இலங்கையின் உள்விவகாரங்களில் பிரிட்டன் தலையிடக் கூடாது எனத்தெரிவித்து கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் 1000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தூதுராதலய அலுவலகத்தை கற்கலால் தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானியா வீணாக தலையிடுவதாகக் கூறி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பியதோடு கொடும்பாவிகளையும் எரித்தனர். இதைத் தொடர்ந்தும் தூதுராலயத்தின் இலச்சினை கழற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதோடு, கல்லால் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
