”ஐ.நா. சபை மனித உரிமைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே இந்தியா துரோகம் செய்து விட்டது” என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் சிங்க இராணுவத்தினரால் திட்டமிட்டு கொலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வீடுகள் குண்டு வீச்சினால் அடியோடு தகர்க்கப்பட்டு, சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டு இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுகிறார்கள்.
25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகாயம் அடைந்து மருத்துவ வசதி இல்லாமல் இறந்திருக்கிறார்கள். சமாதானம் பேச வருமாறு இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்பட அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அப்பட்டமாக மனித உரிமை மீறல்களை செய்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்து அதை தோற்கடித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
இலங்கைக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரே நாடான இந்தியாவுக்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருக்க முடியாது. எல்லா உண்மைகளும் தெரிந்தும் மனசாட்சிக்கு எதிராக இந்தியா சிங்கள வெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதை தமிழ்ச் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே இந்தியா துரோகம் செய்து விட்டது. போர் குற்றம் புரிந்த ராஜபக்சேவை பாதுகாப்பதின் மூலம் அந்த குற்றத்திற்கு இந்தியாவும் உடந்தையாக இருக்கிறது என்பதை உலகச் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் இந்த போக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
பார்த்திபன்
ஏதோ இந்தியாவின் வாக்கால் தான் இலங்கை தப்பியது போல் நெடுமாறன் பிதற்றுகின்றார். இநதியா வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தாலும் தீர்மானம் மண்ணைக் கவ்வியிருக்கும். இன்றுவரை தமிழக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் நெடுமாறன், வைகோ போன்றவர்கள் செய்துவரும் துரோகத்துடன் ஒப்பிடுகையில் இதுவொன்றும் தவறாகத் தெரியவில்லை.
santhanam
வீரப்பனை தெரியுமா நெடுமாறன் சார் அதே தான்.
msri
இந்தியா மனிதகுலத்திற்கு துரோகம் செயகின்றது> நீங்கள் பிரபாகரனுக்கே (நேர்மையான அஞ்சலி செலுத்தாமல்) மாபெரும் துரோகத்தையே செய்துகொணடிருக்கின்றீர்கள!