட்டேன்’ என்ற தலைப்பில் “லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பல்வேறுபட்ட விண்ணப்பங்களின் மத்தியிலும் ஆகஸ்டின் பின்னர் இலங்கைக்கான பத்திரிகையாளர் விசா எனக்கு மறுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்களாக சுயாதீனமான பத்திரிகையாளர்கள் தமிழ்புலிகளுக்கு எதிரான இராணுவநடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிப்பதை இலங்கை அரசாங்கம் தடுத்திருந்தது.

அதனால் உல்லாச பயணியாக செல்ல முயற்சித்தேன். மோதல் சூன்யப் பகுதியில் ஐ.நா. புள்ளி விபரத்தின் பிரகாரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் அகப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக எழுத முயற்சித்தேன்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உல்லாசப் பயணிகளாக செல்லும் ஏனைய நாடுகள் சிம்பாப்வே, துர்க்மெனிஸ்தான், வடகொரியா என்று நான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பத்திரிகைகள் புலிகளுக்கு ஆதரவானவை எனவும் ஏனென்றால் அங்கு அதிகளவில் தமிழ் சமூகம் இருப்பதாகவும் அரசாங்கம் நினைப்பதால் நான் சந்தேகப்படுவோர் பட்டியலில் இருந்தேன்.

அது அபத்தம்.

இந்த 26 வருட உள்நாட்டுப் போரில் எந்தத் தரப்புடனும் நான் தனிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. புலிகள் அமைப்பானது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுவென தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று “த ரைம்ஸ்’ திரும்பத் திரும்ப அறிக்கையிட்டு வந்துள்ளது. அத்துடன் அரசின் தந்திரோபாயம் மற்றும் தமிழர், சிங்களவர்களின் உபாயங்கள் தொடர்பாகவும் விமர்சன ரீதியான செய்திகளை “த ரைம்ஸ்’ வெளியிட்டுள்ளது.

இது ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் செய்யும் விடயமாகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் உறுப்பினர்களை நான் கிரமமாக பேட்டி கண்டுள்ளேன். ரஷ்யாவில் செச்னிய மோதல் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் செய்திகளை வெளியிட்டுள்ளேன். சீனாவில் மாற்றுக் கருத்துடையவர்களையும் திபெத் சுதந்திரத்திற்கான பணியாளர்களையும் நான் பேட்டி கண்டுள்ளேன். இதே விடயத்தை இலங்கையில் செய்வது தடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி மிகவும் அபாயகரமானதாகவும் உள்ளது.

கடந்த தடவை நான் இலங்கைக்கு சென்றது லசந்த விக்கிரமதுங்க பற்றி எழுதுவதற்கு. பத்திரிகை ஆசிரியரான அவர் கடந்த ஜனவரியில் கொலை செய்யப்பட்டார்.

மற்றொரு செய்தியானது மோதல் பகுதிகளிருந்து வெளியேறும் மக்களை அரசாங்கம் முகாம்களில் வைத்திருக்க திட்டமிடுகின்றது என்பது பற்றியே செய்தியாகும். முட்கம்பி வேலியடைத்த முகாம்களுக்குள் மூன்று வருடங்களுக்கு அவர்களை வைத்திருக்க போகும் திட்டம் பற்றியதாகும். செய்தியாளர் மாநாட்டில் என்னை அரசு கண்டித்திருந்தது. அதேசமயம் அரசாங்க சமாதான செயலகத் தலைவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. முகாம்களில் முட்கம்பி வேலியை பயன்படுத்துவதை நான் உணர்ச்சி வசப்பட்ட விடயமாக்கியிருந்ததாக அவர்குற்றம்சாட்டியிருந்தார்.

“துரதிர்ஷ்டவசமாக குளிரான காலநிலைப் பகுதியிலிருந்து வந்த ஒரு மனிதரால் உபகண்டத்தில் முட்கம்பியானது சாதாரணமான பொதுவான பொருள் என்பதையும் எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் காற்றோட்டத்திற்கும் பார்க்கவும் இது இடமளிக்கின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியவில்லை’ என்று அவர் எழுதியுள்ளார்.

வவுனியா இடம்பெயர் மக்கள் நலன்புரி முகாம்களில், திட்டமிட்ட பாலியல் வன்முறைகள், கொலைகள் இடம்பெறுகின்றன: ஜேர்மனிய எழுத்தாளர்

thomas.jpgவவுனியாவில் வன்னியில் இருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மருத்துவ வசதியற்ற முகாம்களாக இருப்பதுடன்,  திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், என்பனவும் இடம்பெறுவதாக பிரபல ஜெர்மனிய எழுத்தாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான தோமஸ் செய்பேட் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான சுற்றுலாவை மேற்கொண்டு விட்டு அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார். அத்துடன் அவர் வன்னியில் இருந்து வந்த மக்களிடம் தனிப்பட்ட கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மோதல் பிரதேசங்களில் இருந்து தப்பி வந்துள்ளனர். அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும், பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதும் சாதாரண நிகழ்வுகள் என தோமஸ் சேய்பேட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை படையினர் இந்த முகாம் பகுதிகளை பல ஆண்டுகளுக்கு நடத்தும் வகையில் விஸ்தரிக்க திட்டம் கொண்டுள்ளனர். அத்துடன், 15 சதுர கிலோமீற்றர் பகுதியில், வன்னியில் வசித்து வரும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், நாள்தோறும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி இதனை தடுக்காவிட்டால், வன்னியில் பாரிய படுகொலைகள் இடம்பெறும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தோமஸ் எச்சரித்துள்ளார்.