May

May

இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்

fonseka-000.jpgஇராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டமைக்கான கொண்டாட்டங்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் நாட்டை மீட்பதற்கான இறுதிக்கட்ட போரில் பங்கு வகித்த இராணுவ வீரர்கள் மத்தியில் இராணுவத்தளபதி உரையாற்றினார்

இடம்பெயர்ந்தோருக்கு வைத்திய சேவை வழங்க முன்வாருங்கள். வைத்தியர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள்

Vanni_IDP_Camp வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வவுனியா மெனிக்பாம் பிரதேசத்திலுள்ள நிவாரணக் கிராமங்களில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து அங்குள்ளோருக்கு வைத்திய சேவைகளை வழங்க முன்வருமாறு சுகாதார அமைச்சின் அனர்த்த நிவாரணப் பிரிவு சகல வைத்தியர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் அனர்த்த நிவாரணப் பிரிவு வைத்தியர்களான துஷார ரணசிங்க மற்றும் ஈஷ்வர கொடிகார ஆகியோருடன் 0112684003, 0602056993 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. செயலாளா; இன்று இலங்கை விஜயம்

bankeemoon.jpgஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா. செயலாளர் இன்று நள்ளிரவு 11.25 மணிக்கு கட்டுநாயக்க சர்வவேதச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துக் கலந்துரையாட ஐ.நா. செயலாளர் நாளை அங்கு செல்லவுள்ளார் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். இதேவேளை,  பயங்கரவாதப் பிடியிலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கும்; முதலாவது சர்வதேசப் பிரதிநிதி ஐ.நா. செயலாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கனகரத்தினத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: இரா.சம்பந்தன் தகவல்

kanagaratnam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து ஓமந்தைப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

பிரபாகரனின் மரண சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை உறுதி:இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

narayanana.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிறு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரபாகரனின் அடையாளம் தொடர்பாக பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கிளப்பப்படுகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மரபணுச் சோதனைக்கு அன்றேல் அதிலும் தெளிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதா? என இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், “இலங்கை அரசாங்கமானது பகிரங்கமான உறுதிமொழியை வழங்குகின்ற நிலையில் நாம் அதனை ஏற்போம். இருந்தும் நாம் இலங்கை அரசாங்கத்தின் மரணச் சான்றிதழுக்காக காத்திருப்போம். அதன் மூலமாக ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மூடிவிட முடியும். இதற்கு மேலாக எம்மால் எதையும் செய்யமுடியாது. இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுகளின் போதும் நாம் வினவியிருந்தோம். இலங்கை ஜனாதிபதியின் பிரசன்னத்தின் முன்பாக கூட நாம் இதனைக் குறித்து கேள்வியெழுப்பி இருந்தோம். இதன்போது பிரபாகரன் தொடர்பான உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்” என்றார்.

மன்மோகன் 2வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கிறார்

manmohan_soniya.jpgபிரதமராக 2வது முறையாக இன்று மன்மோகன் சிங் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டு நடைபெறுகிறது.

2வது முறையாக மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி , உள்துறைக்கு ப.சிதம்பரம், பாதுகாப்புக்கு ஏ.கே.அந்தோணி, வெளியுறவுத்துறைக்கு கமல்நாத், மனித வளத்துறைக்கு கபில் சிபல், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படக் கூடும்.

“உதயன்”ஆசிரியர் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்

uthayan_logo.gifதாம் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து “உதயன்”,”சுடர் ஒளி”பத்திரிகைகளின் ஆசிரியர்  ந.வித்தியாதரனினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று வாபஸ் பெறப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அசேõக சில்வா, சலீம் மர்சூக், பி.ஏ.இரத்னாயக்கா ஆகியோர் முன்னிலையில் இந்தமனு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. தாம் விடுதலை செய்யப்பட்டிருப்பதால் இந்த மனுவைத் தொடர்வதற்குத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து மனுதாரர் அனுப்பிய கடிதம் அவரது சட்டத்தரணியால் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது.

இதேசமயம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வித்தியாதரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து முற்றாகப் பரிசீலித்து முடிவு செய்யும் விவகாரம் பொலிஸ் மா அதிபரின் பரிசீலனையில் இருப்பதால், அதற்குத் தேவையான நடவடிக்கையை அவர் எடுப்பதற்கு இடமளித்து உயர்நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவின் அனுசரணையுடன் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார். 

ஒன்றுவிட்ட ஒருநாளைக்கு பயணிகள் கப்பல் சேவை

green-ocean2.jpg
காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வழமை போல் ஒன்று விட்ட ஒருநாள் நடைபெறவிருக்கிறது. யாழ். அரச அதிபர் கே.கணேஷ் இத் தகவலைத் தெரிவித்தார். இந்த நடைமுறை இன்று முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று  பயணம் மேற்கொள்வதற்காக அனுமதிச்சீட்டினை பெற்றுக்கொண்டவர்களும் அவசர தேவையின் நிமித்தம் செல்ல இருப்பவர்களும் காலை 7.30 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் கேட்டுள்ளார். 

பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா,கனடா நாடுகளில் இன்று துக்கதினம் அனுஷ்டிப்பு

nothice.jpgசிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து பிரான்ஸ், டென்மார்க்,அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இன்று (மே 22)  புதன்கிழமை துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தேசிய படைவீரர்களை பாராட்டும் விழா

last-mulli.jpgதேசிய படைவீரர்களைப் பாராட்டும் விழா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையில் பாரா ளுமன்றத்திடலில் இடம்பெற வுள்ளது. சுமார் ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொள்வதுடன் பிற்பகல் மூன்று மணிக்கு இவ்விழா ஆரம்பமாகவுள்ளது.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பொரளை கெம்பல் பூங்காவிலிருந்து புறப்படும் மக்கள் பேரணி ஊர்வலம் பாராளுமன்றத் திடலைச் சென்றடைந்ததும் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிகழ்வையொட்டி கொழும்பு மற்றும் ஸ்ரீஜய வர்தனபுர கல்வி வலயத் திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள் ளதுடன் சில பாதைகள் மூடப்படுவதால் போக்குவரத் துக்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளில் விசேட போக்குவரத்து செயற்திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதற்கிணங்க கொழும்பு பிரதேசத்தில் பேலியகொடையிலிருந்து பழைய களனி பாலம் ஊடாக ஊறுகொடவத்தை வழியாக பொரளைக்குச் செல்லும் சகல வாகனங்களும் பேஸ்லைன் வீதி ஹிங்கம் சந்தியூடாகச் செல்ல முடியும். அங்கிருந்து சந்தர்ம வீதியூடாக சங்கராஜ மாவத்தை சுற்றுவட்டத்திற்கு வருவதுடன் அங்கிருந்து பஞ்சிகாவத்தை, மருதானைச் சந்தி, டீன்ஸ் வீதியூடாகப் பயணிக்க முடியும்.

பேஸ்லைன் வீதி புல்லர்ஸ்வீதி கனத்தையூடாக பயணிக்க வேண்டிய வாகனங்கள் கனத்தை சந்தியிலிருந்து கிங்ஸ் வீதி கேரி கல்லூரிவீதியூடாக புஞ்சிபொரல்லை மருதானைச் சந்தியூடாக கொழும்பு வடக்குப் பகுதிக்குள் பயணிக்க முடியும்.

பேஸ்லைன் வீதி கனத்தைச் சந்தியிலிருந்து ஹிங்கம் சந்தி வரையிலான குடியிருப்பாளர்கள் வாகனங்களுக்கு சம்பந்தப்பட்ட வீதியில் பயணிப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ள னர். கொட்டா வீதி ஆயுர்வேத வைத்தியசாலைச் சந்தியிலிருந்து பொரளைப் பக்கமாக எந்தவொரு வாகனமும் செல்வாக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அதேவேளை, கொட்டாவீதி பொரளைச் சந்தியிலிருந்து ராஜகிரிய அப்பகுதியில் குடியிருப்போரின் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொல்துடுவ வீதியிலிருந்து பாராளுமன்ற வீதி ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டம் வரையிலான வீதி இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மூடப்படவுள்ளது. பெலவத்தையிலிருந்து பாராளுமன்ற சந்தி வரையிலான வீதிகளும் முற்றாக மூடப்படுமெனவும் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, படையினரை வாழ்த்தும் வைபவங்கள் நேற்று பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களிலும் இடம்பெற்றதுடன் யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.