United People’s Freedom Alliance UPFA 59,784 42.78% 2
United National Party UNP 39,691 28.40% 1
Ilankai Tamil Arasu Kadchi ITAK 33,268 23.81% 1
Democratic National Alliance DNA 2,519 1.80% 0
Thamil Makkal Viduthalai Pulikal TMVP 1,712 1.23% 0
Akila Ilankai Thamil Congress AITC 1,182 0.85% 0
Pathmanabha Eelam Revolutionary Liberation Front PERLF 279 0.20% 0
Sri Lanka National Front SLNF 170 0.12% 0
United Socialist Party USP 150 0.11% 0
Jathika Sangwardhena Peramuna JSP 109 0.08% 0
Independent Group 11 IND11_D14 101 0.07% 0
Independent Group 7 IND07_D14 98 0.07% 0
Akila Ilankai Tamil United Front AITUF 85 0.06% 0
United National Alternative Front UNAF 76 0.05% 0
Independent Group 14 IND14_D14 62 0.04% 0
Independent Group 3 IND03_D14 55 0.04% 0
Independent Group 6 IND06_D14 41 0.03% 0
Independent Group 13 IND13_D14 39 0.03% 0
Independent Group 12 IND12_D14 38 0.03% 0
Independent Group 5 IND05_D14 35 0.03% 0
Independent Group 1 IND01_D14 33 0.02% 0
Independent Group 10 IND10_D14 33 0.02% 0
Left Liberation Front LLF 31 0.02% 0
Muslim Liberation Front MLF 28 0.02% 0
United Democratic Front UDF 27 0.02% 0
Jana Setha Peramuna JSEP 23 0.02% 0
Independent Group 4 IND04_D14 19 0.01% 0
Independent Group 9 IND09_D14 16 0.01% 0
Independent Group 2 IND02_D14 15 0.01% 0
Sinhalaye Mahasammatha Boomiputra Pakshaya SMBP 14 0.01% 0
Independent Group 8 IND08_D14 9 0.01% 0
Valid 139,742 93.17%
Rejected 10,240 6.83%
Polled 149,982 62.20%
Electors 241,133
20
20
நாவலப் பிட்டி தேர்தல் தொகுதியில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திலும் இன்று நடைபெற்ற மீள் வாக்களிப்பு மிகவும் அமைதியாக இடம்பெற்றதாகவும் 55 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4:00 மணிக்கு வாக்களிப்பு முடிவுற்றது. இன்றைய வாக்களிப்பின்போது எவ்விதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் இடமபெறவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெறவுள்ள ‘Role in Ethnic Reconciliation and Economic Reconstruction – இன மீளுறவை ஏற்படுத்துவதற்கான பாத்திரமும் பொருளாதார மீள் கட்டுமானமும்’ என்ற கருத்தரங்கில் ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முயற்சி எடுத்துள்ள வி மனோகரி கீழுள்ள கேள்விகள் தொடர்பான பதிலை புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார். இந்த ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு மத்திய அரசின் முன்வைக்கப்படும் என்றும் வி மனோகரி அனுப்பி வைத்துள்ள மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். இக்கருத்தரங்கிற்கு தேசம்நெற் இணையத்திற்கு எவ்வித தொடர்பும் கிடையாத. ஆயினும் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக தேசம்நெற் வாசகர்களின் கருத்துக்களை பலரும் அறிவதில் பாதகம் இல்லை. ஆதனால் கீழுள்ள கேள்விகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்.
Q.1. How do you see the Sri Lankan Diaspora after the LTTE’s defeat?
கே1: எல்ரிரியின் தோல்விக்குப் பின் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
Q.2.What are the important political developments among the Sri Lankan Tamil diaspora after May 2009?
கே2: மே 2009க்குப் பின் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் உள்ள முக்கிய அரசியல் நடவடிக்கை என்ன?
Q.3. Non-LTTE Tamil diaspora- any change of political strategy and how are they influencing the Sri Lanka government and the West? Sri Lankan Muslim diaspora parties?
கே3: – புலிகள் அல்லாத புலம்பெயர்ந்த தமிழர்கள் – இலங்கை அரசு மீதும் மேற்குலகு மீதும் செல்வாக்கு செலுத்தும் வகையில் அரசியல் செயற்திட்டம் அமைந்துள்ளதா? புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லீம் கட்சிகளின் நிலையென்ன?
Q.4. What do you think the government should do to engage diaspora? What are the hindrances faced by diaspora in playing a political or economic role in Sri Lanka?
கே4: புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்புகனை ஏற்படுத்த அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடுவதில் எதிர்கொள்ளும் தடைகள் என்ன?
Q.5. How did Sinhalese diaspora respond and what activities did they undertake?கே5: புலம்பெயர்ந்த சிங்களவர்கள் எவ்வாறு பரதிபலிக்கின்றனர்? எவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்?
Q.6. Were/Are there any attempt by the Sri Lankan High Commissions (SLHC) in the West to engage Tamil diaspora in ethnic reconciliation?
கே6: மேற்குலகில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் இன மீள்உறவை ஏற்படுத்த ஏதாவது முயற்சிகளை எடுத்துள்ளதா?
Q.7. In your view, what should be the role of SLHC in engaging diaspora, to solve the conflict at home?
கே7: இலங்கையில் உள்ள இன முரண்பாட்டை தீர்ப்பதில் புலம்பெயர்ந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இலங்கைத் தூதரகங்களின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
Q.8. What kind of involvement is there among the Tamil diaspora to economically develop the Tamil provinces in Sri Lanka? What initiatives did the diaspora take up?
கே8: இலங்கையில் உள்ள தமிழ் மாநிலங்களை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு ஈடுபடுகின்றார்கள்? எவ்வாறான முன்முயற்சிகளை புலம்பெயர்ந்தவர்கள் எடுத்துள்ளனர்?
Q.9.What steps do you think the Sri Lankan government should take to solve the ethnic differences?
கே9: இன வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறான படிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டியில் இன்று (20ம் திகதி) நடைபெறும் மீள் வாக்களிப்பை வாக்குசாவடிகளினுள் ஒரே நேரத்தில் இருந்தபடி கண்காணிக்கவென இரு கண்காணிப்பு அமைப்புக்களுக்கு தேர்தல் ஆணையாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் கண்காணிப்பு பணிகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் பெப்ரல் அமைப்புக்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்திற்கும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன்படி மீள் வாக்களிப்பு இடம்பெறும் 38 வாக்குச் சாவடிகளினதும் உள்ளே இருந்தபடி இரு அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இப்பணியில் பெப்ரல் அமைப் பும், தேர்தல் வன்முறைகளைக் கண் காணிப்பதற்கான மத்திய நிலையமும் 76 பிரதிநிதிகளை ஈடுபடுத்தவுள்ளன.
இதேநேரம் மேற்படி 38 வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும் வாக்க ளிப்பைக் கண்காணிக்கும் பணியில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம், கபே ஆகிய அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன. இந்த அமைப்புக்கள் சுமார் 160 பிரதிநிதிகளை இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
இது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறுகையில் நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டியில் இன்று நடைபெறும் மீள் வாக்களிப்பை வாக்குச் சாவடியினுள் இருந்தபடி கண்காணிக்கவென 38 பிரதிநிதிகளையும், நடமாடும் ஐந்து வாகனங்களில் 20 பேரையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் இணைப்பாளர் டி. திஸாநாயக்கா குறிப்பிடுகையில், வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி கண்காணிக்கும் பணியில் 35 பிரதிநிதிகளையும் ஐந்து நடமாடும் வாகனங்களில் 10 பிரதிநிதிகளையும் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.
ஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக் குமுறல் காரணமாக கொழும்புக்கும், ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான விமான சேவைகள் நேற்று நான்காவது நாளாகவும் இடை நிறுத்தப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கன் எயார் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எனினும் இத்தாலியின் ரோம் நகர விமான நிலையத்திலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீலங்கன் எயார் விமானமொன்று நேற்று நண்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவ்வதிகாரி கூறினார். என்றாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக அந்நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார். ஐஸ்லாந்து நாட்டின் எரிமலை குமுறல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.
வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை ஆகிய வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் இன்று மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு தொடர்பாக முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாள ருக்கு முன்வைப்பவர்கள் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.
நாவலப்பிட்டி வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877608
திருகோணமலை வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877609
கண்டி, இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடும் காற்றுடன் கூடிய மழை சில தினங்கள் நீடிக்கும் எனவும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மழையுடன் வீசிய கடும் காற்றினால் நேற்று முன்தினம் அநுராதபுரம் நுவரகம்பலாதவில் 8 வீடுகளும் கண்டி தொலுவ பகுதியில் 30 வீடுகளும் கண்டி உடஒவிட பகுதியில் 8 வீடுகளும் சேதமானதாக இடர் முகாமைத்துவ நிலைய பேச்சாளர் என். கே. கொடிப்பிலி தெரிவித்தார்.
இது தவிர, மின்னல் தாக்கி அநுராதபுரம் ஆஸ்பத்திரி சேதம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் இடி மின்னல் தாக்கி 5 பேர் இறந்த தாகவும் அவர் கூறினார். நேற்று முன்தினம் குருணாகல் பகுதியில் ஒரு பெண் இறந்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் மே நடுப்பகுதி வரை மழை தொடரும் எனவும் கால நிலை அவதான நிலையம் கூறியது. மழை பெய்வதற்கு முன்னர் கடும் காற்று வீசும் நிலை சில தினங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
உஷ்ண காலநிலை சில நாட்களில் குறைவடையும் எனவும் அவதான நிலையம் தெரிவித்தது.