மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.