கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நிலவிவந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது இலங்கை மக்களின் வெற்றியாகும் என ஜே.வி.பி. பிரசார செயலாளரும், பாராளுமன்ற அங்கத்தவருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேக்கர், மலே ஆகிய அனைத்து இனத்தினதும் வெற்றியாகும். இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.