ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு பார்வையாளாகளுக்கான வசதிகளுடன் கூடிய நவீன விளையாட்டரங்கு ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வாணபால முன்வைத்திருந்தார்.
45 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த விளையாட்டரங்குக்கு 535 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது,
மகரகமையில் வீடமைப்புத் திட்டம்.
இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமாக மகரகமையில் அமைந்துள்ள காணியில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.