நிவாரணக் கிராமங்களிலிருந்த 96 பல்கலை மாணவருக்கு இந்து மாமன்றம் நிதி உதவி

நிவாரணக் கிராமங்களிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த மேலும் 96 பட்டதாரி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக ஒவ்வொருவருக்கும் தலா 10000/= ரூபா வீதம் நிதியுதவி செய்துள்ளது.

இது தொடர்பான வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மாமன்ற யாழ். பிராந்திய அலுவலகத்தில் மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பாக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். விஜய்குமார் கலந்துகொண்டார். ஆறு திருமுருகன், மாமன்ற யாழ். இணைப்பாளர் . ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்குரிய கொடுப்பனவை வழங்கினார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *