இலங்கையில் தற்போது ஒரு மனித பேரவலம் நிலவுகிறது: அமைச்சர் டேவிட் மிலிபான்ட்

david-maliband.jpg இலங்கையில் தற்போது ஒரு மனித பேரவல நிலை இருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. வின் தலைமைச் செயலாளருக்கு தாம் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

“இலங்கையில் மனித உயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் .அங்கு காப்பாற்றப்பட வேண்டிய உயிர்கள் இன்னமும் உள்ளன. மக்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டியுள்ளது. உணவும் குடிநீரும் விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆகவே இப்படியான பிர்ச்சினைகள் எல்லாம் இருக்கும் போது ஒரு பயங்கரவாத இயக்கததை விட அதிகமாக உயர்ந்த தரத்தைப் பேண வேண்டிய ஒரு ஜனநாயக அரசு, அந்த மக்களின் நலனில் முக்கிய பொறுப்புக்களை கொண்டிருக்க வேண்டும் .”என்றும் இலங்கை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *