May

May

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு விளையாட்டரங்கு!

ground.jpgஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பார்வையாளாகளுக்கான வசதிகளுடன் கூடிய நவீன விளையாட்டரங்கு ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வாணபால முன்வைத்திருந்தார்.

45 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த விளையாட்டரங்குக்கு 535 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது,

மகரகமையில் வீடமைப்புத் திட்டம்.

இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக மகரகமையில் அமைந்துள்ள காணியில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.

நந்திமித்திரவை எம்.பி.யாக நியமிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

மாத்தளை மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் பதிவிக்கு நந்திமித்திர ஏக்கநாயக்காவை நியமிப்பதை தடுக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ரோகண பண்டாரநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஐ.தே.க.உறுப்பினரான நந்திமித்திர ஏக்கநாயக்க கடந்த பொதுத் தேர்தலில் அந்தக்கட்சியில் போட்டியிட்ட போதும் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் ஐ.தே.க. எம்.பி.அலிக் அலுவிகார காலமானதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக கூடுதல் விருப்பு வாக்குப் பெற்ற நந்திமித்திர ஏக்கநாயக்க அந்தப் பதவி தனக்கு வழங்கப்படவேண்டுமென கோரிவரும் நிலையில், அவருக்கு இந்தப் பதவியை வழங்கக் கூடாதென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பெறுபோறுகளின் அடிப்படையில் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவாரென தேர்தல் ஆணையாளர் சட்டமா அதிபர் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மாத்தளை மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றுள்ள நந்திமித்தர பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவாரென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றத் தவறியது இலங்கை தமிழர்களைப் பாதிக்குமா?

uno.jpgஇலங் கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி இலங்கை அரசு மீது சர்வதேச தமிழ் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, மேற்குலக நாடுகள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது.

இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பதால் இலங்கைக்குள்ளே இருக்கும் தமிழ் மக்களின் நலன்கள் பெரிதாக பாதிக்கப்படும் நிலை உருவாகாது என்றே தான் கருதுவதாக லண்டனில் உள்ள இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய அரசியல் போராட்ட நிலைபாட்டிலும் வழிமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை கரையோரங்களில் சுனாமி அச்சம்: கடல் நீர் உட்புகுந்ததால் பெரும் பரபரப்பு

sea.jpgஅம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் மினி சுனாமி ஏற்பட்டதனால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்து பதற்றத்துக்குள்ளாகினர். நேற்று வியாழன் அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பும், காற்றின் வேகமும் அதிகரித்ததனால் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படகுகளும் தோணிகளும் கிறவல் வீதிக்கருகில் ஒதுக்கப்பட்டிருந்தன. இது தவிர நாலாபுறமும் படகுகளும், தோணிகளும் ஒதுங்கிக் கிடந்தன.

மீனவர்களின் வாடிகளுக்குள் கடல் நீர் புகுந்ததனால் அங்கிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் தொழில் ரீதியான உபகரணங்களும் கடல் நீரில் அகப்பட்டன. கடல் கொந்தளிப்பும், உயர்ந்த அலைகளும் தொடர்ந்தும் ஏற்பட்ட வண்ணமுள்ளதனால் மீனவர்கள் தத்தமது படகுகளையும் தோணிகளையும் கடற்கரையை அண்மித்துள்ள தோணாக்களிலும், ஊர் பிரதேசங்களிலும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர்.

திடீரென ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் மீன்பிடி உபகரணங்களுக்குச் சிறு சிறு சேதம் ஏற்பட்ட போதிலும் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடல் கொந்தளிப்பும் மினி சுனாமியும் ஏற்பட்டதனால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டியிருந்த மக்கள் அச்சம் காரணமாகப் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.

தற்போது கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், நிலை சீரடையக் கூடிய வாய்ப்புக்குறைவாக இருப்பதாகவும் மீன்பிடி நடவடிக்கைகள் ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறினர். குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்போன்ற கடற் பிரதேசங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் உறுதி வழங்குகிறார் பிரதிக் கல்வி அமைச்சர்

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மௌலவி ஆசிரியர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படுமென மீண்டும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் உறுதிமொழியை வழங்கியுள்ளதுடன், ஓரிரு மாதங்களுக்குள் இந்த நியமனங்களை வழங்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். அமீரின் அழைப்பை ஏற்று பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தன் கடந்த திங்கட் கிழமை கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அவர் உலமாக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதின் ஏற்பாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மௌலவிமார்களினுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மௌலவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த மௌலவிகள், மௌலவியாக்கள் பெருமளவில் கலந்துகொண்ட இச்சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான உறுதிமொழியை அவர் வழங்கினார்.

பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; கடந்த இருவார காலத்திற்கு முன் கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தியதையடுத்து அதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய பாடசாலைகளுக்கான 1500 ஆசிரியர்கள் நியமனமும் தேசிய பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்கள் 206 பேருக்கான நியமனமும் வழங்கப்படவிருக்கின்றது. இதேவேளை, மௌலவி ஆசிரியர் விண்ணப்பதாரிகள் 460 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.பெரும்பாலும் அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜே.சிறீகாந்த், மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோரும் உரையாற்றினர். மேலும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.அமீர், பிரதி அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.எம்.எம். புஹாருடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யூதக் குடியேற்றம்: அமெரிக்க கோரிக்கையை நிராகரித்தது இஸ்ரேல்

israeli-settlements.jpgமத்திய கிழக்கின் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

குடியேற்றங்களின் எதிர்காலம் பற்றி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தைகளில்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் சார்பாகப் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார். விதிவிலக்கு எதுவுமின்றி தனது அனைத்து விதமான குடியேற்ற நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்திக்கொள்வதை அதிபர் ஒபாமா காண விரும்புவதாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஹில்லரி கிளிண்டன் புதனன்று கூறியிருந்தார்.

அதிபர் ஒபாமாவை வாஷிங்டனில் சந்திக்கின்ற பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் குடியேற்றம் தொடர்பாக கோரிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் தொடர்ந்தும் யூதக் குடியேற்றங்களை உருவாக்கிவருவது பாலஸ்தீன தனிநாடு என்ற இலட்சியம் எட்டப்படுவதை தடுத்துவிடும் என்று முஸ்லிம் நாடுகள் அஞ்சுகின்றன.

மே 29 – ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் “International Day of United Nations Peacekeepers” – புன்னியாமீன்

images0000.jpgமுதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது. 

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும்,  நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும்,  அமைதி காப்போர்களையும்,  கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ஆம் திகதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. 2008.05.29ஆம் திகதி 60ஆவது அமைதி காப்போர் தினம் கொண்டாடப்பட்டது. அதேநேரம்,  2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண்,  பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும்,  சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ஆம் திகதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது.

61 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தினத்திலே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது. (UNTSO)  1948ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய,  இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகின்றார். 1948.07.13ஆம் திகதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார்.

அதேபோல 1948.08.28ஆம் திகதி “காசாப் பகுதியில்’ சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும்,  1948.09.17ஆம் திகதி “கவுண்ட் போர்க் பெர்னடொட்” எனும் அமைதி காக்கும் வீரர்,  யுத்தத் தீவிரவாத இயக்கமான “STERN GANG” (ஸ்டர்ன் கேங்) எனும் கும்பலினால் கொலையுண்டார்.

இதேபோன்று 1958ஆம் ஆண்டு அரேபிய இஸ்ரேலியப் போர் 1973 அரேபிய இஸ்ரேலிய போர், 2008ஆம் ஆண்டு இஸ்ரேலிய லெபனன் போர் போன்றவற்றின் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளாலே கொல்லப்பட்டனர் என்பதுவும்,  ஐக்கிய நாடுகளின் தற்காலிப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி செயற்பட்டவர்களும் இஸ்ரேலியர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த அடிப்படையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விசேடமாக நினைவுகூரப்படுகின்றனர்.

உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றாலும்கூட, இதன் நடவடிக்கைகள் அமெரிக்க சார்பாக அமைந்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றன.

யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே. அதாவது,  சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது,  நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நா.வால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன்மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்குதல், ”சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கின்றது. ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயல்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே.

இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நா.வின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா… வீர வணக்கங்கள்.. : சாத்திரி

Sasthiriஇந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்.. எங்கள் கனவு.. எங்கள் உழைப்பு.. எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..

ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.. புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பேச்சாளர் பத்மநாதன்.. 24ந்திகதி பிரபாகரனும்.. அவரது பிள்ளைகளும் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்கிற அறிவிப்பே..இத்தனைக்கும் காரணம்..அவரின் அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினர்..பத்மநாதன் விலைபோய்விட்டார் துரோகி என்றுவிட்டு அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அவசரமாக நெடுமாறன் அவர்களுடனும் வைகோடனும் தொடர்பு கொண்டு பிரபகரன் இறக்கவில்லை உயிரோடதான் இருக்கிறார் என்று ஒரு அறிவிப்பை விடவைக்கின்றனர்.

வழைமை போலவே அதிகமாய் உணர்ச்சி வசப்படும் வை.கோ அவர்கள் இந்த விடயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பத்மநாதனின் இந்த அறிவிப்பு துரோகத்தனமானது என்று ஒரு வசனத்தையும் சேர்த்தே சொல்லி விட்டார்.. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்களே தவிர புலிகளின் பேச்சாளர்களோ உறுப்பினர்களோ அல்ல..இவற்றுக்கிடையில்.. யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்..

Prabaharan_Anjaliபிரபாகரனிற்காக அஞ்சலிநிகழ்வு செய்த ஜி.ரி.வி. என்கிற தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள். (அவர்கள் மிரட்டப்படுவது இது முதல்தடைவையல்ல) ஜி. ரி்வியும்..எதற்கு வம்பு என்று .. பிரபாரனிற்கான அஞ்சலி நிகழ்வினை இடைநிறுத்தியது..சரி இனி இவர்களிற்கு யார்தான் வந்து உறுதிப்படுத்தவேண்டும்.. இறந்து போன பிரபாகரனே திரும்பவந்து நான் இறந்துவிட்டேன் நம்புங்கடா.. என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா??அப்படி நடந்தாலும் பிரபாகரனும் துரோகியாக்கப்படுவார்.. 34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினைநடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்கையரசோ அதன் கூலிகளோ அல்ல..

புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர். காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப் பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது. எதிர்பாராதவிதமாக புலிகளின் தலைமையில் அத்தனைபேருமே அழிக்கப்பட்டு விட்டதால்..இனி யாரிற்கும் கணக்கு காட்டத் தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்களிற்கும் கடவுள் ஒருநாள் வருவார் என்பதைப்போல பிரபாகரன் இருக்கிறார்.. ஒருநாள் வருவார்..என்று கதைவிட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாமென்று நினைத்தவர்களிற்கு. பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..புலிகள் இனி அரசியல் ரீதியான ஒரு போராட்டத்தினை முன்னெடுப்தற்கு வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிசியில் இறங்கிருக்கிறார்கள் என்கிற செய்தியாலும் இவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள் அப்படி ஒரு கட்டமைப்பு உருவானால் அவர்களிடம் தங்கள் கணக்குகள் சொத்துக்கள் பற்றிய விபரங்களையும் கையளிக்கவேண்டிவிடும் என்பதே இவர்களது பயம்..

சரி ஒரு வாதத்திற்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுவைத்தாலும்..புலிகளின் தளபதிகள் தங்கள் இறுதிக்கணம் வரையும் சட்டிலைற் தொலைபேசி வசதியுடன் உலகில்அத்தனை பகுதிகளிற்கும் தொடர்பு கொண்டபடியேதான் இருந்தனர்..இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்…பத்மநாதன் மற்றும் தயா மோகனது அறிக்கைகளால் உலகத்தமிழர்களது நிலை குழப்பமடைந்து அது ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளிற்கு தடையாக அமைந்து அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்றுகூட சிந்திக்கத்தெரியாமல் 34 ஆண்டுகால போராட்டத்தினை நடத்தியவரல்ல பிரபாகரன்…அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..

ஏனென்றால். 88ம் ஆண்டு இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய ஊடகங்கள் எழுதியதில் அது பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியபொழுது அன்று இந்தளவு தொழில் நுட்பவளங்கள் இல்லாதபொழுதும் பிரபாகரனின் 3 நிமிடங்கள் அடங்கிய பேச்சை பதிவுசெய்து போராளிகளால் மக்கள் கூடும் இடங்களில் சிறிய ரேப்றிக்காடர்களில் ஒலிக்கவிடப்பட்டு அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது..சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன் உயிருடன் இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..

ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம். வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிர்காலம் என்ன??? சிந்திப்பீர்களா??

இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து. ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிட முடியாது. எம்தலைவனிற்கு அஞசலி செய்யத்தடையாய் நிற்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு துரோகமும் வஞ்சகமும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும். உலகநாடுகளின் ஏமாற்று உறுதி மொழிகளினாலும் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் இறுதிநாட்கள் பற்றிய விரிவான அடுத்த பதிவொன்றுடன் சந்திக்கிறேன் நன்றி.

நன்றி : சாஸ்திரி புளொக்ஸ்பொட்.

ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்த‌ியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது : பழ.நெடுமாற‌ன்

pala-nedu-maran.jpg”ஐ.நா. சபை ம‌னித உ‌ரிமை‌க்குழு‌வி‌ல் இல‌ங்கை அரசு‌க்கு எ‌திராக கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு இ‌ந்‌தியா ஆதரவு அ‌ளி‌த்தது த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது” எ‌ன்று இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ”இல‌ங்கை‌யி‌ல் ஒரு ல‌ட்ச‌த்து‌க்கு மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி த‌மி‌ழ் ம‌க்க‌ள் ‌சி‌ங்க இராணுவ‌த்‌தினரா‌ல் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு கொலை‌க்கு ஆளா‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌‌க்‌கிறா‌ர்க‌ள்.  3 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ற்ப‌ட்ட ம‌க்க‌ளி‌ன் ‌வீடுக‌ள் கு‌ண்டு ‌வீ‌ச்‌சினா‌ல் அடியோடு தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டு, சொ‌ந்த ம‌ண்‌ணிலேயே அக‌திகளாக‌ ஆ‌க்கப்ப‌ட்டு இராணுவ முகா‌ம்க‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு தொட‌ர்‌ந்து ‌சி‌த்ரவதை செ‌ய்ய‌‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

25,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்து மரு‌த்துவ வச‌தி இ‌ல்லாம‌ல் இற‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். சமாதான‌ம் பேச வருமாறு இராணுவ‌த்‌தினரா‌ல் அழை‌க்க‌ப்ப‌ட்டு வெ‌ள்ளை‌க்கொடி ஏ‌ந்‌தி வ‌ந்த ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் நடேச‌ன், பு‌லி‌த்தேவ‌ன் உ‌ள்பட அவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறா‌ர்க‌‌ள்.

இ‌வ்வாறு அ‌ப்ப‌ட்டமாக ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களை செ‌ய்த ராஜப‌க்சேவை போ‌ர் கு‌ற்றவா‌ளியாக ‌விசா‌ரி‌க்க வே‌ண்டு‌ம் என அமெ‌ரி‌க்காவு‌ம், மே‌ற்கு நாடுகளு‌ம் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு எ‌திராக இ‌ந்‌‌தியா வா‌க்க‌ளி‌த்து அதை தோ‌ற்கடி‌த்‌திரு‌ப்பது த‌மிழ‌ர்களு‌க்கு பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இது வெ‌ந்த பு‌ண்‌ணி‌ல் வே‌ல் பா‌ய்‌ச்சுவதாக உ‌ள்ளது.

இல‌ங்கை‌க்கு ‌மிக அரு‌கி‌ல் இரு‌க்க‌க்கூடிய ஒரே நாடான இ‌‌ந்‌தியாவு‌க்கு இ‌ந்த உ‌ண்மைக‌ள் தெ‌ரியாம‌ல் இரு‌க்க முடியாது. எ‌‌ல்லா உ‌ண்மைக‌ளு‌ம் தெ‌ரி‌ந்து‌ம் மனசா‌ட்‌சி‌க்கு எ‌‌திராக இ‌ந்‌தியா ‌சி‌ங்கள வெ‌றி அரசு‌க்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டிரு‌ப்பதை த‌மி‌ழ்‌ச் சமுதாய‌ம் ஒருபோது‌ம் ம‌‌ன்‌னி‌க்காது. த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது. போ‌ர் கு‌ற்ற‌ம் பு‌ரி‌ந்த ராஜப‌‌க்சேவை பாதுகா‌‌ப்ப‌தி‌ன் மூல‌ம் அ‌ந்த கு‌ற்ற‌த்த‌ி‌ற்கு இ‌ந்‌‌தியாவு‌ம் உட‌ந்தையாக இரு‌க்‌கிறது எ‌ன்பதை உலக‌ச் சமுதாய‌ம் உண‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இ‌ந்‌திய அர‌சி‌ன் இ‌ந்த போ‌க்கை நா‌ன் வ‌ன்மையாக க‌ண்டி‌க்‌கிறே‌ன்” எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது: வைகோ

vaiko00001.jpgஐ.நா. சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளதன் மூலம் இந்திய அரசு இப்போது மீண்டும் ஒரு தவறை செய்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

ஈழத்தில் நடைபெற்ற துயரங்களுக்கு இந்திய அரசுதான் காரணம். துயரம் என்று நான் சொன்னதற்கு காரணம் இலங்கை தமிழர்களை கருவறுக்கும் இந்த செயலுக்கு இந்த அரசு துணை போகும்போது நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை தான் துயரம் என்றேன்.

இந்திய விடுதலைக்கு முதலில் போராடியது தென்னாடுதான். அந்த வீர சரித்திரம் இந்த மண்ணுக்கு உண்டு. அப்படிப்பட்ட இந்த மண்ணில் இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு சிறிய இடைவெளி. நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.

இ‌ந்‌திய அரசு இப்போது ‌மீ‌ண்டு‌ம் ஒரு தவறு செ‌ய்து‌ள்ளது. ஐ.நா.சபை‌யி‌ல் ந‌ட‌ந்த ஓ‌ட்டெடு‌ப்‌பி‌ல் இல‌‌ங்கை‌க்கு ஆதரவாக இ‌ந்‌தியா ஓ‌ட்டு போ‌ட்டு‌ள்ளது. உல‌கி‌ல் யாரு‌க்கு‌ம் ஏ‌ற்படாத கொடுமை த‌மிழ‌ர்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு இது த‌ற்கா‌லிக வெ‌ற்‌றிதா‌ன். அதுவு‌ம் இ‌ந்‌தியா உத‌வி செ‌ய்து ஆயுத‌ங்களை, ‌வீர‌ர்களை அனு‌ப்‌பியதா‌ல் ‌கிடை‌த்த வெ‌ற்‌றி.

கட‌ந்த 5 மாத‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் ஒரு ல‌ட்ச‌த்து 45 ஆ‌யிர‌ம் த‌மிழ‌ர்க‌ள் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மூ‌ன்றரை ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்பு இ‌ல்லாம‌ல் உ‌ள்ளன‌ர். இது இ‌ந்‌‌திய அர‌சி‌ன் துரோக‌ம். இ‌தி‌லிரு‌ந்து அவ‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌மீ‌ளுவா‌ர்க‌ள். முத‌‌லி‌ல் ‌பிரபாகர‌ன் த‌ப்‌பி ஓடு‌ம் போது சு‌ட்டதாக கூ‌றினா‌ர்க‌ள். அத‌ன்‌பிறகு உடலை க‌ண்டு‌பிடி‌த்ததாக கூ‌றினா‌ர்க‌ள்.

உ‌ண்மை‌யிலே ‌பிரபாகரனை இல‌ங்கை இராணுவ‌ம் சு‌ட்டு‌க்கொ‌ன்‌றிரு‌ந்தா‌ல் மரபணு சோதனை நட‌‌த்‌தி இரு‌க்கலாமே. இ‌ன்னு‌ம் ‌பிரபாகர‌ன் த‌ந்தை வேலு‌ப்‌பி‌ள்ளை உ‌யிரோடு இரு‌க்‌‌கிறா‌ர். அ‌ப்படி‌யிரு‌ந்து‌ம் மரப‌ணு சோதனை நட‌த்த ஏ‌ன் மு‌ன்வர‌வி‌ல்லை. ‌பிரபாகர‌ன் மறு‌ப்பு தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லையே எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். மறு‌ப்பு அ‌றி‌க்கை வெ‌ளி‌யிட அவ‌ர் எ‌ன்ன அர‌சிய‌ல் க‌ட்‌சியா நட‌‌த்து‌கிறா‌ர். அவ‌ர் குர‌ல் வெ‌ளியே வ‌ந்தாலே அவரை அ‌ழி‌க்க தயாராக இரு‌க்‌கிறா‌ர்க‌ள். எனவே நா‌ங்க‌ள் ஆரா‌ய்‌ந்து இ‌ந்த முடிவை வெ‌ளியே சொன்னோம். தே‌ர்த‌லி‌ல் பண‌ம் கொடு‌த்து வாக்குகளை வா‌ங்‌கினா‌ர்க‌ள். பண‌ம் கொடு‌ப்பதை யாரு‌ம் க‌ண்டி‌க்க‌வி‌ல்லை. தோ‌ற்று போன கவலை என‌க்கு து‌‌ளியு‌ம் ‌கிடையாது. இ‌தி‌லிரு‌ந்து த‌மிழக‌ம் ‌மீ‌ட்க‌ப்பட வே‌ண்டு‌ம். மு‌த்து‌க்குமா‌‌ர் உ‌ள்பட 14 பே‌ர் செ‌ய்த ‌தியாக‌ம் ‌வீ‌ண் போகாது. த‌மிழக‌‌ம் ‌விரை‌‌வி‌ல் ‌மீ‌ட்க‌ப்படு‌ம் என்றார்.