October

October

50 வருடங்களாக வசித்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு காணிகளுக்கான உரிமம் இல்லை.

Douglas_Devanandaசங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி ஊரத்தி, சங்கானை மத்தி ஆகிய பிரதேசங்களில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளான மக்களுக்கு இன்னமும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி உதவுமாறும் குறிப்பிட்ட மக்கள் வடமாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“சங்கானை மத்தியில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வாழ்நது வருகின்றோம். எம்முடன் வாழ்ந்த 21 குடும்பங்களுக்கு 1979 இல் உள்ளுராட்சி சபையின் விசேட ஆணையாளராக அப்போதிருந்த இராசு தணிகாசலம் என்பவரால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எமக்கு காணி உரிமம் எவையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்குமாறு மாகாணசபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். ஆனாலும், தீர்வு எதுவும் இது வரை எட்டப்படவில்லை. எனவே சங்கானை மத்தி, அராலி ஊரத்தியிலுமுள்ள 65 சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்கி, அவற்றுக்கான உரிமங்களையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்” என இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் பனை விதை நடுகை துரிதம்.

Panai_Marangalயாழ். மாவட்டத்தில் ஐந்து இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 21 குழிகளில் பனை விதைகளை நடும் பயனாளிகளுக்கு உலக உணவுத்திட்டத்தின் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இத்திட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக உலக உணவத்திட்ட நிறுவனம் 100 மெற்றிக் தொன் உலருணவை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பனை வளத்தை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பனை விதை நடுகைத் திட்டத்திற்காக பல இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பனைசார் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக வெடி பொருட்கள் அகற்றல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்வதற்காக அப்பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக துரிதமாக அப்பகுதிகளிலுள்ள மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க ‘ஹலோட்ரஸ்ற்’ மற்றும், இராணுவ பொறியியல் பிரிவு என்பன வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும், விரையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதுமலையில் இடம்பெற்ற கொள்ளை பிடிபட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இளம் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. இக்கொள்ளை தொடர்பாக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.சுதுமலை வடக்கில் வசித்துவரும் மருத்துவர் ஒருவர் மானிப்பாய் மத்திய சந்தைப் பகுதியில் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது வீட்டிலிருந்து ஆறு இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகை மற்றும்,  20 ஆயிரம் ருபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தது. 

இவர் தமது மருத்துவ நிலையத்திற்கு வந்துவிட்டு மாலையில் வீடு சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த நிலையில் இப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமையை அவதானித்துள்ளார். பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் மருத்துவரின் வீட்டின் ஒரு பகுதியில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்திவரும் 25 வயதான இளம் பெண் மீது சந்தேகம் கொண்டனர்.

அவரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணைக் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். 300 ஆண்களும், 200பெண்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியாவில் வைத்து இவர்கள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

Katpaga_RiceMillஇன்று (ஒக்ரோபர் 16 2010) மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Katpaga_RiceMill_Satchi_Gopal2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவுக்கு வரும் இந்த அரசி ஆலையானது கணவனை இழந்த 30 பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது.  மேலும் இந்த அரசி ஆலை லபாத்தையீட்ட ஆரம்பிக்கும் போது அதன் லாப நிதி மீண்டும் முழுமையாக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் என கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

._._._._._.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

Katpaga_RiceMillகடந்த  30  வருடங்களாக  இலங்கையில்  ஏற்பட்டு வந்த  யுத்த  அனர்த்தம்  காரணமாக குறிப்பாக   வடக்கு கிழக்குப்  பிரதேச  மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட  காரணத்தினால்  அவர்களின்  வாழ்வாதாரம் மற்றும் தொழில்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யுத்த  அனர்த்தத்தினால் 30 வருடமாக பொருளாதாரத் தடை, பொருட்கள் கொண்டு செல்லத் தடை, வரையறுக்கப்பட்ட  பொருட்களக்கான அனுமதி, இறுதியாக இடம்பெயர்வு என பல வகையிலும் பாதிக்கப்பட்டு தற்கால  சமாதான  சூழ்நிலையில்   அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட    இலங்கையின்  கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை  மாவட்டத்திலுள்ள   மூதூர்  கிழக்கு  பிரதேச  15  திட்டக் கிராமங்களை சேர்ந்த மக்களின்  பொருளாதாரத்தினை  மேம்படுத்தும்  ஓர்  செயற் திட்டமாகவே  இது நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்படி   15  கிராமங்களிலுமுள்ள  விவசாயிகள்  திட்டப் பின்னணியில்  குறிப்பிட்டதைப் போன்று தோப்ப+ர், மூதூர்  ஆகிய   நகரங்களிலுள்ள  முதலாளிகளிடம்  விவசாய  உள்ளீடுகளை  கடனுக்கு வாங்கி அறுவடை காலங்களில் முதலாளிகள்  நிர்ணயிக்கின்ற  விலைகளுக்கு பொருட்களை  வழங்கின்றனர்.

Katpaga_RiceMillஇந்த  நிலையினை  நாம்  எமது  மேற்படி திட்டத்தினால்  குறிப்பிட்ட  களக் கிராமங்களிலுள்ள   விவசாயிகளை  ஒண்றிணைத்து அதன்  ஊடாக  அவர்களுக்குத்  தேவையான   விவசாய  உள்ளீடுகளை எமது  நிறுவனத்தில்  தற்போது   நடைமுறையில்  உள்ள  பொருளாதார  மேம்பாட்டுத் திட்டத்தின்  ஊடாக  எம்மிடம்  கடன் கோரி  விண்ணப்பிக்கின்ற   பயனாளயிகளுக்கு கடன்  அடிப்படையில்  நியாயமான  விலையில்  வழங்குதலும், அவர்கள்  அறுவடை  செய்கின்ற   வேளையில்   அவர்களைப் பாதிக்காத வகையில்   நடைமுறை  விலைக்கு  ஏற்றார்  போல  நெல்லினை கொள்வனவு  செய்தலும், தேவையானவற்றை  களஞ்சியப்படுத்தி  வைத்தல்   ஒரு கட்டமான செயற்பாடக  அமையும்.

அடுத்து இதன் தொடர்  செயற்பாடாக இப்பிரதேச  விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு  செய்யப்படும் நெல்லினை  களஞ்சியப்படுத்தி  வைப்பதுடன், மேற்படி  களப் பிரதேசங்களில்  கடந்த கால யுத்த அனர்த்தத்தினால் கணவன் சுடப்பட்ட  (தமிழ் இளம்  விதவைகளையும்) , கணவன் காணாமல் போதல், கணவன் கடத்தப்பட்ட, கணவன் தடுப்பு முகாம்களில் உள்ள  தலமை தாங்கும் குடும்பப் பெண்கள் எதுவித தொழில் வாய்ப்புக்கள் இன்றி  தவிக்கின்ற நிலையில் உள்ளவர்களையும், இத்தொழில் நுட்ப அறிவு கொண்ட ஆண், பெண்  என இரு  பாலாரையும்   குழக்களாக்கி  பெறப்படும்   நெல்லினை  அவித்தும், பச்சiயாகவும்  உலர  வைத்து ஆலையில் குற்றி  அரிசியாக்கல் மற்றும்  அரிசி மாவு, மிளகாய் அரைத்தல் போன்ற செயற்பாடுகளை குறிப்பிட்டளவு  குழுவினர்களாலும்,  அரிசி பொதி செய்தல், மாவு பொதி செய்தல்,  மிளகாய்த் தூள் பொதி செய்தல் போன்ற  செயற்பாடுகள் மற்றைய  தொழில்  குழுக்களாலும் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ் ஆலையின்  ஊடாக  பெறப்படுகின்ற முடிவுப் பொருட்களாக உரிதியான அரிசி, பொதி செய்யப்பட்ட  அரிசி, பொதி செய்யப்பட்ட அரிசி மாவு, பொதி செய்யப்பட்ட  மிளகாய்த்தூள்  என்பன திருமலை  நகரத்தில் இயங்கும்  எமது  நிறுவனத்திற்குச்  சொந்தமான ஸ்ரீசக்தி வாணிபம்  மொத்த  விற்பனை  நிலையத்திற்கு விற்பனைக்காக  தேவைக்கு ஏற்ப அனுப்பப்படுவதுடன்,  இலங்கையில்  உள்ள  மாவட்டங்களுக்கும் தேவை ஏற்படின் எதிர் காலத்தில்  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இதன்  மூலம்  குறிப்பிட்ட  ஆலையின்  ஊடாகப் பெறப்படுகின்ற  முடிவுப் பொருட்களுக்கான சந்தை  வாய்ப்பு வெளியில்  நிறையவே   இருக்கின்றது.

அதுமட்டுமன்றி இப்பிரதேச மக்கள் நெல் அறுவடை காலங்களில் முழமையாக நெல்லினை  விற்பதும் ஏனைய காலங்களில் சோற்றுக்கான அரிசியினை வெளியிடங்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு உரிய   பொருளாதார  பல்வகை  ஆலையின்  ஊடாக தேவையான  அரிசியினை   உள்ளூர்  மக்களுக்கும் வழங்கக் கூடியதாக இருக்கும்.   

இத்திட்டத்தின்  ஊடாக  இப்பிரதேச  மக்களுக்கும், ஏனைய   பிரதேச மக்களுக்கும் தரமான முடிவுப் பொருட்கள்  கிடைப்பதுடன், நியாயமான விலையிலும் பொருட்கள் கிடைக்கின்ற  தன்மையினை  உறுதிப்படுத்தக்  கூடியதாக  இருக்கும்.

அதுமட்டுமன்றி இத்தொழில் முயற்சிகளில்  ஈடுபடும்  பாதிக்கப்பட்ட   பெண்கள்  தலமை தாங்கும்  குடும்பப் பெண்களுக்கும்  ஓர்  நிரந்தரமான   மாத வருமானம் கிடைக்கும். இதனால் இக்குடும்பங்களுக்கான  வருமானம்  அதிகரிக்கின்ற  வேளையில்   பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள்  மகிழ்ச்சியாக  வாழ்வதுடன், பிள்ளைகளின்  எதிர் காலமும்  ஒளிமயமாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
 
Katpaga_RiceMillமேற்படி  பல்வகை ஆலைச் திட்டச் செயற்பாட்டிற்கான  அனைத்து நடவடிக்கைகளும்   எமது  நிறுவனத்திற்குச் சொந்தமான திருக்கோணமலை  மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்கு  பிரதேசத்திலுள்ள  பாட்டாளிபுரம்  பொருளாதார மேம்பாட்டு மையம்  வளாகத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும். இம்மையத்தில்    அரைக்கும் ஆலையும்,  நெல் உலர வைக்கும் தளமும் திருத்தி அமைக்கப்படுவதுடன், இதற்குத் தேவையான அரிசி அரைக்கும் இயந்திரம் (கல், மண் என்பனவற்றினை வேறாக்கி தரப்படுத்தும் இயந்திரம்) மிளகாய் அரைக்கும் இயந்திரம், அரிசி மாவு அரைக்கும் இயந்திரம் போன்ற தேவையான இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இத்தொழில் நடைமுறைப்படுத்தப்படும்.

விளைவுகள்:

மக்கள் தொழில்  குழுக்களை  உருவாக்கமும் பலப்படுத்தலும்.
15 தொழில்  குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கும். பொருளாதார அபிவிருத்தி  திட்ட  நடவடிக்கைகளில் 15 கிராமங்களிலுமள்ள தொழில் குழு ப+ரண ஒத்துழைப்பினை  வழங்குவதனை  அவதானிக்க  முடியும்.

நெல் கொள்வனவும் பல்வகை ஆலை அமைத்தலும்.
1. பாட்டாளிபுரம் கிராமத்தில் பல்வகை ஆலை இயங்கும். • 
2. பாட்டாளிபுரம்  கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  மொத்த  விற்பனை  நிலையம் மூலம்  200  தொழில் செய்பவர்கள் உள்ளீடுகளை பெற்றிருப்பர்.
3. குறைந்த விலையில்  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதனை அவதானிக்க  முடியும்.
4. மூதூர், தோப்ப+ர் ஆகிய நகரங்களுக்கு சென்று  தொழில் உள்ளீகளைப் பெற்றுக் கொள்பவர்களின்  எண்ணிக்கை  65% இருந்து 35% ஆக  குறைவடைந்து  காணப்படம்.
5. முதலாளி சுரண்டலிலிருந்து  தொழில் செய்பவர்களும் சாதாரண மக்களும்  விடுபட்டு இருப்பார்கள்.
6. கணவனை  இழந்து  தவிக்கும் பெண்கள் இணைந்து கூட்டுத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பார்கள்.
7. அரிசி ஆலையில் அரிசி, அரிசி மாவு, மிளகாய்  தூள்  என்பன பெண்கள் குழுக்களால்  பொதிகள் செய்யப்படும்.  
8. பெண்களுக்கான  நிரந்தர வருமானம்  கிடைக்கும்.

திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம்

சிதைவடைந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழரின் வரலாற்று ஆதாரங்கள். : அ மயூரன்

Yamuna Eri”கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” போன்ற உணர்வூட்டி உசுப்பேத்தும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று முதுசம்களை பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.

யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது ”யமுனா ஏரி” எனப்படுகிற மன்னர்கள் பயன்படுத்திய ப வடிவ தடாகம்.புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.

யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

Sangiliyan Manthiri Manai Jaffnaஅடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள ”மந்திரிமனை”. இது ஓர் புராதன மாடி வீடு.பிரதான வாசலிலிலே அவ் வீடு பற்றி சாசனம் ஒன்று பழந் தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம்.அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது.

முன்பு ஒரு முறை அங்கு செல்கையில் ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்தார்கள். எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்தார். இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப் பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.

King Sangiliyan Palace Entranceஅடுத்தது யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று. பழைய அரண்மனையின் சிதைவு இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை. அதனை யார் எப்போது அமைத்தார்கள் என்பது தெரியவில்லை.) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள். அண்மையில் நல்லூரில் நட்சத்திர விடுதியொன்று இதற்கு அண்மையில் கட்ட முற்படுகையில் எங்கள் கலாசார காவலர்கள் (!!??) பொங்கி எழுகையில் இது பற்றிய விழிப்புணர்வு ஓரளவு மக்களிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இலங்கை அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஈழத்தமிழர் புராதன அருங்காட்சி சாலை.

Museum_in_Jaffnaஅத்துடன் நல்லூரில் நாவலர் றோட்டில் நாவலர் கலாச்சார மண்டபத்திற்குப் பின்னால் யாழ் நூதண சாலை உண்டு. அதன் கேவலத்தைப் பாருங்கோ. 

எத்தனை எத்தனை வீரபுருஷர்கள் மாமன்னர்களாய் ஆண்ட தேசம் இந்த யாழ்ப்பாண இராச்சியம். அந்த அரசாட்சிகளின் சுவடுகளைக் காவல்காக்கும் கலா நிலையமான நூதனசாலையின் கோலத்தைப் பாருங்கள். சாயமிழந்த நூற்சேலை பிச்சைக்காரியின் உடலை மறைப்பது போல ஒரு கட்டிடம். அதுவும் நாவலர் மணிமண்டபத்துக்குப் பின்புறமாகஇ கழிப்பறை போல ஏனோ தானோவென்ற அங்கீகாரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை என்ற கல்விப்பீடம் மூலம் அறிஞர்கள் பலரை உருவாக்கி அங்கீகரிக்கக் காரணமாகவும் இருந்த இந்தக் கலைக்களஞ்சியங்கள் கடைசிக்காலத்தில் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் போல இருக்கும் நூதனசாலை.

Related Articles:

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொல்பொருட்கள்!

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழில் மோசடி!

UK_Visa_Advertயாழ்ப் பாணத்தில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் நபர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் நான்கு பேரிடம் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய நபரொருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

UK_Visa_Advertலண்டனுக்கு அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் நான்கு மாணவர்களிடம் 18 இலட்ச ரூபா பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது. ஒக்ரோபர் 02 இல் கைது செய்யப்பட்ட இந்நபர் ஒக்ரோபர் 04ல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதவான் குறிப்பிட்ட நபரை  75 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த க. அம்பிகைகுமார் என்பவரே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  நால்வரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றவராவார். மூவரிடம் ஐந்து இலட்ச ரூபாவும், ஒருவரிடம் மூன்று இலட்ச ரூபாவும் இவர் பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேலும் ஒருவர் வெளிநாட்டுக்கு கல்வி பயில அனுப்புவதாகக் கூறி மூவரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்ட பச்சிலைப் பள்ளி மக்கள் வெடிபொருட்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

landmines.jpgகிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப் பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் வெடிபொருட்கள் குறித்து அவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பளை நகரம், புலோப்பளை கிழக்கு, புலோப்பளை, முள்ளியடி, தம்பகாமம், தர்மக்கேணி, சோரன்பற்று, மாசார், இயக்கச்சி, ஆகிய கிராமங்களில் மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் தென்பட்டால் அவற்றைக் கைகளால் தொடமாமல் உடனடியாக பிரதேசச் செயலகம் அல்லது பிரதேசசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.  இதே வேளை, குப்பைகளை எரிக்காமல் குழிகளில் வெட்டிப் புதைக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. போரினால் இப்பிரதேசங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._._._._._.

கிளிநொச்சி பச்சிலைப் பள்ளியில் ஒன்பது கிராமங்களில் மீள்குடியேற்றம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட ஒன்பது கிராமங்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் Oct 14 2010 வியாழக்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இடம் பெயர்ந்து வுவனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உணவல்லாத பொருட்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன.  மீள்குடியேறும் இம்மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சுகாதார திணைக்களத்தினால் நடமாடும் சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரைச்சிப் பிரிவிலுள்ள மக்கள் மீள் குடியேறுவதற்கான பதிவுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டத்தில் இடம்பெற்றது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கயிருந்து பின்னர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வசித்து வந்த பலர் இன்று கரைச்சிப் பிரிவலுள்ள தங்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்வதற்காக பதிவுகளை மேற்கொண்டனர்.

யாழ்பாணத்தில் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றம் அபராதம்.

mos.jpgசுற் றாடலைத் தூய்மையாக வைத்திருக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருந்ததாக யாழ்ப்பாணம் கூட்டுறவுச்சங்கம் (யாழ்கோ) கல்வியங்காடு பகுதியிலுள்ள ஓர் உணவகம், ‘ஜவ்னா றெஸ்ட்’ என்கிற மதுபானச்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபையின் கொண்டாவில் டிப்போ ஆகியவற்றிற்கு எதிராகவே வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் இவர்களின் சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவித்து அதற்கான கால அவகாசமும் வழங்கியிருந்தனர். ஆனால். இக்கால அவகாசத்திற்குள் அவர்கள் அதனைச் செய்யத் தவறியதால் அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் தலா பத்தாயிரம் ருபா அபரத்தையும் விதித்தது.

Oct 14 2010 இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் யாழ். மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சட்டத்தின்படி விதிக்கப்பட்ட அதி கூடிய அபாராதம் எனபது குறிப்பிடத்தக்கது.