03

03

இலங்கையில் மோசமான காலநிலை, காற்றில் மரம் சரிந்து ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

021009monsoon-rains.jpgதற்போதைய இலங்கையின் காலநிலை நாடு முழுவதும் மோசமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களை ஏற்படுத்தி வருகிறது. காலி, கல்வடுகொட பிரதேசத்தில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பஞ்சுமரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக ஐந்து பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.
பலியானவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும், இரு சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடும் மழை காரணமாக காசல் நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக களனி கங்கையின் கரையோரத்தில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போதைய காலநிலை தொடந்தும் நிலவும் என கால நிலைய அவதான நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான கடற்பிரதேசங்களில் தற்போது 40 கிலோமீற்றர் தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையிலான காற்றின் வேகம், 60 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவை

மாத்தறை ரயில் நிலையத்துக்கு இரவு 8.25க்கு சென்றடையும் புகையிரதத்தில் வரும் பயணிகளின் நன்மை கருதி இரவு நேர பஸ் சேவையை நடத்த போக்குவரத்துச் சபை முன்வந்துள்ளது.

ரயில்வே திணைக்களமும், இலங்கை போக்குவரத்துச் சபையும் இணைந்து கூட்டு சேவையாக இதனை நடத்துகின்றன.

சூறாவளி தாக்கக்கூடிய பிலிப்பைன்ஸில் பேரிடர் அவசர நிலை

01-indonesia.jpgபிலிபைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலையை அறிவித்துள்ளார். புதிய சூறாவளியான பார்மா தாக்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை இந்த சூறாவளி கரையை கடக்கும் என்றும் இதன் வேகம் மணிக்கு 230 கிலோமீட்டர் வரை வீசும் என்றும் நாட்டின் வானிலை மையம் கணித்துள்ளது.  இந்த சூறாவளி காரணமாக 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. கூறுகிறது. கடந்த சனிக்கிழமை வேறோரு சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தென் கிழக்கு ஆசியாவில் நானூறு பேர் உயிரிழந்தனர்.

மலையகப் பகுதிகளில் மண்சரிவு அபாயம்: வீடுகளுக்கு சேதம்; போக்குவரத்து துண்டிப்பு

011009rain-in-upcountry.jpgநாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனை, ஹட்டன் வீதியில் மழை காலங்களில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளி எனக் கருதப்படும் அளவுக்கு மரங்கள் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் முறிந்து விழுந்துள்ளன. பிரமாண்டமான மாறாமரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து விழுந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.

இதே போன்று கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன. உடனடியாக இந்த மாம ரம் வீதி அதிகார பிரிவினால் அகற்றப்பட்டது. இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் நேற்று முதல் மின்வெட்டு இடம் பெற்றுள்ளது.

தமிழ்ச் சங்கத்தில் வாசிப்பு மாத நிகழ்வுகள்

வாசிப்பு மாதத்தையொட்டி ஒக் டோபர் மாதம் முழுவதும் வாசி ப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் முழுவதும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் அறிவோர் ஒன்றுகூடல் மற்றும் படித்ததும் பிடித்ததும் நிகழ் வுகளில் வாசிப்பை ஊக்குவிப்ப தற்கான சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு தமிழ்ச் சங்க நூல் நிலையத்தை அங்கத்தவரல்லாதவர்களும் பாவிப்பதற்கு ஒக்டோபர் மாதம் முழுவதும் அனுமதி வழங்கு வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் நூலக அங்கத்தவர்களாகச் சேருபவர்களுக்கு அங்கத்துவப் பணத்தில் 50% கழிவு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிப்பதற்கென புதிய நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தெனவும் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.