புலிகளின் மேலும் 3 தலைவர்களது சடலங்கள் மீட்பு -பாதுகாப்பு அமைச்சு தகவல்

SL_Army_in_Final_Phaseபுலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெள்ளிமுள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு வடக்கே தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வரும் படையினர் இன்று காலை புலிகளின் மேலும் 3 முக்கிய தலைவர்களின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ,  பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இப்பிரதேசத்தில் இராணுவத்தின் 53ஆம் மற்றும் 58ஆம் படைப் பிரிவினர்  விசேட படையினருடனும் இராணுவக் கொமாண்டோக்களுடனும் இணைந்து தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *