Multiple Page/Post

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுங்க திணைக்களத்திற்கு புதிதாக 300 ஊழியர்களை சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானம்

இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குப் புதிதாக 300 ஊழியர்களைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 100 பரிசோதகர்களும், 200 பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிகளை மேலும் வினைத் திறன்மிக்கதாக்கி, கூடுதல் வருவாயை ஈட்டுவது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கிழக்கில் 60 சு. கட்சி அலுவலகங்கள்

karuna1.jpgகிழக்கு மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் 60 சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அவ்வலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. முதலாவது அலுவலகம் எதிர்வரும் 6ம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அலுவலகமாகத் திறக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

பாடசாலைகளிலுள்ள மரங்களின் கிளைகளைத் தறிக்க அவசர உத்தரவு

fallen-tree-branch.jpgவவுனியா பாடசாலை வளவுகளில் உள்ள சகல மரங்களினதும் கிளைகளை தறிக்குமாறு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வி.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மர நிழல்களில் பாடசாலை வகுப்புக்களை நடத்துவது பற்றி கவனமாக இருக்குமாறும் அதிபர்கள் இந்த வியடத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப் பாளர் ஆலோசனை தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மகா இறம்பைக்குளம் பாடசாலை வளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியையும் மாணவியும் மரணமாகி 13 பாடசாலை மாணவர்களும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

ஐபிஎல் 20-20 ஆட்டம் 10 நிமிடம் அதிகரிப்பு

_ipl_graphic_.jpgஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20 20 வரும் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக தொடங்குகிறது.  வழக்கமாக 20 20 ஆட்டங்கள் 3 மணி நேரம் நடைபெறும். இதில் 15 நிமிட இடைவேளையும் அடங்கும். இந்நிலையில் விளம்பர வருமானத்திற்காக போட்டியின் இடைவேளை நேரத்தை 10 நிமிடம் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐபிஎல்லும் போட்டி ஒளிபரப்பாகும் சோனி டிவியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதன்படி ஒவ்வொரு அணிக்கும் 10 ஓவர்கள் முடிந்ததும் 5 நிமிட இடைவேளை வழங்கப்படும். இந்த நேரத்தில் கேப்டன் சக வீரர்களுடன் ஆலோசனை நடத்திக்கொள்ளலாம் என ஐபிஎல் தெரிவித்துள்ளது. மேலும் டிவி நிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

மேல் மாகாண சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதி- அமைச்சர் றிஷாத் பதியுதீன்

risadbadurudeen.jpgவிடுவிக் கப்படாத பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்காக விசேட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட அடையாள அட்டைகள் மூலம் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும்,  தங்களது உறவினர்களை நேரடியாகச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. மேலும் இங்கு தங்கியுள்ளவர்கள் தமது உறவினர்களுடனோ அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை,வவுனியாவில் வேறு நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த 60 வயதைத் தாண்டிய சுமார் 400க்கும் மேற்பட்டோரை அவர்களின் நிலைமையக் கருத்திற்கொண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமது குடும்ப உறவுகளைப் பிரிந்து வௌ;வேறு முகாம்களில் வாழ்ந்து வந்த சுமார் 600 குடும்பங்களை ஒரே முகாமில் குடும்பம் குடும்பமாக ஒன்றிணைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகரினுள் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கான குறுகியகால நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமை கொழும்பு மாநகர சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பல பகுதிகளிலும் குப்பை கூளங்களைச் சேகரித்துக் கொட்டுவதில் மாநகர சபை ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மாநகர சபை எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் குப்பை கூளங்கள் அகற்றப்படவில்லை.

இதனால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதுடன் அனைத்துமக்களும் பல்வேறு வகையிலும் பெரும் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர். இதையடுத்து கொழும்பு மாநகர சபையின் இயலாத்தன்மையாலும் மோசமான நிர்வாகத்தாலும் கொழும்பு புளுமெண்டல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூளங்களால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டகுழுவினர் தாக்கல் செய்த இந்த மனுவில் கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக் கெடுத்த உயர் நீதிமன்றம் கழிவுப்பொருட்களை துறைமுக அதிகாரி சபைக்குச் சொந்தமான காணியிலும் மகரபகுதியில் இடமொன்றிலும் சேகரிப்பது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கழிவுப் பொருட்கள் மீள் சுழற்சிக்கான நீண்டகால செயற்திட்டம் தொடர்பான பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாநகர சபை எல்லைக்குள் தேங்கியுள்ள குப்பை கூளங்களை அகற்றுமாறு பொது அமைப்புக்கள் பலவும் மாநகர சபை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்ததும் தெரிந்ததே. தற்போது நீதிமன்றத் தலையீட்டால் செவ்வாய்க்கிழமை குப்பை கூளங்கள் அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமானதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் வெளிநாட்டு “மாணவர் விசா” புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம்

flag_uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளின் மாணவர்களுக்கான புதிய விசா நடைமுறையொன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடிவரவை கட்டுப்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதுமே இந்த புதிய நடைமுறைக்கான நோக்கமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புள்ளி அடிப்படையிலான விசா வழங்கும்திட்டத்தின் நான்காவது படிமுறையின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகள் விசா வழங்கும் செயன்முறைகளை எளிதாக்கும் என்பதுடன் கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடையதாகவும் குடிவரவு முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதாகவும் அமையும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குயி சிமித் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்களை ஆட்திரட்டும் பிரிட்டனில் உள்ள சகல கல்வி வழங்கும் நிறுவனங்களும் ( பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) நேற்றுமுதல் பிரிட்டனின் எல்லை பாதுகாப்பு அமைப்பிடம் (UK Border Agancy) தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனுசரணையாளர்களாகுவதற்காக (Licensed Sponsors) 2,100 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும் சுயாதீன பாடசாலைகளும் கல்லூரிகளும் விண்ணப்பம் செய்திருக்கின்றன.

பிரிட்டனில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசா நிபந்தனைகளுக்கு இசைவாக நடப்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு இனிமேல் இந்தக்கல்வி நிறுவனங்களினுடையதே. எந்தவொரு மாணவரும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றிடமிருந்து நிபந்தனையற்ற முறையில் தனக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனது கற்கை நெறிக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பிரிட்டனில் தங்கியிருந்து கல்விகற்கும் காலகட்டத்தில் தனது வாழ்க்கைச் செலவுக்கும் போதுமான நிதி தன்னிடம் இருப்பதை மாணவர்கள் சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பதற்கான விசாவே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலான கற்கைநெறி என்றால் அதைப் பூர்த்தி செய்வதற்கான முழுக்காலகட்டத்துக்கும் விசா வழங்கப்படும்.

பிரிட்டனில் கல்வி கற்பதற்கு செல்கின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைக் கற்பிப்பவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதை புதிய நடைமுறை உறுதிசெய்யும். பிரிட்டனில் கல்விகற்பதற்கு உண்மையில் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் போலி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய விசா நடைமுறை அனுமதியளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் சிமித் தெரிவித்திருக்கிறார்.

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனி காயம்: பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங் கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாக போரிடுகின்றனர். அந்த போர் முனையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையேற்று நேரடியாக போரிடுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
 
புதுக்குடியிருப்பு வடக்குப் பகுதியில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே அண்மையில் இடம்பெற்ற உக்கிர மோதலின்போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனி (வயது 24) காயமடைந்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தயாரிக்கும் பணியின் முக்கிய பொறுப்பாளரான இவர் புலிகளின் விமானங்களுக்கான குண்டுகளைத தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமானத்தளம் மீதும் கொலன்னாவை எண்ணெய்க் குதம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு களஞ்சியம் ஆகியவற்றின் மீதும் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களை இவரே  திட்டமிட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக இவர் புலிகளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.