March

March

இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தக் கோரி பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

uk-050309.jpgஇலங்கையில் போர்நிறுத்தம் வந்து அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இலண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

லண்டனில் வாழுகின்ற சில நூறு தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள்.

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக்குழுவின் மாநாடு இங்கு நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு அலுவலக்த்துக்கு முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பு செய்திருந்தது.

தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களை சந்திப்பதனாலேயே, அவர்களுக்காக குரல் கொடுக்க தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற இந்த பொதுநலவாய அமைச்சர்கள்மட்ட செயலணிக்குழு உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகள் எங்கிலும் மனித உரிமை நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்று என்பீல்ட் வடக்கு பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் ரையன் கூறினார்.

யாழ்தேவி ரயில் சேவை திட்டம்: கே.கே.எஸ் வரை 34 நிலையங்களை புனரமைக்க தேசிய மட்டத்தில் பங்களிப்பு.

railways-in-jaffna.jpg யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். ‘உத்துறு மித்துறு’ (வடக்கு நட்பு) என்ற இந்த ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய செயலகமொன்றையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைகளுக்கமைய யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்கவென தேசிய பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரின் ஊடகச் செயலாளர் சுமித்சந்தன வீரசிங்க தெரிவித்தார்.

ரயில் பாதையை மீளமைப்பதற்கு நிதி உதவி வழங்க ஈரானிய அரசு முன்வந்துள்ளது. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதையை அமைப்பதற்காக தண்டவாளத்திற்கும், சிலிப்பர் கட்டைகளுக்குமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் அதேநேரம், வடக்கின் கலாசாரப் பிணைப்பையும், வாழ்வியல் பண்புகளையும் ஏனைய மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த யாழ்தேவி ரயில்சேவை திட்டத்திற்கு மூவின மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுமித் வீரசிங்க தெரிவித்தார்.

இதற்கிணங்க ஒன்பது மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களின் உடல் உழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணியை அம்பாந்தோட்டை மாவட்டம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் வீரசிங்க, அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்டம், கிளிநொச்சி ரயில் நிலையத்தைப் புனரமைக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு ஓமந்தையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வரை உள்ள 9 பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 நிலையங்களைப் புனரமைப்புச் செய்ய மாவட்ட ரீதியில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் ஒருங்கிணைப்பார்கள். ஆளணிப் பங்களிப்பைத் தவிரவும், பொதுமக்கள் சிலிப்பர் கட்டைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிப்பர் கட்டைக்கான செலவு 12,500 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்க முடியாதவர்களுக்காக மாற்றுத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதாவது, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ரயில் அனுமதிச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமும் வடக்கு நட்பு ரயில் சேவை திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடியும். இந்த ரயில் அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். இந்த அனுமதிச்சீட்டை வைத்திருந்து, யாழ்தேவி பயணத்தைத் தொடங்கியதும் அதில் யாழ்ப்பாணம் சென்றுவர முடியும் எனவும் சுமித் சந்தன வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்தேவி ரயிலை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரை கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்த நாளான 1956 ஏப்ரல் 23 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில், இந்தத் திகதியில் அதன் பயணத்தை வவுனியாவுக்கும் அப்பால் கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டதாக சுமித் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து திங்கள் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் விபரம்

vanni-injured.gif
67. ராசலிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 66),
68. எஸ்.பரமேஸ்வரி, முல்லைத்தீவு, செல்வபுரம், (வயது44),
69. ஆர்.தங்கராணி, புதுக்குடியிருப்பு, (வயது 70),
70. எஸ்.தவமலர் முள்ளியவளை, (வயது61),
71. ஏ.முத்தையா, மாத்தளன், (வயது63),
72. எஸ்.கனகசபாபதி, யாழ்ப்பாணம், அளவெட்டி (வயது75),
73. சுஜா, முல்லைத்தீவு, பொக்கணை (வயது 12),
74. ரி.சிவபாக்கியம், முல்லைத்தீவு, பொக்கணை, (வயது57),
75. எஸ்.சிதம்பரம், கருணை நிலையம், (வயது52),
76. எஸ்.ருக்மணி, வட்டக்கச்சி, (வயது 46),
77. எம்.ராசகுகன், மாதலன், (வயது 56),
78. எஸ்.ராமு.முல்லைத்தீவு, வவுனிக்குளம், (வயது64),
79. வி.பேரின்பராணி, கிளிநொச்சி, உதயநகர், (வயது30),
80. விஜக்ஷா ராகுலன், மாதலன், (வயது03),
81. பிதுஷண, யாழ்ப்பாணம், நல்லூர், (வயது02),
82. எஸ்.ரமேஸ்குமார், யாழ்ப்பாணம், நல்லூர், (வயது38),
83. பி.நடராசா, இலுப்பைக்கடவை, (வயது85),
84. கலைவாணி, யாழ்ப்பாணம், (வயது24),
85. யதுசனன், யாழ்ப்பாணம், (வயது 7 1/2),
86. எஸ்.சீதாலட்சுமி, மாதலன், (வயது70),
87. ஆர்.சோபனா, அல்வாய் கிழக்கு, (வயது7),
88. ஆர்.கலைவாணி, அல்வாய் கிழக்கு (வயது32),
89. வனிதாதேவி, மாதலன், (வயது61),
90. விஜயராகவன், மாதலன், (வயது2.5),
91. வி.லட்சுமி, வவுனியா, (வயது60),
92. எம்.யோகதாஸ், பெரியவிளான், இளவாலை (வயது28),
93. கே.கோபாலசிங்கம், முள்ளியவளை (வயது61),
94. நந்தாவதி மெண்டிஸ், கிளிநொச்சி, (வயது44),
95. ஏ.சிவரஞ்சனி, கிளிநொச்சி, (வயது25),
96. இறப்புபெயர் தரப்படவில்லை,
97. கே.பொன்னம்மா, கிளிநொச்சி, (வயது90),
98. என்.சத்தியரூபன், வட்டக்கச்சி, (வயது13),
99. செவிப்புலன், பேசும் சக்தி அற்றவர்,
100. ஏ.ராசலிங்கம், மாங்குளம், (வயது59),
101. மகேஸ்வரி, வல்லிபுரம் (வயது51),
102. சிறிமா, கருணை நிலையம், (வயது84),
103. பௌத்தமணி, (வயது48)
104. அந்தனி, திரேஸா, கருணை நிலையம், (வயது35),
105. குழந்தை, முள்ளியவளை, (வயது74),
106. கிருஷ்ணகுமாரி, கிளிநொச்சி, (வயது15),
107. கே.முத்துவேற்பிள்ளை, திருகோணமலை, கிரியாய், (வயது56),
108. தீபா, கருணை இல்லம், (வயது12),
109. ஜே.தம்மிகா, அம்பலன், பொக்கணை, (வயது04),
110. எஸ்.ஜேயசீலன், அம்பலன், பொக்கணை, (வயது34),
111. ஹம்ஸிகா, அம்பலன், பொக்கணை, (வயது10),
112. ஜே.சுகந்தினி, அம்பலயன், (வயது33),
113. அனுஜா, அம்பலயன், (வயது29),
114. கே.ரோசா, அம்பலன், (வயது06),
115. கே.யோகராணி, அம்பலயன், (வயது54),
116. ஐ.மகேந்திரன், கிளிநொச்சி, (வயது49),
117. எஸ்.சிவசோதி, சிவபுரம், கிராஞ்சி, (வயது4),
118. பி.அருளானந்தம், முள்ளியவளை, (வயது53),
119. பி.கந்தசாமி, நீதிமன்ற வீதி, யாழ்ப்பாணம், (வயது33),
120. ஏ.யோகேஸ்வரன், கிளிநொச்சி, கணேசபுரம், (வயது72),
121. ஜே.ஜில்லிபுஷ்பா, மாதலன், (வயது61),
122. பி.மகேஸ்வரி, கிளிநொச்சி, (வயது58),
123. பி.ராணி, மாதலன், (வயது58),
124. எஸ்.சிவகுமார், யாழ்ப்பாணம், புங்குடுதீவு, (வயது45),
125. சிவகாமுகானி, மன்னார், (வயது76),
126. டி.தவராஜா, விளாங்குளம், வவுனிக்குளம், (வயது60),
127. துலக்ஷன், விளாங்குளம், வவுனிக்குளம், (வயது10),
128. வி.சகுந்தலா, வற்றாப்பழை, (வயது29),
129. வி.மதுஷா, வாற்றாப்பழை, (வயது5),
130. வரதராணி, வற்றாப்பழை, (வயது7),
131. எஸ்.பிரியா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது2),
132. ஜனுஷா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது6),
133. எஸ்.இராசமலர், பொக்கணை, (வயது55),
134. எஸ். நேசம்மா, மட்டக்களப்பு, (வயது61),
135. எம்.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது51),
136. விஜயலட்சுமி, கருணை நிலையம்,
137. வி.துரைராஜசிங்கம், உடையார்தட்டு (வயது60),
138. கமலாம்பிகை, ஆனைக்கோட்டை, (வயது78),
139. எஸ்.மயில்வாகனம், தர்மபுரம்,
140. ஜே.சரஸ்வதி, பண்டங்கண்,
141. ஏ.உதயராணி, பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு(வயது34),
142. ஏ.தாரண்யா, புளியங்குளம், (வயது08),
143. ஏ. தாரகன், புளியங்குளம், (வயது10),
144. சுமித்திராதேவி, பண்டாவெளி,(வயது49),
145.கே. ராசம்மா, பண்டங்கண்டி,(வயது 57),
146. தெய்வானை/ கிளி, உருத்திரபுரம்,(வயது66),
147. கே.மதுரம்,யா/தாளையடி, (வயது51),
148. கே.சத்தியவதி,தாளையடி, (வயது 21),
149. என்.ரோபிசியா,காத்தான்குளம்,மன்னார், (வயது 36),
150. தமிழ்வினி, காத்தான்குளம்,மன்னார், (வயது 01),
151. எல்.மகேஸ்வரன், காத்தான்குளம் ,மன்னார், (வயது 35),
152. தாரணி, காத்தான்குளம் ,மன்னார், (வயது03),
153. செவிப்புலனற்றவர் கருணை இல்லம்,
154. பி.கிருபாகரன், யாழ்ப்பாணம், புளியங்கூடல்,
155. ஏ.சொக்கலிங்கம், வவுனிக்குளம், (வயது 73),
156. வள்ளிப்பிள்ளை, முரசுமோட்டை, (வயது75),
157. எஸ்.சின்னம்மா,பேராளை, பளை, (வயது69).

விடுதலை சிறுத்தைகள் தொண்டர் தீக்குளித்து சாவு

srithar.jpgசென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்து இறந்தார். அவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் குடும்பச் சண்டை காரணமாக அவர் தீக்குளித்தார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூளை கே.எம்.கார்டனைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழும்பூர் பகுதி அமைப்பாளராகவும் உள்ளார். இவருக்கு லட்சுமி (21) என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். தமிழ் மீது அதிக பற்று கொண்ட இவர் தனது குழந்தைகளுக்கு தமிழ்செல்வன், ஈழச்செல்வன் என பெயரிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த `நாம் தமிழர்’ நடைப் பயணத்தில் பங்கேற்று விட்டு நேற்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் இன்னும் சமையல் செய்யவில்லை என்று கூறி லட்சுமி சாப்பாடு வாங்குவதாக கூறிவிட்டு கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதர் வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் கடைக்கு சென்ற மனைவி லட்சுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். கணவன் உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்த லட்சுமி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்து ஸ்ரீதரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து நிருபர்களிடம் கூறும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஸ்ரீதர் எழும்பூர் பகுதி அமைப்பாளராக இருந்து வருகிறார். இன்று பெரம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நாம் தமிழர் நடைபயணத்தில் பங்கேற்ற அவர் சோகமாக காணப்பட்டார். இடையில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத போது ஸ்ரீதர் இலங்கை தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார் என்றார். ஆனால் இதை மறுத்த போலீஸார், மனைவி லட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பசண்டை காரணமாகத்தான் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

‘யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை’

pmsrilanka.jpgஎத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் யுத்தநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லையென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அழிவின் இறுதித் தருணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் எதனையும் செய்யத் துணியலாம். அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற இவ்வேளையில் சகல தரப்பினரினதும் பூரண ஆதரவு அவசியமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் சில தொண்டர் அமைப்புகள் சர்வதேச ரீதியில் திரிபுபடுத்தப்பட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவதாக அவ்வமைப்புகள் பிரசாரம் செய்கின்றன. இது உண்மையெனில் தெற்கிலும், மத்திய மாகாணத்திலும் தமிழ் மக்கள் வாழ முடியுமா? அம்மக்கள் கடந்த தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்திருப்பார்களா எனவும் பிரதமர் கேள்வியெழுப்பினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

இரவில் விழுந்த குழியிலேயே பகலிலும் மீள விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை. சில சத்திகள் மீண்டும் ஒரு யுத்தநிறுத்தம் பற்றி அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன. அதை ஏற்க முடியாது. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்க்கும் போது, இன்னும் சில காலங்களுக்கு இவர்களை விட்டு வைத்திருந்தால் முழு நாடும் அழிவடைந்திருக்கும் என்பதையே உணர்த்துகிறது. மீண்டும் மீண்டும் புலிகளை நம்ப அரசு தயாரில்லை. வரலாற்றில் கற்ற பாடங்களை எளிதில் மறக்க மடியாது. இதனால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் யுத்தநிறுத்தமொன்றை அரசாங்கம் புலிகளுடன் மேற்கொள்ள மாட்டாது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேசமும் செயற்படுகின்ற காலகட்டமிது. நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து, சகல மக்களும் வாழக்கூடிய ஜனநாயகச் சூழலை உருவாக்குவதற்கே அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எனினும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக சில சக்திகள் செயற்படுகின்றன. இவர்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் டொலர்களுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தமது மக்களைப் பணயக் கைதிகளாகவும் தற்கொலைப் போராளிகளாகவும் சிறுவர் போராளிகளாகவும் நடத்துகின்றனர். இதனால் சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் மக்களும் அவர்களை நிராகரித்துள்ளனர்.

அம்பாறைக் கிராமமொன்றில் புகுந்து புலிகள் செய்த அட்டகாசத்தால் பல உயிர்கள் பலியான சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தமது மக்களையே அழிக்கும் விடுதலை இயக்கமாக அவ்இயக்கம் செயற்பட்டு வருகிறது. இத்தகைய நிலையிலும் புலிகளுக்கு ஆதரவாக சில தொண்டர் அமைப்புகள் செயற்படுகின்றன. யுத்தநிறுத்தம் ஒன்று அவசியமென அவை வலியுறுத்துகின்றன. ஒரு போதும் இதற்கு இடமளிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடுவர் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது -பிரிட்டிஷ் பிரதமர்

20090302.jpg
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரவுண் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளின் பிரச்சினையை பாகிஸ்தான் கையாளவேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  “இது மனித இருப்புக்கான யுத்தம். நாம் தோற்றால் அது உலகின் தோல்வி. தோல்வி இதில் தெரிவு அல்ல’ என்று வோல் ஸ்ரீட் கேர்னலுக்கு கோல்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தானின் பலம் வாய்ந்த இராணுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றால் அவரின் நிலைப்பாடு பலவீனப்படுத்தப்பட்டுவிடுமென்று மேற்குலக இராஜதந்திரிகள் அச்சப்படுகின்றனர். ஏனெனில், பாகிஸ்தான் இராணுவமும் ஐ.எஸ்.ஐ. யும் லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்று “லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.

ஏனெனில், ஐ.எஸ்.ஐ. யின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தத் தாக்குதல் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென்று தனது ஊகத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு இந்தியப் புலனாய்வுத் துறையின் பின்னணி இருந்திருக்கக்கூடும் எனவும் மும்பைத் தாக்குதலுக்கு பதிலடியாக இதனைச் செய்திருக்கலாமென்றும் அவர் கூறியிருந்தார்.  “இது இந்திய உளவுத்துறையின் வேலையென்பது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது’ என்று ஓய்வுபெற்ற ஜெனரல் ஹமீட் குல் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போதியளவு ஆதாரமில்லையாயினும் இந்த மாதிரியான விடயங்கள் சாதாரண பாகிஸ்தானியர் இலகுவாக நம்பக்கூடிய விடயங்களாகிவிடுமென கூறப்படுகிறது. பல தரப்பினரும் செறிந்து வாழும் லாகூரில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறித்து பாகிஸ்தானியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

அத்துடன் விளையாட்டானது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதொன்றாகும். பாகிஸ்தானியரால் இதனை செய்திருக்க முடியாதென்று சாஷியா சர்தாரி (வயது 28) என்ற குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள தீவிரமாக சிந்தித்து கருத்து கூறுபவர்கள் “இந்தியாவின் சதி’ என்று கூறப்படும் கதைகளை நிராகரித்துள்ளதுடன், பாகிஸ்தானின் புகழை நாசமாக்கியுள்ள தீவிரவாதிகள் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.  அரசு மறுத்துவிடும் நிலைமைக்குச் சென்றால் அது மோசமான விடயமாகும். பாகிஸ்தானை அழித்துவிடும் நிகழ்ச்சித்திட்டத்துடன் நாம் வைத்திருக்கும் குழுக்கள் தொடர்பாக எவ்வளவு காலத்துக்கு நாம் மறுக்கப்போகின்றோம் என்று “டெய்லி டைம்ஸ்’ பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

இது இவ்வாறிருக்க, லாகூரில் கடாபி விளையாட்டரங்கின் வெளிப்புறத்தின் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதல் லஸ்கர்இதொய்பா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒத்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். மும்பையில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இக்குழுவே சூத்திரதாரியென குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் , இதில் “வெளிநாட்டுக் கரம்’ இருப்பதாக பலர் சூசகமாக கூறுகின்றனர். மும்பைத்தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக முழுமையான போதிய ஆதாரங்கள் இல்லாமல் சாதாரண பாகிஸ்தானியர் மத்தியில் ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் பொலிஸின் குற்றவிசாரணை திணைக்களம் கடந்த ஜனவரியில் எச்சரிக்கை விடுப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்திய உளவுத்துறை முகவரமைப்பானது கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடுமென்றும் எச்சரிப்பதாக பிழையான அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

22 ஜனவரி 2009 திகதியிடப்பட்ட அறிக்கையில் , இந்தியாவின் ரோவானது இலங்கை கிரிக்கெட் குழுவினரை இலக்கு வைக்குமாறு தனது முகவர்களுக்கு பணித்துள்ளதாகவும் விசேடமாக அவர்கள் ஹோட்டலுக்கும் விளையாட்டரங்கிற்கும் பயணம் செய்கையில் இலக்குவைக்க பணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் குற்றப்புலனாய்வு திணைக்கள மேலதிக பொலிஸ்மா அதிபர் மலிக் முகமட் இக்பால் கையெழுத்திடப்படவிருந்ததாக தென்படுகின்றது. இதேவேளை அந்த அறிக்கை தொடர்பாக “த ரைம்ஸ்’ இக்பாலுடன் தொடர்பு கொண்ட போது அவர் உறுதிப்படுத்துவதையோ அல்லது மறுப்பதையோ நிராகரித்துவிட்டார். “கசிந்துவிட்டதொன்று’ புலனாய்வு விடயங்கள் தொடர்பாக நான் கருத்து கூறமுடியாது’ என்று அவர் தெரிவித்துவிட்டார்.

புலிகளுக்கு ஆதரவுகொடுத்த பிரிட்டிஷ் எம்.பி வருத்தம் தெரிவிப்பு

l-yaappa-abayawardana.jpgபுலிகளுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்த கீத் வாஸ் எம்.பி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். புலிகளின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டதாக அவர் கூறியிருப்பதை வரவேற்கிறோம் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளுக்கு ஆதரவாக இவர் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தார். இதனால் இலங்கை மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகலாம் என எமது பாராளுமன்றத்தில் கூட பல தடவைகள் கலந்துரையாடப்பட்டது.

ஆனால் புலிகளின் உண்மையான சுயரூபத்தை அவர் உணர்ந்து அது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆரம்ப முதலே நாம் ஒரே நிலைப்பாட்டிலே இருந்தோம். இன்று எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.

இலங்கை அணி மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு -ஆதாரம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி

crc-04032009-01.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை “இரும்புக் கரம்’ கொண்டு கையாளப்போவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி நேற்று சூளுரைத்திருக்கும் நிலையில், செவ்வாயன்று இடம்பெற்ற தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகத்தின் (எவ்.பி.ஐ.) பணிப்பாளர் ரொபேர்ட் மில்லர் தலைமையிலான குழு நேற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்துள்ளது. இச்சந்திப்பின்போதே இலங்கைக் கிரிக்கெட் குழுவினர் மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக கிலானி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

அத்துடன் மும்பைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லையென்று கிலானி எவ்.பி.ஐ. அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை தாக்குதல் தொடர்பாக 14 பேர் மீது ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது செவ்வாய்க்கிழமை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய முகமூடியணிந்த 12 பேர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1,25,000 டொலர்கள் (இலங்கை நாணயப்பெறுமதி சுமார் 1 கோடி 25 இலட்சம்) சன்மானம் வழங்கப்படுமென பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டும் 6 இலங்கை கிரிக்கெட் வீரர்களும் உதவி பயிற்றுவிப்பாளரும் காயமடைந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம்

reg-camp.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று (4) விஜயம் மேற்கொண்டது. இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் இவர்கள் வவுனியாவுக்கு விஜயம் செய்தனர். இவர்களிடையே பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மாலைதீவு நாட்டு தூதுவர்களும் வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹனவும் அடங்குவர்.

இவர்கள் மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச உடன்பாடு அவசியமென்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

l-yaappa-abayawardana.jpg பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு சர்வதேச உடன்பாடொன்று எட்டப் படவேண்டும் என்பதையே லாஹ¤ர் தாக்குதல் உணர்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் பூரணமான விசாரணைகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் கோருமானால் விசாரணைகளுக்கு எமது அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- எதிர்வரும் காலங்களில் எமது அணியை வெளிநாட்டுக்கு அனுப்பும் போது பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்திய பின்னரே அது தொடர்பில் முடிவு செய்யப்படும்.

லாஹ¤ரில் இடம் பெற்ற சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அது தொடர்பில் சகல ஆலோசனைகளையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினார். இதன்படி, இலங்கை வீரர்கள் உடனடியாக திரும்பி அழைக்கப்பட்டனர்.

1996 உலகக் கிண்ணப் போட்டி இலங்கையில் நடைபெற்ற போது பல நாடுகள் இங்கு வரமறுத்தன. அந்த சமயம் பாகிஸ்தானும் இந்தியாவுமே இங்கு விளையாட முன்வந்தன. வலய நாடுகளிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்பும் வகையிலே இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்றது. உச்சப் பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் வாக்களித்தாலும் பாகிஸ்தான் வழங்கிய பாதுகாப்பில் குறைபாடு இருந்தது.

விளையாட்டுத்துறையில் பயங்கரவாதம் நுழைய முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க சகல தரப்பும் ஒன்று பட வேண்டும். அதனையே இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை எந்த ஆயுதக் குழு செய்தது என இதுவரை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை. ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது உள்நாட்டு மோதல் காரணமாகவோ இந்தத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தினால் காயமடைந்த இலங்கை அணி வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.