சூறாவளி தாக்கக்கூடிய பிலிப்பைன்ஸில் பேரிடர் அவசர நிலை

01-indonesia.jpgபிலிபைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலையை அறிவித்துள்ளார். புதிய சூறாவளியான பார்மா தாக்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை இந்த சூறாவளி கரையை கடக்கும் என்றும் இதன் வேகம் மணிக்கு 230 கிலோமீட்டர் வரை வீசும் என்றும் நாட்டின் வானிலை மையம் கணித்துள்ளது.  இந்த சூறாவளி காரணமாக 18 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. கூறுகிறது. கடந்த சனிக்கிழமை வேறோரு சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தென் கிழக்கு ஆசியாவில் நானூறு பேர் உயிரிழந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *