தமிழ்ச் சங்கத்தில் வாசிப்பு மாத நிகழ்வுகள்

வாசிப்பு மாதத்தையொட்டி ஒக் டோபர் மாதம் முழுவதும் வாசி ப்புக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மாதம் முழுவதும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் அறிவோர் ஒன்றுகூடல் மற்றும் படித்ததும் பிடித்ததும் நிகழ் வுகளில் வாசிப்பை ஊக்குவிப்ப தற்கான சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு தமிழ்ச் சங்க நூல் நிலையத்தை அங்கத்தவரல்லாதவர்களும் பாவிப்பதற்கு ஒக்டோபர் மாதம் முழுவதும் அனுமதி வழங்கு வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் நூலக அங்கத்தவர்களாகச் சேருபவர்களுக்கு அங்கத்துவப் பணத்தில் 50% கழிவு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிப்பதற்கென புதிய நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தெனவும் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *