சுங்க திணைக்களத்திற்கு புதிதாக 300 ஊழியர்களை சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானம்

இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குப் புதிதாக 300 ஊழியர்களைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 100 பரிசோதகர்களும், 200 பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரச வருவாய்த்துறை அமைச்சரும் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பாக அரச சேவை ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிகளை மேலும் வினைத் திறன்மிக்கதாக்கி, கூடுதல் வருவாயை ஈட்டுவது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • GNANI
    GNANI

    its may true that srilanka not affected by word credit crunch.

    Reply