18

18

ஜப்பான் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கத் திட்டம்!

busஇலங்கை வரும் ஜப்பான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய சுற்றுலாத்துறை அமைச்சு விசேட திட்டம் ஒன்றை வகுத்தள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணத்திலக்க இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி சொகுசு ரயில் சேவை மற்றும் உள்ளுர் விமான சேவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் ஜப்பான் மக்கள் வரவேற்பதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வருடாந்தம் நடைபெறும் ஜப்பான் சர்வதேச சுற்றுலா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தம் வகையில் பங்குபற்றிய அமைச்சர் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக ஜப்பானில் மேற்கொள்ளப்படுவது போன்று பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொழிப் பிரச்சினையினால் சட்டத்துறையில் சில நெருக்கடிகள்; தீர்வு காண நடவடிக்கை – அமைச்சர் மிலிந்த யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

மொழிப் பிரச்சினையினால் சட்டத் துறையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை எடுக் கப்படுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரி வித்தார்.யாழ்ப்பாணத்துக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண் டிருந்த அமைச்சர் மிலிந்த மொரகொட அங்கு புத்திஜீவிகள் மத்தியில் உரையா ற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நீதித்துறையை விரிவு படுத்துவதற்காக அமைச்சு மேற்கொண் டுள்ள செயற்றிட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் புதிதாக ஐந்து நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த அமைச்சர் வதிரியில் இயங்கும் நீதிமன்றத்தில் வைத்தே இவ்வாறு கூறினார்.

அமைச்சர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கும், நீதவான் நீதிமன் றத்திற்குமான சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் உபகர ணங்கள், தளபாடங்களை கையளித்தார்.இவ்வைபவத்திலே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ. விக்னராஜா, சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஏ. பிரேம் சங்கர், ஊர்காவற்றுறை நீதிபதியும் பருத் தித்துறை மேலதிக மாவட்ட நீதிபதி யுமான ஜோய் மகாதேவா உட்பட சட்டத் தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இரு கனடா எம்பிக்களுக்கு இலங்கை வர விசா மறுப்பு

2222patrick_paul.jpgகனடா கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றிக் பிரௌன் மற்றும், போல் கலேன்ட்ரா ஆகியோருக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இலங்கையின் வவுனியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விடயம் கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் இடம்பெயர்ந்தோரின் நிலையைப் பார்வையிடவிருந்ததாக பற்றிக் பிரௌன் தெரிவித்துள்ளார். 

நிவாரணக் கிராமங்களிலிருந்த 96 பல்கலை மாணவருக்கு இந்து மாமன்றம் நிதி உதவி

நிவாரணக் கிராமங்களிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த மேலும் 96 பட்டதாரி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக ஒவ்வொருவருக்கும் தலா 10000/= ரூபா வீதம் நிதியுதவி செய்துள்ளது.

இது தொடர்பான வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மாமன்ற யாழ். பிராந்திய அலுவலகத்தில் மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பாக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். விஜய்குமார் கலந்துகொண்டார். ஆறு திருமுருகன், மாமன்ற யாழ். இணைப்பாளர் . ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்குரிய கொடுப்பனவை வழங்கினார்கள்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்

171009gaza.jpgஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியோர் மீது போர்க்குற்றம் சுமத்தும், ”காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை” ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வாக்களித்துள்ளது.

இந்த அறிக்கையை தென்னாபிரிக்க நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தயாரித்துள்ளார்.

அந்த சம்பவங்கள் குறித்து இரு தரப்பும் நம்பத்தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறுகின்ற அந்த அறிக்கை, அவ்வாறு செய்யா விட்டால் இரு தரப்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையின் மீது மாத்திரமல்லாமல், இந்த விடயத்தில் ஹமாஸை அல்லாமல் இஸ்ரேலை மாத்திரம் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கோருகின்ற பாலத்தீன ஆதரவு தீர்மானத்தின் மீது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் பிரத்தியேகமாக இஸ்ரேலை மாத்திரம் இலக்கு வைத்தமை தன்னை துக்கமடையச் செய்துள்ளதாக கோல்ட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாவேயில் சுவாங்கிராய் கட்சியின் மூத்த உறுப்பினர் ராய் பென்னெட் விடுதலை

181009aptsvangiriai_.jpgஜிம்பா ப்வேயில் பிரதமர் மோர்கன் சுவாங்கிராய்யின் கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான கட்சியுடைய மூத்த உறுப்பினரான ராய் பென்னெட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராய் பென்னெட் கைதானதை அடுத்து அரசாங்கத்தில் தங்களோடு கூட்டணி சேர்ந்துள்ள ஸானு பி.எஃப். கட்யுடன் ஒத்துழைப்பதை சாங்கிராய் நிறுத்திக்கொண்டுள்ளார்.

ராய் பென்னெட் சிறையில் இருக்கும் வரை தனது கட்சி அமைச்ச்சரவைக் கூட்டங்களிலோ அரசாங்க நடவடிக்கைகளிலோ பங்குகொள்ளாது என சாங்கிராய் தெரிவித்திருந்தார்.

ஜிம்பாப்வேயின் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயத்துறை துஅனி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த பென்னெட், சென்ற வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீதது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.