ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – ரோமிலிருந்து இருநூறு பயணிகளுடன் ஸ்ரீலங்கன் விமானம் இலங்கை வருகை

iceland.jpgஐஸ்லாந்து நாட்டின் எரிமலைக் குமுறல் காரணமாக கொழும்புக்கும், ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான விமான சேவைகள் நேற்று நான்காவது நாளாகவும் இடை நிறுத்தப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கன் எயார் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும் இத்தாலியின் ரோம் நகர விமான நிலையத்திலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீலங்கன் எயார் விமானமொன்று நேற்று நண்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவ்வதிகாரி கூறினார். என்றாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக அந்நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவே முடிவு எடுக்கப்படும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார். ஐஸ்லாந்து நாட்டின் எரிமலை குமுறல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *