இன்று (ஒக்ரோபர் 16 2010) மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவுக்கு வரும் இந்த அரசி ஆலையானது கணவனை இழந்த 30 பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. மேலும் இந்த அரசி ஆலை லபாத்தையீட்ட ஆரம்பிக்கும் போது அதன் லாப நிதி மீண்டும் முழுமையாக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் என கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
._._._._._.
பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
கடந்த 30 வருடங்களாக இலங்கையில் ஏற்பட்டு வந்த யுத்த அனர்த்தம் காரணமாக குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யுத்த அனர்த்தத்தினால் 30 வருடமாக பொருளாதாரத் தடை, பொருட்கள் கொண்டு செல்லத் தடை, வரையறுக்கப்பட்ட பொருட்களக்கான அனுமதி, இறுதியாக இடம்பெயர்வு என பல வகையிலும் பாதிக்கப்பட்டு தற்கால சமாதான சூழ்நிலையில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்கு பிரதேச 15 திட்டக் கிராமங்களை சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் ஓர் செயற் திட்டமாகவே இது நடைமுறைப்படுத்தப்படும்.
மேற்படி 15 கிராமங்களிலுமுள்ள விவசாயிகள் திட்டப் பின்னணியில் குறிப்பிட்டதைப் போன்று தோப்ப+ர், மூதூர் ஆகிய நகரங்களிலுள்ள முதலாளிகளிடம் விவசாய உள்ளீடுகளை கடனுக்கு வாங்கி அறுவடை காலங்களில் முதலாளிகள் நிர்ணயிக்கின்ற விலைகளுக்கு பொருட்களை வழங்கின்றனர்.
இந்த நிலையினை நாம் எமது மேற்படி திட்டத்தினால் குறிப்பிட்ட களக் கிராமங்களிலுள்ள விவசாயிகளை ஒண்றிணைத்து அதன் ஊடாக அவர்களுக்குத் தேவையான விவசாய உள்ளீடுகளை எமது நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக எம்மிடம் கடன் கோரி விண்ணப்பிக்கின்ற பயனாளயிகளுக்கு கடன் அடிப்படையில் நியாயமான விலையில் வழங்குதலும், அவர்கள் அறுவடை செய்கின்ற வேளையில் அவர்களைப் பாதிக்காத வகையில் நடைமுறை விலைக்கு ஏற்றார் போல நெல்லினை கொள்வனவு செய்தலும், தேவையானவற்றை களஞ்சியப்படுத்தி வைத்தல் ஒரு கட்டமான செயற்பாடக அமையும்.
அடுத்து இதன் தொடர் செயற்பாடாக இப்பிரதேச விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லினை களஞ்சியப்படுத்தி வைப்பதுடன், மேற்படி களப் பிரதேசங்களில் கடந்த கால யுத்த அனர்த்தத்தினால் கணவன் சுடப்பட்ட (தமிழ் இளம் விதவைகளையும்) , கணவன் காணாமல் போதல், கணவன் கடத்தப்பட்ட, கணவன் தடுப்பு முகாம்களில் உள்ள தலமை தாங்கும் குடும்பப் பெண்கள் எதுவித தொழில் வாய்ப்புக்கள் இன்றி தவிக்கின்ற நிலையில் உள்ளவர்களையும், இத்தொழில் நுட்ப அறிவு கொண்ட ஆண், பெண் என இரு பாலாரையும் குழக்களாக்கி பெறப்படும் நெல்லினை அவித்தும், பச்சiயாகவும் உலர வைத்து ஆலையில் குற்றி அரிசியாக்கல் மற்றும் அரிசி மாவு, மிளகாய் அரைத்தல் போன்ற செயற்பாடுகளை குறிப்பிட்டளவு குழுவினர்களாலும், அரிசி பொதி செய்தல், மாவு பொதி செய்தல், மிளகாய்த் தூள் பொதி செய்தல் போன்ற செயற்பாடுகள் மற்றைய தொழில் குழுக்களாலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ் ஆலையின் ஊடாக பெறப்படுகின்ற முடிவுப் பொருட்களாக உரிதியான அரிசி, பொதி செய்யப்பட்ட அரிசி, பொதி செய்யப்பட்ட அரிசி மாவு, பொதி செய்யப்பட்ட மிளகாய்த்தூள் என்பன திருமலை நகரத்தில் இயங்கும் எமது நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்ரீசக்தி வாணிபம் மொத்த விற்பனை நிலையத்திற்கு விற்பனைக்காக தேவைக்கு ஏற்ப அனுப்பப்படுவதுடன், இலங்கையில் உள்ள மாவட்டங்களுக்கும் தேவை ஏற்படின் எதிர் காலத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
இதன் மூலம் குறிப்பிட்ட ஆலையின் ஊடாகப் பெறப்படுகின்ற முடிவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு வெளியில் நிறையவே இருக்கின்றது.
அதுமட்டுமன்றி இப்பிரதேச மக்கள் நெல் அறுவடை காலங்களில் முழமையாக நெல்லினை விற்பதும் ஏனைய காலங்களில் சோற்றுக்கான அரிசியினை வெளியிடங்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு உரிய பொருளாதார பல்வகை ஆலையின் ஊடாக தேவையான அரிசியினை உள்ளூர் மக்களுக்கும் வழங்கக் கூடியதாக இருக்கும்.
இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேச மக்களுக்கும், ஏனைய பிரதேச மக்களுக்கும் தரமான முடிவுப் பொருட்கள் கிடைப்பதுடன், நியாயமான விலையிலும் பொருட்கள் கிடைக்கின்ற தன்மையினை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
அதுமட்டுமன்றி இத்தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பாதிக்கப்பட்ட பெண்கள் தலமை தாங்கும் குடும்பப் பெண்களுக்கும் ஓர் நிரந்தரமான மாத வருமானம் கிடைக்கும். இதனால் இக்குடும்பங்களுக்கான வருமானம் அதிகரிக்கின்ற வேளையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுடன், பிள்ளைகளின் எதிர் காலமும் ஒளிமயமாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
மேற்படி பல்வகை ஆலைச் திட்டச் செயற்பாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் எமது நிறுவனத்திற்குச் சொந்தமான திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்கு பிரதேசத்திலுள்ள பாட்டாளிபுரம் பொருளாதார மேம்பாட்டு மையம் வளாகத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும். இம்மையத்தில் அரைக்கும் ஆலையும், நெல் உலர வைக்கும் தளமும் திருத்தி அமைக்கப்படுவதுடன், இதற்குத் தேவையான அரிசி அரைக்கும் இயந்திரம் (கல், மண் என்பனவற்றினை வேறாக்கி தரப்படுத்தும் இயந்திரம்) மிளகாய் அரைக்கும் இயந்திரம், அரிசி மாவு அரைக்கும் இயந்திரம் போன்ற தேவையான இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இத்தொழில் நடைமுறைப்படுத்தப்படும்.
விளைவுகள்:
மக்கள் தொழில் குழுக்களை உருவாக்கமும் பலப்படுத்தலும்.
15 தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கும். பொருளாதார அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளில் 15 கிராமங்களிலுமள்ள தொழில் குழு ப+ரண ஒத்துழைப்பினை வழங்குவதனை அவதானிக்க முடியும்.
நெல் கொள்வனவும் பல்வகை ஆலை அமைத்தலும்.
1. பாட்டாளிபுரம் கிராமத்தில் பல்வகை ஆலை இயங்கும். •
2. பாட்டாளிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மொத்த விற்பனை நிலையம் மூலம் 200 தொழில் செய்பவர்கள் உள்ளீடுகளை பெற்றிருப்பர்.
3. குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதனை அவதானிக்க முடியும்.
4. மூதூர், தோப்ப+ர் ஆகிய நகரங்களுக்கு சென்று தொழில் உள்ளீகளைப் பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை 65% இருந்து 35% ஆக குறைவடைந்து காணப்படம்.
5. முதலாளி சுரண்டலிலிருந்து தொழில் செய்பவர்களும் சாதாரண மக்களும் விடுபட்டு இருப்பார்கள்.
6. கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் இணைந்து கூட்டுத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பார்கள்.
7. அரிசி ஆலையில் அரிசி, அரிசி மாவு, மிளகாய் தூள் என்பன பெண்கள் குழுக்களால் பொதிகள் செய்யப்படும்.
8. பெண்களுக்கான நிரந்தர வருமானம் கிடைக்கும்.
திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம்