மொழிப் பிரச்சினையினால் சட்டத் துறையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை எடுக் கப்படுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரி வித்தார்.யாழ்ப்பாணத்துக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண் டிருந்த அமைச்சர் மிலிந்த மொரகொட அங்கு புத்திஜீவிகள் மத்தியில் உரையா ற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் நீதித்துறையை விரிவு படுத்துவதற்காக அமைச்சு மேற்கொண் டுள்ள செயற்றிட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் புதிதாக ஐந்து நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த அமைச்சர் வதிரியில் இயங்கும் நீதிமன்றத்தில் வைத்தே இவ்வாறு கூறினார்.
அமைச்சர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கும், நீதவான் நீதிமன் றத்திற்குமான சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் உபகர ணங்கள், தளபாடங்களை கையளித்தார்.இவ்வைபவத்திலே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ. விக்னராஜா, சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஏ. பிரேம் சங்கர், ஊர்காவற்றுறை நீதிபதியும் பருத் தித்துறை மேலதிக மாவட்ட நீதிபதி யுமான ஜோய் மகாதேவா உட்பட சட்டத் தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.