10

10

மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகள் போதும் – பராக் ஒபாமா அ்ட்வைஸ் !

திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும் மனைவியும் இந்த மூன்று கேள்விகள் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா தெரிவித்துள்ளார். இரு மணங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்களை போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்வது முக்கியம் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அந்த மூன்று கேள்விகள் உங்களுக்காக

உங்கள் துணை எதில் ஆர்வமிக்கவர்?

நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியினை எல்லாரை விடவும் உங்கள் துணையுடன் செலவிடுவீர்கள். ஆகவே அவர் ஆர்வமிக்கவராக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

அப்போதுதான் உங்கள் துணை என்ன நினைக்கின்றார்? என்ன செய்யப்போகின்றார் ?என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.

 உங்க துணை நகைச்சுவை உணர்வு  உள்ளவரா?

உங்களும் வரும் துணை தங்களது செயல்கள் மூலமாக நகைச்சுவை திறன் இருந்தால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு புதியலாக இருப்பார்.

ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் பாட்னரிடம் இருக்கு நகைச்சுவை குணம்தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும் உங்களின் திருமண வாழ்க்கியினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகின்றார்.

உங்க துணைவர் சிறந்த பெற்றோராக இருப்பாரா?

இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் துணையை திருமணம் செய்யலாமா வேண்டாமா என முடிவு செய்ய உதவும் என்கிறார்.

உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான, அக்கறையான, நல்ல பண்புகளை விதைக்கக்கூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.

உங்கள் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவி !

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் மதிப்பில் இராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், இராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபக்கமிருக்க புடின் தலைமையிலான ரஷ்யா அரசாங்கம் “அமெரிக்காவும் – மேற்குலக நாடுகளும் தொடர்ந்தும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டிருப்பதனாலேயே போர் இன்னம் பூதாகரமாகிக்கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த போரினுள் தன்னுடைய ஆதிக்கத்தை திணிப்பதற்காக அமெரிக்கா முயல்வதை தொடர்ந்தும் காண முடிகின்றது. உலக அமைதியே தன்னுடைய குறிக்கோள் என அண்மையில் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து உளமானதாக இருந்திருந்தால் – இருந்திருக்கும் பட்சத்தில் இரண்டு தரப்பபையும் சேர்த்து அமெரிக்கா அமைதிப்பேச்சுக்கு முயன்றிருக்கும். ஆனால் அது நடக்கவுமில்லை – அதற்கான வாய்ப்பும் இல்லை. அமைதியை விரும்புவதாக கூறும் அமெரிக்கா தான் ஆயுதங்களை வாரி வாரி கொட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைனியர்கள் தான் பரிதாபமானவர்கள் .