தேசிய உளவளத்துணை தின ஆரம்ப நிகழ்வு இம்முறை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 15ம் திகதி கொழும்பு – 7, விஜேராம மாவத்தை இலக்கம் 144, ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும். காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறும் நிகழ்வில் அனைத்து அமைச்சுக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் முகாமைத்துவ மட்டத்தில் இருநூறு உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.