நந்திமித்திரவை எம்.பி.யாக நியமிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது

மாத்தளை மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் பதிவிக்கு நந்திமித்திர ஏக்கநாயக்காவை நியமிப்பதை தடுக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாத்தளை மாவட்டத்தில் ஐ.தே.க.சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ரோகண பண்டாரநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஐ.தே.க.உறுப்பினரான நந்திமித்திர ஏக்கநாயக்க கடந்த பொதுத் தேர்தலில் அந்தக்கட்சியில் போட்டியிட்ட போதும் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் ஐ.தே.க. எம்.பி.அலிக் அலுவிகார காலமானதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக கூடுதல் விருப்பு வாக்குப் பெற்ற நந்திமித்திர ஏக்கநாயக்க அந்தப் பதவி தனக்கு வழங்கப்படவேண்டுமென கோரிவரும் நிலையில், அவருக்கு இந்தப் பதவியை வழங்கக் கூடாதென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பெறுபோறுகளின் அடிப்படையில் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவாரென தேர்தல் ஆணையாளர் சட்டமா அதிபர் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மாத்தளை மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றுள்ள நந்திமித்தர பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவாரென நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *