13

13

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்த 82 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்

vau-camp-srilanka.jpgமன்னார் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வன்னி மக்கள் நேற்று திங்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பப்தாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்..

இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகுட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களை சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இழுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு கொழும்பில்

தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு இம்முறை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 15ம் திகதி கொழும்பு – 7, விஜேராம மாவத்தை இலக்கம் 144, ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும் நிகழ்வில் அனைத்து அமைச்சுக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் முகாமைத்துவ மட்டத்தில் இருநூறு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறது – பிரிட்டன் அமெரிக்கா

210909flag.jpgதலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.

ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.

சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு – திறப்பு விழா

கராப்பிட்டிய பெரியாஸ்பத்திரியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறுவர் இருதய சிகிச்சைப் பிரிவு பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்கவினால் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கில் 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சைனைக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 250 பட்டதாரிகளுக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் பிரதிக் கல்வி அமைச்சரை அண்மையில் சந்தித்த போது இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் மேல் மாகாண பாடசாலைகளில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு முன்னர்- அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தகவல்

laxman_yapa_abeywardena.jpgஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார்.

தமது அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த மாதம் 15 ஆம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இத்தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும்.

தென் மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி வழங்கிய பொது மக்களுக்கு அரசாங்கம் நன்றி தெரிவிக்கின்றது. எதிர்கட்சிகள் படுதோல்வியடைந்தன. மக்கள் விடுதலை முன்னணி அதன் கோட்டையான திஸ்ஸமகாராமையில்கூட தோல்வியடைந்தது. ஆனால் பொது மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றது என்றார்