31

31

நேபாள விமான விபத்து – 22 பேரின் சடலங்களும் மீட்பு !

நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட ஆறு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் !

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.  இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.
அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்கும்.  அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் – சிரட்டை அலங்கார உற்பத்திகளில் ஈடுபடும் முல்லைத்தீவு பெண் முயற்சியாளர் !

இலங்கையில் இன்னமும் செய்தால் அரச வேலை மட்டுமே செய்வோம் என பலர் அரச வேலைக்காக மட்டுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது. மேலும் அதிகமானோர் இலங்கையில் வேலை செய்வதற்கான முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட வெளிநாடுகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கை போன்ற நாடுகளில் பல பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை திருமணத்துடன் முடக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்டு கொண்டிருக்கிறார் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் சிரட்டை கைத்தொழில் தொடர்பான அலங்கார பொருட்களை உற்பத்தி செய்துவரும் நிதர்சனா என்ற பெண்மனி.

கந்தசாமி கிரிதரன் என்ற முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த ஒரு பதிவில் குறித்த சிரட்டை அலங்கார பொருட்கள் உற்பத்தி பற்றிய விடயங்களை காணக்கிடைத்ததன் அடிப்படையில் தேசம் இணையதளத்திலிருந்து குறித்த தொழில்முயற்சியாளரை தொடர்பு கொண்டிருந்த போது அவர் ,

No photo description available.

தானும் தன்னுடைய கணவருமாக இணைந்து குறித்த தொழில்முயற்சியை மேற்கொள்வதாகவும் – குறித்த தொழிலை செய்வது மனதுக்கு நிறைவானது எனவும் குறித்த முயற்சியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த உற்பத்திகளை நேரடியாக சென்று பெற்றுக்கொள்ள முடிவதுடன் உங்களுக்கு ஏற்றாற் போல அலங்காரங்களிலான உற்பத்திகளையும் பெற்றுக்கொள்ள முடியும். வடமாகாண பகுதிகளுக்கு ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ளவும் முடிகிறது.

பிறந்தநாளுக்கும் ஏனைய கொண்டாட்டங்களுக்கும்  நாம் ஏதோவொரு பொருட்களையும் – வெளிநாட்டு உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசில்களை தெரிவு செய்யாது நமது உள்நாட்டு உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.

உற்பத்திகளை பெ்றுக்கொள்வதற்கு தொடர்புகளுக்கு –

நிதர்சிகா 0768915974

கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா்.

இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.