வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வவுனியா மெனிக்பாம் பிரதேசத்திலுள்ள நிவாரணக் கிராமங்களில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்து அங்குள்ளோருக்கு வைத்திய சேவைகளை வழங்க முன்வருமாறு சுகாதார அமைச்சின் அனர்த்த நிவாரணப் பிரிவு சகல வைத்தியர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் அனர்த்த நிவாரணப் பிரிவு வைத்தியர்களான துஷார ரணசிங்க மற்றும் ஈஷ்வர கொடிகார ஆகியோருடன் 0112684003, 0602056993 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.