பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை “இரும்புக் கரம்’ கொண்டு கையாளப்போவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி நேற்று சூளுரைத்திருக்கும் நிலையில், செவ்வாயன்று இடம்பெற்ற தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக பிரதமர் கிலானி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகத்தின் (எவ்.பி.ஐ.) பணிப்பாளர் ரொபேர்ட் மில்லர் தலைமையிலான குழு நேற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்துள்ளது. இச்சந்திப்பின்போதே இலங்கைக் கிரிக்கெட் குழுவினர் மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக கிலானி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.
அத்துடன் மும்பைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லையென்று கிலானி எவ்.பி.ஐ. அதிகாரியிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை தாக்குதல் தொடர்பாக 14 பேர் மீது ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் மீது செவ்வாய்க்கிழமை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய முகமூடியணிந்த 12 பேர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1,25,000 டொலர்கள் (இலங்கை நாணயப்பெறுமதி சுமார் 1 கோடி 25 இலட்சம்) சன்மானம் வழங்கப்படுமென பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டும் 6 இலங்கை கிரிக்கெட் வீரர்களும் உதவி பயிற்றுவிப்பாளரும் காயமடைந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
george
pakistan entirely responsible for their ireponsible manner which has caused final test.i think it might be a inside job who might feard that they can win the test match against srilanka. thilan sameravera is an outstanding batsman who targetted also if you looked this its an inside job .