13

13

மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் ரோபோ – சீனா அசத்தல் !

மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

 

தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும் இந்த ரோபோக்கள் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவு கொண்டவை. ஆழமான நீரில் மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சவும், கடல் மாசுபாட்டை பகுப்பாய்வு செய்வதற்கான தகவல்களை வழங்குவதையும் இலக்காக கொண்டு இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரோபோ மீன், ஒளியால் கதிரியக்கப்படுகிறது. ஒளியைப் பயன்படுத்தி இந்த ரோபோ மீன்களை மற்ற மீன்கள் அல்லது கப்பல்களில் மோதுவதைத் தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் போராட்டங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி !

இலங்கையில் கட்டுக்கடங்காதவர்களின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என  இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இந்த பிரிவுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.