விடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு சீனாவினால் வழங்கப்பட்ட கனரக ஆயுதங்களே மூல காரணம் என புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பா இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்திக் கொண்டாலும்கூட, சீனா இரகசியமாக இலங்கைக்கு கனரக ஆயுதங்களை வழங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த இணையத்தளம் முல்லைத் தீவு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது. இத்தகவலை திவைன பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.